search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uma bharti"

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் தொகுதி அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என உமா பாரதி தெரிவித்துள்ளார். #Advanitoclear #UmaBharti #clearthemist
    புதுடெல்லி:

    இந்திய அரசியலில் மிகவும் முதிர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி(91).  குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற இவருக்கு இந்த தேர்தலில் அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. 

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த தேர்தலில் காந்தி நகர் தொகுதியில்  போட்டியிடுகிறார். இதன் மூலம் பாஜகவில் அத்வானியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. 

    பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உழைப்பின் பலனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தற்போது அனுபவித்து வருவதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் குற்றம்சாட்டியுள்ளது. 

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய மந்திரியும், பாஜக துணைத்தலைவருமான உமா பாரதி அமித் ஷாவுக்கு காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அத்வானி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ‘நரேந்திர மோடி இன்று பிரதமர் பதவியில் இருக்கும் அளவுக்கு பாஜகவை பலமான கட்சியாக உருவாக்கியதில் ஆரம்பகாலத்தில் இருந்தே முக்கிய சக்தியாக திகழ்ந்தவர் அத்வானி. ஆனால், தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்விதமான பெரிய பதவியையும் எதிர்பார்த்ததில்லை.

    தேர்தலில் போட்டியிடுவதாலோ, போட்டியிடாமல் போவதாலோ அவரது தகுதியில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு விடப்போவதில்லை. 

    இந்த தேர்தலில் அவர் ஏன் போட்டியிடவில்லை? என்னும் கேள்விக்கு நானோ மற்றவர்களோ விளக்கம் அளிப்பது முறையாக இருக்காது. இவ்விவகாரத்தில் தன்னை சுற்றியுள்ள பனித்திரையை விலக்கும் வகையில் அத்வானியே விளக்கம் அளிப்பது தான் சரியாக இருக்கும்’ என உமா பாரதி குறிப்பிட்டார். #Advanitoclear #UmaBharti #clearthemist  
    மத்திய மந்திரி உமா பாரதியை பாரதிய ஜனதாவின் தேசிய துணைத் தலைவராக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார். #UmaBharti #BJPvicepresident
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிவித்தார். எனினும், இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    சுஷ்மா சுவராஜை தொடர்ந்து, உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும் மத்திய குடிநீர், வடிகால்துறை மந்திரியுமான உமா பாரதி ’எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் ஆலோசனை குழு கூட்டத்திலும் அக்கட்சி தலைமையிடம் தனது கருத்தை உமா பாரதி வலியுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து, உமா பாரதியை பாரதிய ஜனதாவின் தேசிய துணைத் தலைவராக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார். டெல்லியில் இன்றிரவு 46 பாஜக வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.பி.நட்டா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார். #UmaBharti #BJPvicepresident
    சுஷ்மா சுவராஜை தொடர்ந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய மந்திரி உமா பாரதி இன்று அறிவித்துள்ளார். #LokSabhaelections #UmaBharti
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 6 மாதங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிவித்தார். எனினும், இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், சுஷ்மா சுவராஜை தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும் மத்திய குடிநீர், வடிகால்துறை மந்திரியுமான உமா பாரதி ’எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என இன்று அறிவித்துள்ளார்.



    ராமர் கோவில் கட்டுவது, கங்கை நதியை தூய்மைப்படுத்துவது ஆகிய நோக்கங்களை மையப்படுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் 2500 கிலோமீட்டர் நடைப்பயண பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பதவியில் நான் இருக்க மாட்டேன். ஆனால், இதற்காக நான் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக நினைக்க வேண்டாம். வழக்கம்போல் கட்சி பிரசாரங்களில் நான் பங்கேற்பேன் என்றும் உமா பாரதி தெரிவித்தார். #LokSabhaelections #UmaBharti
    மத்திய மந்திரி உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரி தனேரிவா தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். #UmaBharti #PersonalSecurity
    போபால்:

    மத்திய குடிநீர் வழங்கல்துறை மந்திரி உமாபாரதியின் பாதுகாவலர் குழுவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராம் மோகன் தனேரிவா. மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த அவர், மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது.



    இது தொடர்பாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தம்பதியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் தனேரிவா மீது வழக்கு தொடர வேண்டும் என அவரது மனைவி உறுதியாக இருந்தார்.

    எனவே கணவன்-மனைவி இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனேரிவா தனது தலையில் சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் போலீஸ் வாகனத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மத்திய மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக மற்றொரு மந்திரியான நரேந்திர சிங் தோமரின் உதவியாளர் கடந்த 20-ந்தேதி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  #UmaBharti #PersonalSecurity #tamilnews
    ×