என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » business owner suicide
நீங்கள் தேடியது "business owner suicide"
கோவை சிங்காநல்லூர் அருகே வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழில் அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பூபால கிருஷ்ணன் (வயது 49). இவர் அந்த பகுதியில் டிப்பார்ட்மெண்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்தநிலையில் வியாபாரத்தில் பூபாலனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று கடையில் இருந்த பூபாலகிருஷ்ணன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.
தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் பூபாலன் கிருஷ்ணன் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூபால கிருஷ்ணணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு இருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பூபால கிருஷ்ணன் (வயது 49). இவர் அந்த பகுதியில் டிப்பார்ட்மெண்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்தநிலையில் வியாபாரத்தில் பூபாலனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று கடையில் இருந்த பூபாலகிருஷ்ணன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.
தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் பூபாலன் கிருஷ்ணன் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூபால கிருஷ்ணணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு இருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெல்காவி அருகே வயிற்று வலி காரணமாக தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெல்காவி அருகே கணேஷ் புரத்தை சேர்ந்தவர் சைலேஷ் ஜோஷி (வயது 43). இவர் அம்ருத் பார்மா சூடிக்கல்ஸ் என்ற தொழில் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அறையில் சென்று பார்த்த போது சைலேஷ் ஜோஷி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சைலேஷ் ஜோஷி எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் நீண்ட காலமாக தான் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனால் விரக்தியடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
கர்நாடக மாநிலம் பெல்காவி அருகே கணேஷ் புரத்தை சேர்ந்தவர் சைலேஷ் ஜோஷி (வயது 43). இவர் அம்ருத் பார்மா சூடிக்கல்ஸ் என்ற தொழில் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அறையில் சென்று பார்த்த போது சைலேஷ் ஜோஷி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சைலேஷ் ஜோஷி எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் நீண்ட காலமாக தான் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனால் விரக்தியடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X