search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    பொள்ளாச்சி அருகே குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் அருண் என்கிற கங்காதரன் (வயது 23). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோதி சரண்யா (20). இவர்களுக்கு கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கங்காதரன் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கங்காதரன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×