search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore suicide"

    வடவள்ளி அருகே காதல் தோல்வியால் மனவேதனை அடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடவள்ளி:

    கோவை மாதம்பட்டி தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவரது மகள் தேவி (18). இவர் சென்னனூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றவர். கல்லூரி செல்ல தயாராக இருந்து வந்தார். தேவியும், அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்ததாக பெற்றோருக்கு தெரியவந்ததும் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடலை மீட்டபோது தேவி எழுதிய கடிதம் சிக்கியது. அதில் நாங்கள் காதலித்தோம். எதிர்ப்பு கிளம்பியதும் என்னை தூக்கி எறிந்து விட்டு வேறு பெண்ணை காதலித்து வருகிறான். இதனால் நான் ஏமாற்றப்பட்டேன். என் நிலை யாருக்கும் வரக்கூடாது. தற்கொலை செய்யும் அளவுக்கு என்னை கொண்டு வந்து விட்டான் என்று எழுதியிருந்தார்.

    இது குறித்து தேவியின் தந்தை பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் எலப்பாழ தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (47). கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவரது தாய் கற்பகம் தான் இவரை கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கற்பகம் இறந்தார். இதனால் மனோகரன் மனவேதனையில் இருந்தார். தாய் இறந்த துக்கத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் பேலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை இருகூர் அய்யர் தோட்டத்தில் கிணறு உள்ளது. மொத்தம் 70 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 30 அடி தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் 35 வயது மதிக்க தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பிணமாக கிடந்தவர் உடலை மீட்டனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கிணற்றில் தள்ளி விட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனைமலை அருகே உள்ள கரியதொட்டி பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் நாலாம் மூலை சுங்கம் எம்.ஜி.ஆர். நகரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். அங்கு கட்டிட பணி நடைபெறுவதால் கருப்பசாமி ஒர்க்‌ஷாப்பை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். நேற்று ஒர்க்‌ஷாப் சென்று பார்த்த போது அங்கு 45 வயது மதிக்க தக்க ஆண் பிணமாக கிடந்தார்.

    அவர் டவுசர் மட்டுமே அணிந்து இருந்தார். இது குறித்து ஆழியாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை குனியமுத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைபுதூர் பிரிவு இ.பி.காலனியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் அஸ்வினி (வயது 18). இவர் கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்த அஸ்வினி வழக்கம் போல இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக சென்றார். இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் சென்று பார்த்தனர். அப்போது அறையில் அஸ்வினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அஸ்வினியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை துடியலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் முகில் (வயது 19). இவர் கோவை துடியலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று முகில் விடுதி அறையில் வி‌ஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக விரைந்து வந்து முகிலை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முகில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தாய் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள வச்சினம்பாளையம் மணீஸ் காலனியைச்சேர்ந்தவர் ராஜேஷ்(26) விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகத்தெரிகிறது. இதனை அவரது தாய் மகேஸ்வரி கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த ராஜேஷ் கடந்த 18 -ந் தேதி வி‌ஷம் குடித்து விட்டார். மயங்கிக்கிடந்த அவரை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின்னர் ராஜேஷ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
    கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக 2 தொழிலாளர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    காரமடை அருகே உள்ள தேவனாம்புரத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 48). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதனை வெள்ளியங்கிரின் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெள்ளியங்கிரியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெள்ளியங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (48). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட் டது. இதில் மனவேதனை அடைந்த தர்மலிங்கம் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தர்மலிங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சிங்காநல்லூர் அருகே வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழில் அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பூபால கிருஷ்ணன் (வயது 49). இவர் அந்த பகுதியில் டிப்பார்ட்மெண்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் வியாபாரத்தில் பூபாலனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று கடையில் இருந்த பூபாலகிருஷ்ணன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.

    தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் பூபாலன் கிருஷ்ணன் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூபால கிருஷ்ணணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு இருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொள்ளாச்சி அருகே குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் அருண் என்கிற கங்காதரன் (வயது 23). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோதி சரண்யா (20). இவர்களுக்கு கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கங்காதரன் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கங்காதரன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை சிங்காநல்லூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள லட்சுமிபுரம் சின்னசாமி நாயுடு லே-அவுட்டை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் அகிலா (வயது 14). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவரது பெற்றோர் கோவிலுக்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த அகிலா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அகிலாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே கணவர் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் மனவேதனையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கார்த்திகேயன் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த தீபா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 வருடத்தில் தீபா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    கோவை கணுவாய் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது 2-வது மகன் ஜெயசூர்யா (வயது 19). தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ., படித்து வந்தார்.

    ஜெயசூர்யாவும் ஒரு மாணவியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த ஒரு வாரமாக ஜெயசூர்யா விரக்தியில் இருந்தார். பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியாது.

    இந்நிலையில் வீட்டில் தனியே இருந்து ஜெயசூர்யா தாயின் சேலையில் தூக்குப்போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ஜெயசூர்யா தூக்கில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவை அருகே உள்ள காருண்யா நகரில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    மணிமாறன் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காருண்யா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மணிமாறனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×