search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்காநல்லூர் அருகே தொழில் அதிபர் தீ குளித்து தற்கொலை
    X

    சிங்காநல்லூர் அருகே தொழில் அதிபர் தீ குளித்து தற்கொலை

    கோவை சிங்காநல்லூர் அருகே வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழில் அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பூபால கிருஷ்ணன் (வயது 49). இவர் அந்த பகுதியில் டிப்பார்ட்மெண்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் வியாபாரத்தில் பூபாலனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று கடையில் இருந்த பூபாலகிருஷ்ணன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.

    தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் பூபாலன் கிருஷ்ணன் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூபால கிருஷ்ணணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு இருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×