search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Karthikeyan"

    • நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் மாவட்ட சுகாதார பேரவை அமைக்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் வட்டார மருத்துவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சுகாதார பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

    சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் சுகாதார தரத்தை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கி துணை யுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் மாவட்ட சுகாதார பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இன்று அதன் கூட்டம் நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறைக்கும், சமுதாயத்திற்கிடையே நல்லுறவு ஏற்படுத்துவது, அனைவருக்கும் சமமான சுகாதாரம் முறையாக கிடைக்க செய்வது ஆகியவை இந்த பேரவையின் நோக்கமாகும்.

    மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வட்டார மருத்துவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சுகாதார பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ராமநாதன், தொழுநோய் தடுப்பு துணை இயக்குனர் அளர்சாந்தி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, இணை இயக்குனர் (காசநோய் தடுப்பு) வெள்ளைச்சாமி மற்றும் வட்டார மருத்து வர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கூட்ட வளா கத்தில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, தொழு நோய் தடுப்பு பிரிவு உள்ளிட்டவைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதனை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    • 6 வயதிற்கு உட்பட்ட 27 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் இன்ப சுற்றுலாவிற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
    • குழந்தைகளுடன் ஆசிரியர்கள், பெற்றோர் என மொத்தம் 59 பேர் செல்கின்றனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6 வயதிற்கு உட்பட்ட இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 27 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கன்னியா குமரிக்கு இன்ப சுற்றுலா செல்லும் வாகனத்தை கலெக்டர் கார்த்திகேயன் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

    பின்னர் அவர் கூறு கையில், சுற்றுலாத்துறை சார்பில் 6 வயதிற்கு உட்பட்ட 27 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கன்னியாகுமரிக்கு இன்ப சுற்றுலாவிற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . இந்த சுற்றுலா பயணம் இன்று ஒரு நாள் முழுவதும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று சுற்றி காண்பிக்கப்படும்.

    உணவு, குடிநீர் வசதி

    இந்த சுற்றுலா செல்லும் 27 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுடன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர் என மொத்தம் 59 பேர் செல்கின்றனர். இந்த சுற்றுலா பயணம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஊக்கத் தையும், தன்னம்பிக்கையும் அளிக்கும். மேலும் அவர்களுக்கு உணவு வசதியும், குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன், குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 25-ந் தேதி‘6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா’ தொடங்குகிறது.
    • அரங்குகள் அமைக்கும் பணியினை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) பாளை வ.உ.சி. மைதானத்தில் '6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா' தொடங்குகிறது.

    100-க்கும் மேற்பட்ட அரங்குகள்

    அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த புத்தக திருவிழா அனைவருக்குமான பண்முக தன்மையை போற்றும் வகையிலும், அனைவருக்குமான விழாவாக நடத்தப்படுகிறது.

    விழாவில் முதல் 3 நாட்கள் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அரங்குகள், பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் தொடர் வாசிப்பு, மாணவர் கையெழுத்து இதழ், கல்லூரி மாணவர்களுக்கான இதழியல் பயிற்சி பட்டறை மற்றும் புத்தக வெளியீடுகள் நடைபெறுகின்றன.

    இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    புகைப்பட கண்காட்சி

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் இல்லாத புத்தக திருவிழா வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவை காண வரும் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான பாரம்பரிய உணவுகள் வழங்கிட உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

    விழாவின் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. மேலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    கலெக்டர் ஆய்வு

    புத்தக திருவிழாவை யொட்டி வ.உ.சி. மைதானத்தில் அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    வாசகங்கள் எழுதும் போட்டி

    புத்தகத் திருவிழா விற்கான கருத்தை உள்ளடக்கிய வாசகங்கள் எழுதும் போட்டி நடை பெறுகிறது. இப்போ ட்டிக்கு வாசகங்கள் மேற்படி கருத்தை உள்ளடக்கி யதாகவும், சுமார் 4 அல்லது 5 வார்த்தை களுக்கு மிகாமலும், பிறமொழி கலப்பில்லா மலும், படைப்பாளியின் சொந்த கருத்தாகவும் இருத்தல் வேண்டும். இப்போ ட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணகள் உட்பட பொதுமக்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.

    போட்டிக்கான வா சகங்களை படைப்பாளியின் முழு முகவரி, தொடர்பு எண் ஆகிய விபரங்களுடன் வருகிற 23ந் தேதி மாலை 5 மணிக்குள், porunainellaifest@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 வாசகங்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பிடிக்கும் வாசகமானது இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் கருப்பொருள் வாசசுமாக பயன்படுத்தப்படும் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

    • அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
    • முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொறு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறும். இக்குறைதீர் முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல் ஆகிய சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று மற்றும் குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். மேலும் செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு செல்ல வேண்டும்.

    முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமில் புதிய கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
    • கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலுக்கு 50 அடி தூரத்திற்கு முன்னதாக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வாராந்திர பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    புதிய கலெக்டர்

    இதில் முதல்முறையாக புதிய கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    அப்போது மாற்று திறனா ளிகள் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் தொடர்பான மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மாற்றுதிறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றார்.

    உதவித்தொகை ஆணை

    முகாமில் 15 பயனாளி களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி வள்ளிக்கண்ணு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமாரதாஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தீவிர சோதனை

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிலர் மண்எண்ணை, பெட்ரோல், விஷப்பாட்டிலுடன் வந்து தற்கொலையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வந்தது.

    இதனை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு 50 அடி தூரத்திற்கு முன்னதாக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.இன்று அப்பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பின்ன ரே பொது மக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

    புகார் மனு

    முகாமில் பாளை யூனியன் நொச்சிகுளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் குமார், பேச்சி உள்ளிட்டவர்கள் கொடுத்த மனுவில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் எங்களுடைய ஆலோசனை இல்லாமல் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைபடுத்தி உள்ளார்.

    9-வது வார்டில் கடந்த 35 ஆண்டுகளாக குடிநீர், சாலை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. பஞ்சாயத்து நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து தனி அலுவலரை நியமித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி இருந்தனர்.

    டாஸ்மாக்

    சமத்துவ மக்கள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், இளஞ்செழியன் உள்ளிட்டவர்கள் கொடுத்த மனுவில், அழகிய பாண்டியபுரம்- உக்கிரன் கோட்டை சாலையில் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்த சாலை வழியாக பள்ளி மாணவ- மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள், விவசாயிகள் சென்று வருகிறார்கள். எனவே அவர்கள் நலன் கருதி அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    ×