என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amith shah"

    • இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
    • இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களாலும் முன்மொழியபட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் மேதகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வு பெற்று உள்ளது இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள் ஆகும்.

    தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமும் மிக்கது.
    • இந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.

    இதையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அனைத்து இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமும் மிக்கது. அவற்றை வளப்படுத்தாமல் நாடு முன்னேற முடியாது. அதிகாரப்பூர்வ மொழியான இந்தி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது.

    இந்த ஆண்டுடன் பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்வதற்கும், மேம்பட்ட இந்தியாவின் வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கும் அதிகாரப்பூர்வ மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் தொகுதி அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என உமா பாரதி தெரிவித்துள்ளார். #Advanitoclear #UmaBharti #clearthemist
    புதுடெல்லி:

    இந்திய அரசியலில் மிகவும் முதிர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி(91).  குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற இவருக்கு இந்த தேர்தலில் அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. 

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த தேர்தலில் காந்தி நகர் தொகுதியில்  போட்டியிடுகிறார். இதன் மூலம் பாஜகவில் அத்வானியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. 

    பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உழைப்பின் பலனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தற்போது அனுபவித்து வருவதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் குற்றம்சாட்டியுள்ளது. 

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய மந்திரியும், பாஜக துணைத்தலைவருமான உமா பாரதி அமித் ஷாவுக்கு காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அத்வானி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ‘நரேந்திர மோடி இன்று பிரதமர் பதவியில் இருக்கும் அளவுக்கு பாஜகவை பலமான கட்சியாக உருவாக்கியதில் ஆரம்பகாலத்தில் இருந்தே முக்கிய சக்தியாக திகழ்ந்தவர் அத்வானி. ஆனால், தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்விதமான பெரிய பதவியையும் எதிர்பார்த்ததில்லை.

    தேர்தலில் போட்டியிடுவதாலோ, போட்டியிடாமல் போவதாலோ அவரது தகுதியில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு விடப்போவதில்லை. 

    இந்த தேர்தலில் அவர் ஏன் போட்டியிடவில்லை? என்னும் கேள்விக்கு நானோ மற்றவர்களோ விளக்கம் அளிப்பது முறையாக இருக்காது. இவ்விவகாரத்தில் தன்னை சுற்றியுள்ள பனித்திரையை விலக்கும் வகையில் அத்வானியே விளக்கம் அளிப்பது தான் சரியாக இருக்கும்’ என உமா பாரதி குறிப்பிட்டார். #Advanitoclear #UmaBharti #clearthemist  
    ×