search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtallam Falls"

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.
    • சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டி காணப்படும்.

    குற்றாலத்தில் அமைந்துள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தென்மேற்கு பருவமழை பொழியும் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி அடர்ந்த வனப்பகுதியின் இடையே வரும் அருவி நீரானது வனப்பகுதியில் இருக்கும் மூலிகை செடிகள் மரங்களை கடந்து வருவதால் மூலிகை நிறைந்த குறிப்பாக பிணிகளை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாக குற்றால அருவிகள் பார்க்கப்பட்டு வருகிறது.

    இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்த குளியல் போடுவர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.

    ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு போதிய அளவில் பெய்யவில்லை. சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த 2 மாதங்களில் அவ்வப்போது மட்டும் மழை பெய்து கண்ணாமூச்சி காட்டுகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் போதிய நீரோட்டம் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது. இதனால் கடந்த ஆண்டு குற்றால அருவியில் குளித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது பல மடங்கு குறைந்தது.

    குற்றாலத்தில் முழுமையாக சீசன் இல்லாததால் சீசனை எதிர்பார்த்து அமைக்கப்பட்டு இருந்த வியாபார நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வாடகை வாகனங்கள் என சுற்றுலா துறையை நம்பியே லட்சக்கணக்கான பணம் முதலீடு செய்தவர்கள் பலரும் போதிய வருமானமின்றி புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மலைவாசல் தளங்களில் கிடைக்கும் பழ வகைகள் அனைத்தையும் சீசன் காலங்களில் குற்றாலம் வரும் பயணிகளின் கண் முன்னே காண்பித்து அவர்களை ருசிக்க வைக்க நினைத்த வியாபாரிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது.

    சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    • நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
    • ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும்.

    இந்த ஆண்டு தாமதமாக சீசன் தொடங்கினாலும், அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    நேற்று காலை முதல் குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்ததன் காரணமாக மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.

    மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஒட்டிய பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலையில் ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இதமான குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருவதால் குற்றாலத்தில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.

    • இந்த ஆண்டு தாமதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் குற்றால சீசனும் தாமதமாகவே தொடங்கி உள்ளது.
    • நேற்று இரவு முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு தாமதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் குற்றால சீசனும் தாமதமாகவே தொடங்கி உள்ளது.

    குற்றாலத்தின் முக்கிய அருவிகளான மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தொடர்ந்து மழை குறைவால் தண்ணீர் படிப்படியாக குறைந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் ஓரளவு தண்ணீர் அருவிகளில் விழுந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு முழுமையான சீசன் இல்லையே என்று சுற்றுலா பயணிகள் ஏக்கம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அங்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் குற்றால சீசன் காலங்களில் பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு ரம்புட்டான், மங்குஸ்தான், ஸ்டார்ஸ் ப்ரூட்ஸ் பேரிக்காய், மலைசீதா, கிர்ணி, அன்னாசி பழம், பலாப்பழம் உள்ளிட்ட மலைவாச தலங்களில் கிடைக்கும் அரிய வகை பழங்கள் அதிக அளவில் வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது. அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி ருசித்து மகிழ்கின்றனர்.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்தது. நள்ளிரவில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகள், முக்கூடல் உள்ளிட்ட இடங்களிலும் சுமார் அரைமணி நேரம் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 9.2 மில்லிமீட்டரும், கருப்பாநதி, அடவிநயினார் அணையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    • குற்றால அருவி கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
    • லேசான வெயில் மற்றும் இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால் குற்றாலத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.

    தென்காசி:

    குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    குற்றால அருவி கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    குற்றாலத்தில் உள்ள முக்கிய விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் விடுதி உரிமையாளர்கள் மற்றும் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலையில் லேசான வெயில் மற்றும் இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால் குற்றாலத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.

    கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் குற்றால சாரல் திருவிழா எப்போது தொடங்கும் என சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றால சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதத்தில் நடத்த இருப்பதாகவும், அதற்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10 நாட்கள் நடைபெறும் குற்றால சாரல் திருவிழாவில் தமிழக கலை பண்பாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சி ஆனது சாரல் திருவிழாவை மேலும் மெருகூட்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • தென்காசி மாவட்டத்தின் பிரதான சாலைகள் மற்றும் குற்றால அருவிக்கரை பகுதிகள் அனைத்திலும் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
    • அவ்வப் போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருவதால் சீசன்களை கட்டி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் முதல் வெள்ளத்தின் சீற்றம் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் பிரதான சாலைகள் மற்றும் குற்றால அருவிக்கரை பகுதிகள் அனைத்திலும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. அதனை பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் குற்றாலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, அவ்வப் போது சாரல் மழை யும் விட்டுவிட்டு பெய்து வருவதால் சீசன்களை கட்டி உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும் விற்பனை சூடு பிடித்து உள்ளது. தனியார் தங்கும் விடுதிகளும் நிரம்ப தொடங்கி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள நீர் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தென்காசி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அவ்வப்போது தடை விதித்திருந்தாலும் தண்ணீர் குறையும்பொழுது குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    இன்று காலையும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள நீர் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    குண்டாறு நீர் தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.
    • மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஏற்கனவே தொடங்கிய நிலையிலும், தென்மாவட்டங்களில் இதுவரை பருவக்காற்று மட்டுமே வீசி வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிவிடும். ஆனால் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் மழைக்கான அறிகுறியே இல்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது. எனினும் குறைவாக கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பழைய குற்றாலம் அருவியில் பாறைகள் மட்டுமே காட்சியளித்தது.

    இந்நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    ஒருகட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் இரவு நேரத்தில் ஏராளமானோர் குளிப்பதற்காக வந்திருந்தனர். ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.

    இந்நிலையில் இன்று காலை 2 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்தனர். இந்த ஆண்டு சீசன் இதுவரை களைகட்டவில்லை என்ற ஏக்கம் வியாபாரிகள் மனதிலும், சுற்றுலா பயணிகள் மனதிலும் உள்ள நிலையில் இனியாவது அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்ட வேண்டும் என்று அவர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் 10 மில்லிமீட்டரும், தென்காசி, செங்கோட்டையில் தலா 3 மில்லிமீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறில் 4.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர். மாவட்டத்தில் அணை பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 8 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    • கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது.
    • இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும்.

    தென்மேற்கு பருவமழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குதில் தாமதம் ஏற்பட்டது.

    கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் வறட்சியுடன் காணப்பட்ட ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

    நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடனும், இதமான காற்றும் வீசி வந்த நிலையில் மாலை 4 மணிக்கு திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலம், தென்காசி பகுதியில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இதேபோல் செங்கோட்டை, குண்டாறு, அடவிநயினார் அணைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டியும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக தடை விதிக்கப்பட்டது.

    இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது. இதனால் இன்று காலை முதல் ஐந்தருவி, மெயின் அருவியில் சீராக தண்ணீர் விழ தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்து இருந்த சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் ஆர்வமுடன் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். எனினும் பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றுருவி பகுதிகள் வறட்சியுடனே காணப்பட்டு வருகிறது.

    இன்று காலை முதல் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதால் தொடர்ந்து சாரல் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றும் தொடர் சாரல் மழை பெய்தால் சிற்றுருவி, புலி அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வருவார்கள்.
    • நேற்று காலையில் இருந்தே குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

    தென்காசி:

    குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. அங்குள்ள அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். அப்போது இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காலநிலை நிலவும்.

    இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வருவார்கள். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் பிறந்து 2 வாரங்களை கடந்த நிலையிலும் சீசன் தொடங்காமல் தாமதமாகி வந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். குளுகுளு சீசன் எப்போது தொடங்கும், அதை ஆனந்தமாக அனுபவிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தற்போது சீசன் தொடங்கி உள்ளது. நேற்று காலையில் இருந்தே குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழையும் விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மாலையில் தொடர்ந்து சாரல் மழை பொழிந்தது.

    இதனால் மாலை சுமார் 6 மணிக்கு குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    அதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு மின்தடையும் ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் குற்றாலத்திலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து சீசன் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குற்றாலம் அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.
    • நேற்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றாலம் அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அப்போது இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றுருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்திலும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் போதிய அளவு தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர்வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் புளியரையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த மிதமான மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    ஐந்தருவில் உள்ள 4 கிளைகளில் மிதமான அளவு தண்ணீர் விழத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்டத்தொடங்கி உள்ளனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதலும் அருவிகளை ஒட்டிய பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இன்றும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இன்று வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் ஐந்தருவியில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து தொடர்ந்து வீசி வரும் குளிர்ந்த காற்றின் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் குற்றால சீசன் முழுமையாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
    • ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலமும் ஒன்றாகும்.

    இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, புலியருவிகளில் சீசன் காலக்கட்டங்களில் வெளிமாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சீசன் களைகட்டும்.

    இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 4-ந்தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்காசியில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்ய தொடங்கியது.

    இதனால் தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பாறைகளாக காட்சியளித்து வந்த குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கி உள்ளது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது.

    இன்று காலை முதல் குற்றால பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் குளிக்க வந்தனர். அங்கு இன்று காலையில் வெயில் அடித்தாலும், குளிர்ந்த காற்று வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் மேலும் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    • குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது.
    • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி இன்று மதியம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    நேற்று காலை முதல் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது.

    குறிப்பாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வந்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி இன்று மதியம் 1 மணி அளவில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெறும் சபரிமலை ஐயப்பன் ஆபரண பெட்டியினை கண்டு வழிபட்டு செல்வதற்காகவும் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் தென்காசியில் முகாமிட்டுள்ளனர்.

    ×