search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pel kavi"

    கர்நாடக மாநிலம் பெல்காவி அருகே வயிற்று வலி காரணமாக தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெல்காவி அருகே கணேஷ் புரத்தை சேர்ந்தவர் சைலேஷ் ஜோஷி (வயது 43). இவர் அம்ருத் பார்மா சூடிக்கல்ஸ் என்ற தொழில் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.

    இந்நிலையில், அவர் நேற்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அறையில் சென்று பார்த்த போது சைலேஷ் ஜோஷி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சைலேஷ் ஜோஷி எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் நீண்ட காலமாக தான் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனால் விரக்தியடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×