search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discovery"

    • வீரனின் தியாகத்தை போற்றும் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கட்டனூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வா ளர்களான செல்ல பாண்டி யன், ஆய்வாளர்.ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்ட போது பழமையான நடுகல்லை தெப்பக்குளத்திற்குள் கண்டறிந்தனர். இந்த நடுகல் பற்றி அவர்கள் கூறிய தாவது:-

    பொதுவாக நடுகல் எடுக்கும் மரபு நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே பின்பற்றிவருகின்றனர். போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைபவர்களுக்கும், பொதுகாரியம் கருதி உயிர் துறப்பவர்களுக்கும் அவரின் தியாகத்தை போற்றி நடுகல் எடுத்து வழிபடுவர். அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். அதில் வீரன் ஒருவன் தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டையுடனும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் இடைக்கச்சையும் அதில் குறுவாள் சொருகியபடியும் நின்ற கோளத்தில் வணங்கியபடி சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.

    சிற்பத்தின் மேலே கிடைமட்டமாக 14 வரிகளும், மேலிருந்து கீழாக இரண்டு வரிகளும் என 16 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொருள் அறிவதில் சிரமம் உள்ளது. ஆயினும் சில வரிகள் வாசிக்கும்படி உள்ளது. அவற்றில் வெகு தானிய (பகுதானிய) வருடம் என்று தமிழ் வருடங்கள் அறுபதில் 12 வது வருடமாக வரும் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனி மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இவ்வீரன் ஊரின் நன்மை பயக்கும் செயலில் ஈடுபட்டு இறந்திருக்க வேண்டும். அவரின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நடுகல்லை நிறுவி இருக்க வேண்டும். இந்நடுகல்லை தற்போது சீர்காழியை சேர்ந்தவர்களும்,இவ்வூர் பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர் என்றும் இந்நடுகல்லின் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • சண்டிகேசுவரர் சிற்பம் கருப்பணசாமி கோவிலில் இருளப்பசாமியாக வழிபட்டதாக தெரிகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கூடக்கோவில் கண்மாய் கரையில் அமைந்துள்ள கருப்பணசாமி கோவிலில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாண வர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அந்த கல்லூரியின் வர லாற்றுத்துறை பேராசிரிய ரும் பாண்டியநாடு பண் பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் கூடக் கோவில் சென்று கள ஆய்வு மேற் கொண்டனர். அப்போது 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேசுவரர் மற்றும் அய்யனார் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறுகை யில், இந்த சிற்பங்கள் பாண்டியர்கள் காலத்து கலைநயத்துடன் வடிவமைக் கப்பட்ட சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பம் ஆகும்.

    இந்த 2 சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சிவன்கோவில் இருந்திருக்க வேண்டும் என தெரியவருகிறது. சண்டிகேசுவரர் சிற்பம் கருப்பணசாமி கோவிலில் இருளப்பசாமியாக வழிபட்டதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விஜயநகர பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • இந்த நடுகற்களை இன்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவதாக இந்த கிராமத்தினர் கூறினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பிள்ளை யார்குளம் கிராமத்தில் பழமை யான சிலைகள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களான கவுதம், மலைமுத்து, பால கிருஷ்ணன், காளிமுத்து, தர்மராஜா போன்றோர் கண்டறிந்து கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப்பேரா சிரியர்களான தாமரைக்கண்ணன், ராஜபாண்டி ஆகியோருக்கு கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் உதவியுடன் நேரில் சென்று கள மேற்பரப்பாய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிலைகள் 500 வருடங்களுக்கு முற்பட்ட விஜயநகரப் பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

    அடுக்கு நிலைநடுகல்: இந்த வகை நடுகற்கள் போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் தியாகத்தைப் போற்றி அவர்கள் எந்த படைப்பிரிவினை சேர்ந்தவர் எவ்வாறு இறந்தார் என்ற விபர குறிப்போடு எடுக்கப்படும் ஒரு நடுகல் மரபாகும். இந்த அடுக்கு நிலை நடு கற்களை கொய்சாளர்கள் பின்பற்றும் கலைப் பணியாகும். தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு காலம் தொடங்கிய போது இந்த கலைபாணியும் வந்திருக்க வேண்டும். தற்போது நாங்கள் கண்டறிந்த அடுக்கு நிலை நடுகற்கள் பிள்ளை யார்குளம் கிராமத்தில் மூன்று கற்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஒரு சதிகல்லும், வில்வீரன் சிற்பமும் இடம்பெற்றுள்ளன.

    அடுக்குநிலை நடுகல் ஒன்று: இங்கு காணப்படும் அடுக்கு நிலை நடுகல் 5 அடி உயரமும் இரண்டடி அகலமும் முக்கால் அடி தடிமனும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்லில் 3 புறம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முதல் பக்கத்தில் பல்லக்கில் ஒருவர் வணங்கியபடி அமர்ந்துள்ளார். இரு பல்லக்குத்தூக்கிகள் பல்லக்கை சுமந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. இவர் அரசருக்கு இணையானவராக கருதலாம். இதற்கு கீழ் அடுக்கில் ஒருவர் காளை மீது அமர்ந்து முரசுகொட்டும்படி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காளைமீது அமர்ந்து முரசு ஒலிக்கும் சிற்பம் மிகவும் அபூர்வமான ஒன்றாகும். காளையின் கழுத்தில் மணிகள் இடம்பெற்றுள்ளது. நன்கு நீண்ட வளைந்த கொம்புகளும் காணப்படு கிறது. காளையின் முன்பாக இருவர் எக்காளம் கொண்டு ஒலி எழுப்பியவாறு செல்லும்படி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் இரண்டாவது பக்கத்தில் மேலிருந்து கீழாக 5 அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    முதல் அடுக்கில் வில்வீரன் ஒருவன் வில்லில் அம்பை வைத்து எய்யுமாறு செதுக்கப்பட்டுள்ளது. வில்லிற்க்கு மேலும் கீழுமாக இரண்டு மாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்க்கும்போது இவ்வீரன் வாழ்ந்த காலத்தில் எதிரி நாட்டினர் தனது நாட்டு ஆநிரைகளை கவர்ந்து சென்றிருக்க வேண்டும் அதனை மீட்க சென்ற வில்வீரன் அப்போரில் இறந்திருக்க வேண்டும்.

    இதன் காரணமாக நடுகல் எடுத்திருக்கிறார்கள் என்று கூறலாம். இதற்கு கீழ் உள்ள அடுக்கில் குதிரை வீரன் குதிரையில் வாளேந்தியபடி வடிக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கிற்கு கீழ் மூன்று அடுக்குகள் இடம் பெறுகின்றன. அவற்றில் கீழே வீரர்கள் ஊன்றிய வாளை பிடித்தபடியும் அருகில் அவர்களது மனைவிகள் நின்றபடியும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பக்கம் 5 அடுக்குகளாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் குதிரைவீரன் வாளேந்தியபடியும் அதற்கு முன்பு மூன்று வீரர்கள் வணங்கியபடியும் மூவரின் காலடியில் வாள்கள் ஊன்றியபடியும் செதுக்கப்பட்டுள்ளது.

    2-வது அடுக்கில் ஒரு யானையில் அங்கு சத்துடன் ஒருவர் அமர்ந்திருக்க பின்னால் ஒருவர் வாளேந்தியபடி அமர்ந்திருக்கிறார். யானைக்கு முன்பு மூன்று வீரர்கள் வணங்கியபடியும் வாள்கள் அவரவர் அருகே செதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடுக்கில் இருந்து ஐந்தாவது அடுக்கு வரை குதிரைவீரர்கள் வாளேந்தியபடியும் அவர்க ளுக்கு முன்பாக 3 வீரர்கள் வணங்கியபடி நிற்க போர்வாள்கள் அவரவர் அருகே செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றைப் பார்க்கும் போது குதிரைப்படையிலும், யானைப்படையிலும் உள்ள வீரர்கள் இறந்ததன் காரணமாக இந்த நடுகல் எடுத்திருக்கலாம்.

    அடுக்கு நிலை நடுகல் இரண்டு: இந்த கல்லில் இரண்டு அடுக்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கல் நான்கு அடி உயரமும் இரண்டடி அகலமும் ஒரு அடி தடிமனும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. முதல் பக்கத்தில் முதல் அடுக்கில் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்க இரு மாடுகள் இசையில் மயங்கி அருகில் நிற்கும்படியும் கிருஷ்ணரின் மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் இடம்பெற்றுள்ளது. அடுத்த கீழ் அடுக்கில் இரு ஆண்கள் வழங்கியபடியும் ஒரு பெண் அருகில் நிற்கும்படியும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பக்கத்தில் மேலடுக்கில் கருடன் நின்ற கோளத்தில் பாம்பை பிடித்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அடுக்கில் இருவர் வழங்கியபடி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

    அடுக்கு நிலை நடுகல் மூன்று: இந்த நடுகல் நான்கடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது வீரர்களில் ஒருவரை தவிர அனைவரும் வணங்கியபடி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் வாளேந்தியபடி செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லும் போரில் இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நினைவு அடுக்கு நிலை நடுகல்லாகும்.

    வில்வீரன்சிற்பம்: இந்த சிற்பம் இரண்டரை அடி உயரத்துடன் காணப்படுகிறது. வீரன் ஒருவன் இடதுபுறம் சரிந்த கொண்டையுடன் மார்பில் ஆபரணங்களுடனும் முதுகுப்புறம் அம்புரான் கூட்டினை தாங்கியபடியும் இடது கையில் வில்லினை பிடித்தபடியும் வலது கையில் அம்பினை எய்யும் நிலையில் இருக்கும்படி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சதிகல்: இங்கு ஒரு சதிகல்லும் காணப்படுகிறது. இந்த கல் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் சற்றே மேல் நோக்கிய கொண்டையுடன் நீண்ட காதுகளில் காதணியும், மார்பில் ஆபரணங்களும், கைகளில் வளைகாப்புகளும், இடையில் இடைக்கச்சையும் காலில் வீரக்கழலையும் அணிந்தபடி நின்ற கோலத்தில் சிற்பம் வணங்கியபடி செதுக்கப்பட்டுள்ளது. வலது கையின் இடையில் போர்வாள் மேல் நோக்கி செதுக்கப்பட்டுள்ளது. அருகில் அவரது மனைவி மலர் செண்டுடன் நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. தனது கணவன் உயிரிழந்த துக்கம் தாளாமல் கணவனின் சுதையில் தனது உயிரை துச்சமென எண்ணி உடன்கட்டை ஏறி உயிர் துறந்ததன் நினைவாக இந்த நடுகல் எடுத்திருக்கலாம்.

    செங்கல் கட்டுமானம்: மேற்கண்ட சிற்பங்கள் காணப்படும் இடத்தில் ஒரு பழமையான செங்கல் கட்டுமானம் காணப்படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் மேற்கண்ட நடு கற்கள் எடுத்து வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக கட்டுமான சுவர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு காணப்படும் சிற்பங்க ளைப் பார்க்கும்போது விஜயநகர பேரரசு காலத்தில் இந்த பகுதியில் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் படைப் பிரிவு களில் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த நடுகற்களை இன்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவதாக இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர் என்று அவர்கள் கூறினார்.

    • கொண்டனேரி கண்மாயில்‌ 17-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மடத்துப்பட்டி அருகே அமைந்துள்ள கொண்டனேரி கண்மாயில் கல் சிற்பங்கள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினித் தகவல் அளித்தார். அதன் அடிப்ப–டையில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வர–லாற்றுத்துறை உதவிப்பேரா–சிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ.கந்தசாமி அப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்குள்ள கண்மாயில் 2 நடுகல் சிற்பங்க–ளும், ஒரு சதிக்கல்லும் கல் மேடையமைத்து வரி–சையாக நிறுத்தி வைக்கப் பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கல் சிற்பங்கள் அனைத் தும் கி.பி. 17 ஆம் நூற்றாண் டைச் சார்ந்ததாக கருதப்ப–டுகிறது. வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்க–ளுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகல் மற்றும் வீரன் இறந்தவுடன், மனை–வியும் சேர்ந்து தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ் வுக்காக எடுக்கப்பட்ட சதிக் கல்லும் காணப்படுகிறது.

    முதல் நடுகல் சிற்பம் கூம்பு வடிவில் மாடக்கோ–வில் போன்று வடிவமைத்து மழை, வெயில் தாக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் சிற்பத்தில் வீரன் நின்ற நிலையில் தனது இடது கையில் ஈட்டியை பிடித்துள்ளது போன்றும், வலது கையில் இடுப்பில் உள்ள வளைந்து நெளிந்த குறுவாளை கை வளை–யத்தில் இணைத்துள்ளது போன்றும் காட்டப்பட்டுள் ளது.

    வீரனின் வலது பக்க தலைக்கொண்டை அலங்கா–ரம், வீரனின் உருண்டு திரண்ட கண்களும், முறுக்கு மீசையுடனும், பனை ஓலை காதணிகளை அணிந்தவா–றும் சிற்பம் காணப்படுகிறது.

    இரண்டு காதுகள் மற்றும் கைகளுக்கு இடையில் துவாரங்கள் கொண்டு புடைப்புச் சிற்பமாக செதுக் கப்பட்டுள்ளது. கழுத்தணி–கலன்களும், கைகாப்பு, கைப்பட்டைகளும், இடை ஆடை குஞ்சம் வைத்து மடித்து கட்டப்பட்டுள்ளதும், இரண்டு கால் மூட்டுகளின் பாதுகாப்புக்காக மூட்டுக் கவசமும், காற்சிலம்பு அணிந்துள்ளதையும் இச்சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

    இரண்டாவது நடுகல் சிற்பத்தின் மேல் பகுதி இரண்டடுக்கு மாடகோபுர அமைப்பு போன்று வடிவ–மைக்கப்பட்டு கீழே வீரன் ஒருவன் நின்ற நிலையில் குத்தீட்டியின் மேல்பகுதியை தனது வலது கை கொண்டும், கீழ்ப்பகுதியை இடது கை கொண்டும் பிடித்து தரை–யில் ஊன்றியபடி சிற்பம் அமைந்துள்ளது.

    வீரனின் இடது பக்க தலைக் கொண்டையலங்கா–ரம், நீண்ட காதணிகள், கழுத்தணிகள், கைக்காப்பு, பூ மாலை அலங்காரம், மார்பில் சன்ன வீரம், இடை ஆடையில் இடுப்பு பெல்ட் இணைத்து கட்டப்பட்டு குஞ்சம் தொங்கிய நிலையில், காற்சிலம்புடன் வீரனின் சிற்பம் வடிவமைக்கப்பட் டுள்ளது. மூன்றாவதாக, சதிக்கல் சிற்பத்தில் வீரனும், அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் வடிவ–மைக்கப்பட்டுள்ளது.

    வலதுபுறத்தில் அமர்ந் துள்ள வீரன் வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி வைத்துள்ள நிலையில், வீரனின் வலது கையில் வாள் ஒன்றை கையில் உயர்த்திப் பிடித்து இருப்பதும், இடது கையை கீழே மடக்கி வைத்திருப்பது போன்றும், அருகில் அமர்ந் துள்ள வீரனின் மனைவியின் வலது கையில் அல்லி மலரை உயர்த்திக் காட்டி இருப்பதும், இடது கையில் மங்கலப் பொருள் ஒன்றை வைத்திருப்பது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள் ளது.

    சிற்பத்தின் மேற்பகுதியில் மூன்று கர்ணக்கூடுகளில் சிங்கமுகங்கள் காட்டப் பட்டுள்ளது. இம்மூன்று சிற்பங்களையும் கருப்புசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கண்மாயில் நீர் நிரம்பி இருக்கும் பொழுது சிற்பங் கள் நீருக்குள் மூழ்கி இருந் துள்ளது. இங்கு காணப்படும் வீரக்கல் மற்றும் சதிக்கல் சிற்பங்களைக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன் வீரத்தை வெளிப்படுத்தும் வீர நிகழ்வுகள் இப்பகுதியில் நடந்துள்ளதை அறிய முடி–கிறது.

    ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நடுகற்கள், சதிச்சிற்பம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே பல சதிக்கல் சிற்பங்கள் காணப்படுவதால் பழங்காலத்தில் மக்களின் வாழ்வியல் சார்ந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கந்தசாமி கூறினார்.

    • கீழடியில் 183 தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையின ரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட் கள் இதுவரை கண்டறி யப்பட்டுள்ளது.

    மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படு கிறது.9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.
    • கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது.

    9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஆங்கிலேயர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் செந்திவிநாயக புரத்தில் அருப்புக்கோட்டை செல்லும் பழைய சாலையில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல், முத்து முனியசாமி யாக வழிபாட்டில் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவ னத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கண்டறிந்தனர்.

    இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

    ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலங்களில் மைல் கற்களில் ஊர்ப்பெயர் களை ஆங்கிலம், தமிழிலும், தூரத்தை ரோமன், தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்துள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்க ளில் இத்தகைய மைல் கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார்.

    விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் விருதுபட்டி என ஆங்கிலத்திலும், விருது பட்டி என தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர் ெரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், '௧' என்ற தமிழ் எண்ணிலும் மைல் கல்லில் குறித்துள்ள னர். ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கல்லில் கருப்பு பெயிண்ட் அடிக்கப் பட்டுள்ளதால் இதன் எழுத்துகள் தெளி வாக இல்லை. இக்கல் வழிபாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக உள்ளது.

    ஒருங்கிணைந்த ராமநா தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து 1915-ல் நகராட்சி யான விருதுநகர், 1923-க்கு முன் விருதுபட்டி என அழைக்கப்பட்டது. மதுரை யில் இருந்து தூத்துக்குடி வரை ெரயில் பாதை போட்டபோது, 1876-ல் விருதுபட்டியில் இரயில் நிலையம் வந்தது. இதனால் இவ்வூர் முக்கிய வர்த்தக நகரானது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இது உதவியது. இப்போதும் கூட இவ்வூர் ரயில் நிலைய சுருக்கக் குறியீடு விருதுப்பட்டியைக் குறிக்கும் வி.பி.டி. தான்.

    அருப்புக்கோட்டையின் உற்பத்திப் பொருட்கள் வண்டிகள் மூலம் விருது பட்டி ெரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆயின. பொருட்களை விரைவாக கொண்டு செல்ல அருப்புக் கோட்டை யிலிருந்து சரளைக்கல் சாலை போடப்பட்டபோது, இம்மைல்கல் வைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது வைக்கப்படும் மைல்கல் போல இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டு சாலையைப் பார்த்தவாறு நிறுவப்பட்டிருக்கும்.

    மேலும் விருது என்ற சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம், மரபுவழி என பல பொருள்கள் உண்டு. முல்லை நில ஊர்கள் பட்டி எனப்படும். பெருங்கற்காலம் முதல் காசி, கன்னியாகுமரி பெருவழிப் பாதையில், வெற்றிச் சின்னமாக, வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வூர் விருதுபட்டி என பெயர் பெற்றதாகக் கருதலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி இவ்வூர் 'விருதுகள்வெட்டி' என முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், ஆங்கிலே யர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தபோது, 1869-ல் வெளியிடப்பட்ட நூலில் விருதுப்பட்டி என்றே இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மைல்கல்லின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.1875க்கு முன் நடப்பட்டதாகக் கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழங்கால கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய சின்னங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர்.
    • ஆய்வினை முனைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் ராஜசுந்தரம் மற்றும் பொறுப்பாளர்கள் மேற்கொண்டனர்.

    உடுமலை:

    உடுமலை தாராபுரம் சாலையில் துங்காவி – பாறையூர் பகுதியில் சுமைதாங்கிக் கல் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் சீலநாயக்கன்பட்டியைச் சார்ந்த கோபால் என்பவரின் மகள் நினைவாக இந்த சுமைதாங்கிக் கல் வைக்கப்பட்டு இருப்பதாக கல்வெட்டு எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.

    இந்த சுமைதாங்கி கல் முற்காலங்களில் ஒவ்வொரு ஊரின் முகப்பிலும், அல்லது இறுதியிலும் அந்தப்பாதையில் சுமையோடு செல்லும் வணிகர்கள், சுமைதூக்கிச்செல்வோர், மற்றும் சுமையோடு செல்லும் பெண்கள் தன்னுடைய சுமையினை இறக்கி வைக்க இயலாமல் நடந்து செல்லும்போது அதே அளவிற்கு உயரமாக அதாவது நான்கு அல்லது ஐந்தடி உயரத்தில் சம அளவில் பலகைக்கல் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பலகைக்கல்லில் தன்னுடைய சுமையினை இறக்கி வைத்து இளைப்பாறிச்செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

    இந்த சுமைதாங்கிக் கல்லும், சுமைதாங்கிக்கல்களின் தேவையும் தற்காலத்தில் தேவையில்லாமல் இருந்தாலும், பழங்காலத்தில் நம் முன்னோர்கள் மற்றவர்களின் மனதறிந்து, சுமையோடு செல்லும் பெண்களுக்காகவும், மற்ற வணிகர்களுக்காகவும் இது போன்று சுமைதாங்கிக்கற்களைஅமைத்திருந்தனர். இன்று அந்த சுமைதாங்கிக் கற்களின் தேவையும் பயன்பாடும் இல்லாவிட்டாலும் அதனைப்பற்றிய புரிதல்களும் நம் முன்னோர்களின் ஈகை மனப்பான்மையினையும் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இது போன்ற பழங்கால கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய சின்னங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர்.

    இந்த சுமைதாங்கிக்கல் ஆய்வினை முனைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் ராஜசுந்தரம் மற்றும் பொறுப்பாளர்கள் மேற்கொண்டனர்.

    • முதலாம் ராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய வேதக் கல்லுாரி இயங்கியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
    • இச்சிலை முதலாம் ராஜேந்திரன் காலத்தில் கி,பி.1011 -ம் நுாற்றாண்டை சேர்ந்தது ஆகும் .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே எண்ணாயிரம் கிராமம் வரலாற்று சிறப்பிற்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும் . இக்கிராமத்தில் சோழர் காலத்திய அழகிய நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு முதலாம் ராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய வேதக் கல்லுாரி இயங்கியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    இக்கிராமத்தில் தட்சிணாமூர்த்தி குளம் அமைந்துள்ள பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் ஆய்வு மேற்கொண்ட போது விளை நிலங்களுக்கு நடுவே மரங்கள் ,புதர்கள் மண்டியிருக்கும் திட்டு போன்ற பகுதியில் அழகிய தட்சிணாமூர்த்தி சிலை இருப்பதை கண்டறிந்தார்  இது பற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் நிருபரிடம் கூறியதாவது:-  10-ம் நூற்றாண்டு  எண்ணாயிரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து தட்சிணாமூர்த்தி சிலையை கண்டறிந்தேன். இந்த சிலை இருந்த பகுதியில் 

    • சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதிகளில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன.
    • சேலம் மாவட்டம் அறுநூற்று மலை பகுதியில் புலிகுத்தி வீரன் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சைமலை என மலைகள் சூழ்ந்த மாவட்டமாகும். இதில் கல்வராயன் மலையின் தொடர்ச்சியாக வாழப்பாடி பகுதியில் அமைந்துள்ளது அருநூற்றுமலை. அருநூற்று மலையில் ஆலடிப்பட்டி, பெலாப்பாடி, சிறுமலை ஆகியவை உள்பட 8 கிராமங்கள் உள்ளன.

    பெரும்பாலான மலைக்கிராமங்களில் பழங்குடி மக்களே வசித்து வருகின்றனர்.பழமை மாறாமல் சில வழக்கங்களை இன்றளவும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.ஆங்காங்கே சில ஊர்களில் ஊருக்குப் பொதுவான இடங்களில் வழிபாட்டில் எண்ணற்ற பழங்கால நடுகற்களும், புதிய கற்கால கருவிகளும் உள்ளன.

    பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன. இந்த மலையில் சில இடங்களில் அடர்ந்த காடுகள் சில இடங்களில் காணப்படுகின்றன.அரியவகை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் புகலிடமாய் கல்வராயன் மலை உள்ளது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை, புலி போன்றவை அதிகளவில் காணப்பட்டுள்ளன என்று ஆங்கிலேயர் கால ஆவணமான "இந்தியன் கெசட்டியர்" சான்று கூறுகிறது.

    இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவைச் சேர்ந்த ஏ.டி.மோகன், பெரியசாமி, ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன், முத்தையன் , நித்தியானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த நடுகற்களைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை தெரிவித்தனர்.

    இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

    16,17-ம் நூற்றாண்டுகளில் இங்கே விலங்கு- மனித மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.குறிப்பாக புலிகள் மக்களைத் தாக்க முயலும்போது, புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வீரத்துடன் சண்டையிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு இங்கே நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன.

    வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் மரபு பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. அந்த வகையில் அருநூற்றுமலை, ஆலடிப்பட்டி கிராமங்களில் 16-ம் நூற்றாண்டு நடுகல்லொன்று காணப்படுகிறது. இதில் வீரனுக்கு வலது புறத்தில் நின்று கொண்டிருக்கும் ஆக்ரோஷமான புலி வீரனைத் தாக்குவது போலவும், அவ்வீரன் தனது இரு கைகளால் ஈட்டியைக் கொண்டு புலியைக் குத்துவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் தலையில் அழகிய கொண்டையும், காதணி மற்றும் சரபலி, ஆரம், காப்பு மற்றும் காலில் வீரக்கழல் போன்ற அணிகலன்களை அணிந்துள்ளான்.

    இதனை மக்கள் இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.

    மேலும் பெலாப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஒரு நடுகல் காணப்படுகிறது. இந்நடுகல்லில் வீரனுக்கு இடதுபுறத்தில் புலி ஒன்று வீரனை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது.வீரன் தனது இடது கையில் கட்டாரியை கொண்டு புலியின் வாயில் குத்துவது போன்றும், வலது கையில் ஈட்டியை கொண்டு புலியின் வயிற்றில் குத்துவது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த வீரனின் தலையில் அழகிய கொண்டை கட்டப்பட்டுள்ளது. காதணிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் போன்றவை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகும்.

    பொங்கல் பண்டிகையின் கரிநாளின்போது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் எண்ணற்ற இன்னும் பல வரலாற்றுச் சின்னங்களும், அவை குறித்த சுவாரசியமான தகவல்களும் வெளிவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பாப்பாபட்டி அருகே பழமை வாய்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
    • இங்குள்ள மக்கள் வளரி என்ற ஆயுதத்துடன் நெருங்கிய மற்றும் நீண்ட உறவினை கொண்டுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டிக்கு தாலுகா பாப்பாபட்டி அருகே உள்ள கிராமம் லிங்கப்பநாயக்கனூர். இந்த ஊருக்கு வடக்கில் நாகமலை தொடர் உள்ளது. இந்த மலையில் ஒரு குன்றின் மீது பரமசிவன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலிக்கு செல்லும் வழித்தடத்தில் மலை அடிவாரத்தில் நடுகல் ஒன்று தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், பட்டி அருண் குமார், சோலை பாலு ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுகல் சுமார் 4½ அடி உயரத்திலும் சுமார் 3½ அடி அகலத்திலும் உள்ளது.

    இந்த சிற்பத்தில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் காட்டப்பட்டுள்ளது .இதில் ஆணின் இடது கையில் வளரி, வளைத்தடியும், வலது கையில் வாளை உயர்த்திய நிலையிலும், அருகில் உள்ள பெண் சிற்பத்தின் இடது கையில் மலர் வைத்திருப்பது போலவும், இடது கை தொங்கிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளது.

    இதில் ஆண் சிற்பத்தில் தலையின் இடது புறம் கொண்டையும், பெண் சிற்பத்தில் தலைக்கு மேலே கொண்டையும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.ஆண் மற்றும் பெண் சிற்பங்கள் மேல் ஆடையின்றி இடைக்கு கீழே ஆடையுடனும் நேர்த்தியான அணிகலன்களும் காணப்படுகிறது. இந்த சிற்பம் தோற்றத்தின் அடிப்படையில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

    உசிலம்பட்டி பகுதியில் இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட நடு கற்கள் வளரியுடன் கரு மாத்தூர், கோட்டை ப்பட்டி, கள்ளப்பட்டி போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கருமாத்தூர் அருகே உள்ள கோவிலாங்குளத்தில் இன்றளவும் அங்குள்ள பட்டவன் சுவாமி கோவிலில் மாட்டுப்பொங்கல் அன்று கோவிலுக்கு வளரியை காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல இங்குள்ள குலதெய்வ கோயில்களில் சாமி பெட்டிகளில் வளரி வைத்து வழிபடும் வழக்கம் இந்த பகுதியில் இன்றளவும் உள்ளது. இங்குள்ள மக்கள் வளரி என்ற ஆயுதத்துடன் நெருங்கிய மற்றும் நீண்ட உறவினை கொண்டுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.

    • சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும் எனவும், அகழ்வாய்வு நடத்தும் போது தொன்மையான சிலைகள் சிற்பங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கம் சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றை பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும் எனவும், அகழ்வாய்வு நடத்தும் போது தொன்மையான சிலைகள் சிற்பங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிவலிங்கம் உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் நடராஜ் கூறுகையில், கடந்த 22 வருடங்களாக நான் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். அப்போது இது சிவலிங்கம் என்று எனக்கு தெரியாது. இது பாண்டியன் நட்ட கல் என்று தான் பலர் கூறி வந்தனர். 8 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து பார்த்த சிவனடியார் ஒருவர், இது சிவலிங்கம் என கூறினார். இதையடுத்து சிவனடியார்கள் இங்கு வந்து சிவலிங்கத்தை தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். 8-அடி உயரமுள்ள இந்த சிவலிங்கத்தை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராள மான சிவனடி யார்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தின் நடுவே இருந்த சிவலிங்கத்தை, பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு ஏதுவாக தோட்டத்திற்கு வெளியே வைப்பதற்காக சிவலிங்கம் இருந்த பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஜோதி மற்றும் போலீசார், தொல்லியல் துறை ஒப்புதல் இல்லாமல் சிவலிங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் சிவனடியார்களுக்கும், வருவாய்த்துறை, போலீசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தொல்லியல் துறையினரை வரவழைத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் சிவலிங்கத்தை எடுத்து மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

    ×