search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commits suicide"

    டெல்லியில் பெண் டாக்டர் ஒருவர், சக டாக்டர்களின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WomanDoctorSuicide #HarassedAtWork
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கதிரியக்கவியல் டாக்டராக  பணியாற்றியவர் டாக்டர் பூனம் வோரா (வயது 52). இவர் பாபா காரக் சிங் மார்க் பகுதியில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் டாக்டர் பூனம் வோரா நேற்று தனது வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.



    வெளியில் சென்றிருந்த குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால், கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. டாக்டர் பூனம் வோராவின் செல்போனையும் தொடர்புகொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது, டாக்டர் பூனம் வோரா சடலமாக தொங்கினார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு, டாக்டர் பூனம் வோரா எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில், தன்னுடன் பணியாற்றிய 3 டாக்டர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக குறிப்பிட்டுள்ளார். அந்த டாக்டர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், பூனம் வோராவின் செல்போனையும் கைப்பற்றிய போலீசார், அதில் உள்ள அழைப்புகள் மற்றும் தகவல்களை ஆய்வு செய்துவருகின்றனர். #WomanDoctorSuicide #HarassedAtWork
    மும்பையில் 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. #Mumbai #GirlSuicide
    மும்பை:

    மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் அம்ரிஷ் கோத்தாரி (வயது 48). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 23-வது மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா (16). நேற்று முன்தினம் வெளியில் சென்றிருந்த பிரியங்கா இரவில் வீடு திரும்பினார். அவருக்காக காத்திருந்த வீட்டு வேலைக்காரர் பிரியங்கா வந்ததும் கதவை திறந்து விட்டு தூங்க சென்று விட்டார். இந்தநிலையில், அதிகாலை 2 மணியளவில் கட்டிட வளாகத்தில் பிரியங்கா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்ததும் பிரியங்காவின் பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், பிரியங்கா 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் ஒசமணி தற்கொலை செய்து கொண்டார். #SAIKabaddiCoach #Suicide #MolestingGirl
    பெங்களூரு:

    பெங்களூரு ஞானபாரதியில் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) செயல்பட்டு வருகிறது. இங்கு கபடி பயிற்சியாளராக ருத்ரப்பா வி.ஒசமணி (வயது 59) பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்த அவர், அங்கு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்திலும் சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து ருத்ரப்பா வி.ஒசமணி மீதான புகாரை விசாரிக்க இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டது. தனிக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் ருத்ரப்பா வி.ஒசமணி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஞானபாரதி போலீசில், ருத்ரப்பா வி.ஒசமணி மீது புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது ‘போக்சோ‘ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே, பயிற்சியாளரான ருத்ரப்பா வி.ஒசமணி தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவுக்கு கடந்த 14-ந் தேதி சென்றார். அங்குள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து அவர் தங்கினார். அதன்பிறகு, அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் நேற்று முன்தினம் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. கதவை தட்டியபோதும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஹரிஹரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் அவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஹரிஹரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், அவர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘எனக்கு மனவருத்தம் ஏற்பட்டதாலும், உதவ யாரும் முன்வராததாலும் இந்த முடிவை தேடிக்கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மகனே ராகேஷ், நீ உன் அம்மா தேவிகாவை நன்றாக பார்த்து கொள். எனது உடலை தானம் செய்து விடுங்கள். உயிர் விடுவதற்கு முன்பு உங்களை பார்க்க விரும்பினேன். என்னிடம் புகைப்படம் இல்லாததால் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை’ என்று அவர் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.  #SAIKabaddiCoach #Suicide #MolestingGirl 
    மத்திய மந்திரி உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரி தனேரிவா தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். #UmaBharti #PersonalSecurity
    போபால்:

    மத்திய குடிநீர் வழங்கல்துறை மந்திரி உமாபாரதியின் பாதுகாவலர் குழுவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராம் மோகன் தனேரிவா. மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த அவர், மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது.



    இது தொடர்பாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தம்பதியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் தனேரிவா மீது வழக்கு தொடர வேண்டும் என அவரது மனைவி உறுதியாக இருந்தார்.

    எனவே கணவன்-மனைவி இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனேரிவா தனது தலையில் சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் போலீஸ் வாகனத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மத்திய மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக மற்றொரு மந்திரியான நரேந்திர சிங் தோமரின் உதவியாளர் கடந்த 20-ந்தேதி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  #UmaBharti #PersonalSecurity #tamilnews
    துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜின் உடல் இன்று இந்தூர் நகரில் தகனம் செய்யப்பட்டது. #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ். உதய் சிங் தேஷ்முக் என்னும் இயற்பெயரை கொண்ட இவருக்கு மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது.

    மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பய்யூ மஹராஜின் சீடர்களாக உள்ளனர். இதுதவிர பல லட்சக்கணக்கானவர்களின் ஆன்மிக குருவாக இருந்த இவர், நேற்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு ஆபத்தான நிலையில் இந்தூரில் உள்ள பாம்பே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த செய்தி பரவியதும் ஆஸ்பத்திரியின் முன்னர் அவரது சீடர்கள் பலர் திரண்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பய்யூ மஹராஜ் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததும் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    அவரது மறைவுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் செய்தி வெளியிட்டனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பய்யூ மஹராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தூரில் உள்ள அவரது ‘சூர்யோதய்’ ஆசிரமத்தில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, மகாராஷ்டிரா மந்திரி பங்கஜா முண்டே மற்றும் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


    பின்னர், இன்று பிற்பகல் அங்கிருந்து புறப்பட்ட பய்யூ மஹராஜின் இறுதி யாத்திரை சாயாஜி சுடுகாட்டை சென்றடைந்தது. வேத மந்திரங்கள் ஒலிக்க அவரது மகள் குஹு பய்யூ மஹராஜின் சிதைக்கு தீ மூட்டினார்.

    ஆன்மிக பணிகள் மட்டுமின்றி பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வந்த இவர், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் முன்னர் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஹசாரேவுக்கும் அரசுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றார். ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜுக்கு மத்தியப்பிரதேச மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் இணை மந்திரி பதவி அளிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம். #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj
    மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார். #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ். உதய் சிங் தேஷ்முக் என்னும் இயற்பெயரை கொண்ட இவருக்கு மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது.

    மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பய்யூ மஹராஜின் சீடர்களாக உள்ளனர். இதுதவிர பல லட்சக்கணக்கானவர்களின் ஆன்மிக குருவாக இருந்த இவர், இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு ஆபத்தான நிலையில் இந்தூரில் உள்ள பாம்பே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த செய்தி பரவியதும் ஆஸ்பத்திரியின் முன்னர் அவரது சீடர்கள் பலர் திரண்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பய்யூ மஹராஜ் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததும் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.



    ஆன்மிக பணிகள் மட்டுமின்றி பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வந்த இவர், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் முன்னர் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஹசாரேவுக்கும் அரசுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றார். ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜுக்கு மத்தியப்பிரதேச மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் இணை மந்திரி பதவி அளிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம். #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj


    ஐபிஎல் சூதாட்டம், ஜே டே கொலை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த மகாராஷ்டிரா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹிமன்ஷு ராய் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். #HimanshuRoy
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருப்பவர் ஹிமன்ஷு ராய். பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் தலைவராக இருந்த இவர் 2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு, வக்கீல் பல்லவி கொலை வழக்கு உள்பட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தவர்.

    ஹிமன்ஷு ராய் புற்றுநோய் காரணமாக நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தெற்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் மதியம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட போது, மூத்த அதிகாரிகளுக்கு அரசு உரிய மரியாதை அளிக்க வில்லை எனக்கூறி முதல்வருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #HimanshuRoy #MumbaiPolice
    ×