search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டுபிடிப்பு
    X

    150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டுபிடிப்பு

    • 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஆங்கிலேயர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் செந்திவிநாயக புரத்தில் அருப்புக்கோட்டை செல்லும் பழைய சாலையில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல், முத்து முனியசாமி யாக வழிபாட்டில் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவ னத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கண்டறிந்தனர்.

    இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

    ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலங்களில் மைல் கற்களில் ஊர்ப்பெயர் களை ஆங்கிலம், தமிழிலும், தூரத்தை ரோமன், தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்துள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்க ளில் இத்தகைய மைல் கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார்.

    விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் விருதுபட்டி என ஆங்கிலத்திலும், விருது பட்டி என தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர் ெரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், '௧' என்ற தமிழ் எண்ணிலும் மைல் கல்லில் குறித்துள்ள னர். ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கல்லில் கருப்பு பெயிண்ட் அடிக்கப் பட்டுள்ளதால் இதன் எழுத்துகள் தெளி வாக இல்லை. இக்கல் வழிபாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக உள்ளது.

    ஒருங்கிணைந்த ராமநா தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து 1915-ல் நகராட்சி யான விருதுநகர், 1923-க்கு முன் விருதுபட்டி என அழைக்கப்பட்டது. மதுரை யில் இருந்து தூத்துக்குடி வரை ெரயில் பாதை போட்டபோது, 1876-ல் விருதுபட்டியில் இரயில் நிலையம் வந்தது. இதனால் இவ்வூர் முக்கிய வர்த்தக நகரானது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இது உதவியது. இப்போதும் கூட இவ்வூர் ரயில் நிலைய சுருக்கக் குறியீடு விருதுப்பட்டியைக் குறிக்கும் வி.பி.டி. தான்.

    அருப்புக்கோட்டையின் உற்பத்திப் பொருட்கள் வண்டிகள் மூலம் விருது பட்டி ெரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆயின. பொருட்களை விரைவாக கொண்டு செல்ல அருப்புக் கோட்டை யிலிருந்து சரளைக்கல் சாலை போடப்பட்டபோது, இம்மைல்கல் வைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது வைக்கப்படும் மைல்கல் போல இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டு சாலையைப் பார்த்தவாறு நிறுவப்பட்டிருக்கும்.

    மேலும் விருது என்ற சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம், மரபுவழி என பல பொருள்கள் உண்டு. முல்லை நில ஊர்கள் பட்டி எனப்படும். பெருங்கற்காலம் முதல் காசி, கன்னியாகுமரி பெருவழிப் பாதையில், வெற்றிச் சின்னமாக, வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வூர் விருதுபட்டி என பெயர் பெற்றதாகக் கருதலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி இவ்வூர் 'விருதுகள்வெட்டி' என முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், ஆங்கிலே யர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தபோது, 1869-ல் வெளியிடப்பட்ட நூலில் விருதுப்பட்டி என்றே இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மைல்கல்லின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.1875க்கு முன் நடப்பட்டதாகக் கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×