என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை
Byமாலை மலர்18 April 2019 10:02 AM GMT (Updated: 18 April 2019 10:02 AM GMT)
கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக 2 தொழிலாளர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
காரமடை அருகே உள்ள தேவனாம்புரத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 48). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனை வெள்ளியங்கிரின் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெள்ளியங்கிரியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெள்ளியங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (48). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட் டது. இதில் மனவேதனை அடைந்த தர்மலிங்கம் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தர்மலிங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரமடை அருகே உள்ள தேவனாம்புரத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 48). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனை வெள்ளியங்கிரின் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெள்ளியங்கிரியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெள்ளியங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (48). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட் டது. இதில் மனவேதனை அடைந்த தர்மலிங்கம் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தர்மலிங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X