search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens siege"

    • சுப்பிரமணியபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.
    • விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என கூறி பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் கிராமத்தில் தனியார் பீடி கம்பெனி இயங்கி வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களான ராம சந்திரபட்டணம், வென்னியூர், சுப்பிரமணியபுரம், திருமலா புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பீடி கம்பெனி நிர்வாகம் விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என கூறியும், தரமான பீடி இலைகள் மற்றும் தூள் வழங்கவில்லை என கூறியும் பெண்கள் கடையின் முன்பு திரண்டனர்.

    சுமார் 1 மணி நேரமாக முற்றுகை போராட்டம் நீடித்த நிலையில் பீடி தொழிலாளர்களுடன் பீடி சங்க மாநில குழு உறுப்பினர் கற்பகவல்லி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மணிகண்டன், பீடி சங்க மாவட்ட தலைவர் குருசாமி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் தங்கம், பீடிசங்க மாவட்ட செயலாளர் மகாவிஷ்ணு, ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் பம்பில் தண்ணீர் விடாமல் தடுப்பதாக புகார்
    • சமரச பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களா மேடு பகுதியில் சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் பம்ப் போடப்பட்டது.

    அந்த குடிநீர் பம்பை அதே பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போடப்பட்ட குடிநீர் பம்பை பயன்படுத்திக் கொண்டு வேறு யாருக்கும் அந்த குடிநீர் பம்பில் தண்ணீர் விடாமல் சொந்தம் கொண்டாடி வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் நேற்று ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்க ளுடன் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலு வகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்பகுதி பொது மக்களுக்கு அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க படும் என கூறி சமரச பேச்சு வார்த்தை ஈடுபட்டதின் பேரில் அங்கிருந்து பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • 100 நாள் வேலை வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோசூர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை தர மறுப்பதாக கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அரக் கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் முனிசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தரமான முறையில் தரைபாலத்தை கட்டி தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 100 பேர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் ஈசா பெரிய ஏரியின் உபரி நீர் செல்லும் ஓடை கால் வாயின் மேல் ஒரு சிறிய பாலம் அமைக்கும் கட்டு மானப்பணி நடைபெற்று வருகிறது.

    தரைப்பாலத்தின் கட்டு மானப்பணியில் இரும்பு கம்பிகளை பயன்படுத்தாமல் வெறும் சிமெண்ட், மணல் ஆகிவற்றை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தி வருவதாகவும், பாலத்தின் பக்கவாட்டு சுவரை தரமற்ற முறையில் கட்டுவதாகவும் புகார் எழுந்து உள்ளது.

    இந்த நிலையில், பாலத்தில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்தி விட்டு, இரும்பு கம்பிகளை கொண்டு தரமான முறையில் பாலத்தை கட்டிட வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 100 பேர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.

    ஆனால் கோரிக்கை மனுவை பெற்றுக்கொள்ள அலுவலகத்தில் யாரும் இல்லாததால் சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த வரிதண்டலர் ரங்கநாதனிடம் தங்களது மனுவை கொடுத்து விட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    திண்டுக்கல் நகரில்தொடரும் குடிநீர் பிரச்சனையால் 15-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் பழைய குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஜிகா பைப் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போராட்டம், மறியல், முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    15-வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என கூறி ஏராளமான பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் மாரியப்பன் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எம்.வி.எம். நகர், அண்ணா நகர், ஆர்.எம்.காலனி, பழையது மற்றும் புதிது, சந்தை பகுதி, சவேரியார் பாளையம், பூச்சிநாயக்கன்பட்டி, குள்ளனம்பட்டி, பழைய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஆர்.எஸ்.ரோடு, ரவுண்டு ரோடு, மலைக்கோட்டை, குடகனாறு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்குள் பணிகள் நிறைவுற்று தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்ச முடியாது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என்று கூறினார். #tamilnews
    100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கேட்டு காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே கம்பிக்குடி ஊராட்சியைச் சேர்ந்த கஞ்சமநாயக்கன் பட்டி, கம்பிக்குடி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக்கேட்டு காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    யூனியன் ஆணையாளர் கதிரேசனை சந்தித்து தங்களது கோரிக்கையினை தெரிவித்தனர். அப்போது கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வேலை வழங்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார்.

    மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் மரக்கன்று நடுதல், பன்னைக்குட்டை அமைத்தல், தனியார் இடங்களில் வரப்பு தடுத்தல் போன்ற பணிகளும் எடுத்து செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 5 விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டு அந்த விவசாயிகள் கிராமத்திற்கு தேவையான பணிகள் என்ன உள்ளது என கருத்து கேட்டு அதன் படி அந்த வேலைகளுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நூறு நாள் வேலை திட்டத்தில் எடுத்து செய்யப்படும் என்று முற்றுகையிட்ட பெண்களிடம் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், யோகேஸ் குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். யூனியன் ஆணையாளர் கதிரேசன் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தவுடன் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews
    ×