search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi HC"

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. #INXMediaCase #KartiChidambaram #CBI
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

    இதனை அடுத்து, விசாரணை காவல் முடிந்து நீதிமன்ற காவலில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார். ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மார்ச் 23-ம் தேதி நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 
    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதற்கான அனுமதி அளித்தது யார்? என டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. #DelhiHC #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    டெல்லி கவர்னர் மாளிகையில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் 3 மந்திரிகள் கடந்த ஒருவார காலமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர குமார் ஜெயின் உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்ததால் அங்கிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    இந்நிலையில், டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது தொடர்பாக அரசின் சார்பிலும், கெஜ்ரிவால் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக தனிநபரின் சார்பிலும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சாவ்லா, நவீண் சாவ்லா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதற்கான அனுமதி அளித்தது யார்? என டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

    தர்ணா போராட்டம் நடத்த உங்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? நீங்கள் கவர்னரின் அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறீர்கள். போராட்டம் என்றால் அது கவர்னர் அலுவலகத்துக்கு வெளியேதான் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்பாக டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜேந்திர குப்தா, இன்று டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்குகளில் எல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, மறுவிசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #DelhiHC #Kejriwal

    ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மீது டெல்லி போலீசார் தொடுத்திருந்த சூதாட்ட வழக்கில் ஜூலைக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை அடுத்து, ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிசிசிஐ அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடைவிதித்தது.


    இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

    மேலும், இதர நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும், இதர நாடுகளில் சென்று விளையாட அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை மாதத்துக்குள் டெல்லி போலீசாரால் தொடரப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    ×