search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chitra pournami"

    • பவுர்ணமி இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று இரவு பவுர்ணமி தொடங்குவதால் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மேலும் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இதை தவிர்க்க அண்ணாமலையார் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி குங்குமம் வழங்குவதை தவிர்த்து வேறு பகுதியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    சாமி தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் வழக்கமாக கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் திருமஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    110 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவல பாதைகளில் தற்காலிக கழிவறை குடிநீர் வசதி மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 11.59 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    இதனால் 5-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் என்றும், அன்றைய நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.
    • திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.

    வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகைத்தருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

    இதற்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் , ரூ .50-க்கான சிறப்பு தரிசனம் என இரண்டு பிரிவுக்கும் பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

    வரிசையாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் தூய்மை பணிகள் நடக்கிறது.

    கிரிவலபாதை மற்றும் கோவில் பகுதிகளில் அனுமதி பெற்ற பிறகு அன்னதானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நிறுத்த அனுமதியில்லை.

    சாலையோர சிறுவணிகர்கள் அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே சிறு வணிக கடைகள் அமைக்க வேண்டும்.

    இந்த ஆண்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு திட்டி வாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான சோதனை முறையும் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    குற்ற நிகழ்வகள் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பிற்காக 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மைப் பணிகள், தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகிறது.

    அவசரகால உதவிக்காக மருத்துவக்குழு 108 அவசர கால ஊர்தி மேலும் பல்வேறு மருத்துவ சேவைகளை தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது. சித்ரா பவுர்ணமியொட்டி தமிழகம் முழுவதும் இருந்து 1,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதற்காக திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் எ.வ வேலு சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் அனைத்து வசதிகளுடன் மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களிலிருந்து கோவிலுக்கும், மற்ற பஸ் நிலையங்களுக்கும் ஆட்டோக்களில் செல்வர்.

    இதனால் திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி ஆட்டோக்களில் தனி நபர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

    மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175 232266 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு வருவதற்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    முக்கியமான இடங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 20 கட்டணமில்லா பஸ்கள் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் மூலம் கட்டணமில்லா பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 4-ந்தேதி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
    • ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 1008 கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று முக்கோணம், சதுரம், சாய் சதுரம், ஐங்கோணம், அறு கோணம், எண் கோணம், வட்டம், சூலம் ஆகிய வடிவங்களை உள்ளடக்கிய யாக குண்டங்கள் அமைப்பதற்காக குருபூஜை நடைபெற்றது.

    அதில் குரு போற்றி, விநாயகர் போற்றி, சக்தி மந்திரங்கள் படிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 1008 யாக குண்டங்கள் அமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான செவ்வாடை தொண்டர்கள் பணி செய்து தொண்டாற்றி வருகின்றனர்.

    இந்த சித்திரை பவுர்ணமி வேள்வி பூஜையானது மே 4-ந்தேதி காலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் தொடங்கி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் பங்காரு அடிகளாருக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட மன்றங்களின் பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    மே 5-ந்தேதி சித்ரா பௌர்ணமி அன்று மாலை 5 மணி அளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உலக நன்மைக்காக 1008 கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், வாசன், ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திரை மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி மிகுந்த விசேஷ நாளாக கருதப்படுகிறது.
    • திருவண்ணாமலைக்கு மே 4, 5-ந் ஆகிய தேதிகளில் 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி மிகுந்த விசேஷ நாளாக கருதப்படுகிறது.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி மே மாதம் தொடக்கத்திலேயே அதாவது 4-ந் தேதி நள்ளிரவு தொடங்கி 5-ந் தேதி வரை இருப்பதால் 2 நாட்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை 29-ந் தேதியில் இருந்து விடப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வரக்கூடும்.

    இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலைக்கு மே 4, 5 ஆகிய தேதிகளில் 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, தாம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தர்மபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சித்ரா பவுர்ணமி இந்த ஆண்டு மாத தொடக்கத்தில் வருவதால் கோடை விடுமுறையில் உள்ள குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள கூடும்.

    அதனால் 4-ந் தேதி மதியத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. 2 நாட்களும் சேர்த்து 6 ஆயிரம் பேருந்துகள் அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    மே தினம் 1-ந் தேதியை யொட்டி வருகிற சனிக்கிழமை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கு 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் வெளியூர் செல்ல 8 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முழுநிலவு விழா நடைபெறும். இந்த ஆண்டு நேற்று சித்ரா பவுர்ணமி முழுநிலவு விழா நடந்தது. இதையொட்டி கோவில் வாசலில் வாழை மரங்கள், மா இலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. கோவிலில் கண்ணகிக்கு பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. துர்க்கை, சிவனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 6 மணிக்கு பள்ளி உணர்த்தலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து மலர் வழிபாடு, யாகபூஜை, மங்கல இசை, பொங்கல் வழங்குதல், பால்குடம் எடுத்தல், அமுத சுரபியில் உணவு வழங்குதல், திருவிளக்கு பூஜை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை குழு கவுரவ தலைவர் மு.ராஜேந்திரன், செயலாளர் த.ராஜகணேசன், பொருளாளர் பி.எஸ்.எம் முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சென்னை, ஈரோடு, நெல்லை, தஞ்சாவூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு ஊர்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட, பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    கம்பம் பகுதியில் இருந்து குமுளி, பளியன்குடி பகுதிகளுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கூடலூர் அருகே லோயர்கேம்பை அடுத்த பளியன்குடியில் இருந்து 6.6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து வந்தனர். இவையில்லாமல் பக்தர்களின் வசதிக்காக கேரள மாநிலம் குமுளியில் இருந்து ஏராளமான ஜீப்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் முன்பு பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். பெண் பக்தர்களுக்கு வளையல் மற்றும் மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. கோவில் உள்ள இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழக மற்றும் கேரள வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலுக்கு வந்த ஜீப்களின் பதிவு எண் மற்றும் எத்தனை பேர்கள் என பதிவேட்டில் பதிவு செய்து கொண்டனர். பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதால் போலீசார்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக-கேரள அரசு சார்பில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிக்கு தமிழக-கேரள போலீசார்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா மாலையில் பூமாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேலூரில் மின்விளக்குகள் அலங்காரத்தில் 9 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் நடந்தது.
    வேலூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் புஷ்ப பல்லக்கு திருவிழா முக்கியமான தாகும். பல்வேறு அமைப்புகள் சார்பில் வேலூரில் புஷ்ப பல்லக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி புஷ்பபல்லக்குகளின் ஊர்வலம் நேற்று நடந்தது.

    ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, அரிசி மண்டி சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர் புஷ்ப பல்லக்கு, வெல்ல மண்டி சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, வாணியர் வீதி சார்பில் சுந்தர விநாயகர் கோவில் புஷ்ப பல்லக்கு, பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் வேம்புலிஅம்மன் கோவில் சார்பில் வேம்புலி அம்மன் புஷ்ப பல்லக்கு, மோட்டார் வாகன அனைத்து பணிமனை உரிமையாளர் சங்கம் சார்பில் விஷ்ணு துர்க்கையம்மன் புஷ்ப பல்லக்கு, புஷ்ப வியாபாரிகள் சார்பில் லட்சுமி நாராயணா புஷ்ப பல்லக்கு, சலவன்பேட்டை ஆணைகுளத்தம்மன் கோவில் புஷ்பபல்லக்கு, கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் புஷ்ப பல்லக்கு ஆகிய 9 பல்லக்குகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இந்த பல்லக்குகள் வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் (லாங்குபஜார்) ஒன்றாக சேர்ந்தபிறகு அங்கிருந்து ஒன்றன்பின் ஒன்றாக கமிசரி பஜார், பில்டர்பெட் ரோடு, அண்ணாசாலை வழியாக வேலூர் கோட்டை முன்பு உள்ள காந்தி சிலை அருகே முடிவடைந்தது.

    இந்த புஷ்ப பல்லக்குகளில் எந்த பல்லக்கு நன்றாக உள்ளது என்பதை பார்க்கவும், சாமி தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேலூருக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்ததை ரோட்டின் இருபுறமும் நின்று பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் கிருபானந்தவாரியார் சாலையில் பல்வேறு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்னிசை கச்சேரி மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திருவிழாவையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருமால், அழகுராணி, அண்ணாதுரை மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    நம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. இன்று சித்ரகுப்தனை விரதம் இருந்து வழிபட்டால், புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.
    நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவி நமக்கு அமையும். இதையே ஜோதிட ரீதியாக யோகம், காலம், நேரம் என்கிறோம். யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை, பார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடைபெறும் தசாபுத்தி, அந்தரம் போன்றவை யோகமாகவும், யோகமில்லாமலும் அமைவது. நேரம் என்பது கோச்சார நிலையில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் தரும் பலன்களாகும்.

    முற்பிறவியில் நாம் செய்த கா்ம வினைகளின் பயனை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. அந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியாது என்றாலும், அந்த தாக்கத்தை தாங்குவதற்கான மன வலிமையையும், உடல்பலத்தையும் பெறுவதற்காகவே நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    மனித வாழ்வில் விதி தந்த பலனால், எந்த வழியில் சென்றால் வாழ்க்கை வளமாக அமையும் என்பதற்கு ஜோதிடம் கூறும் எளிய பரிகார வழிபாட்டு முறை திதி, நட்சத்திர வழிபாடு. அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி திதியிலும், சில குறிப்பிட்ட நட்சத்திர நாளிலும் செய்யும் பூஜை பல மடங்கு பலன் தரும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். அவற்றில் சித்ரா பவுர்ணமிக்கு அதிக பலம் இருக்கிறது. அந்த நாளில் செய்யும் வழிபாடு, நம்முடைய ஜனன ஜாதகத்தின் பலனையே மாற்றும் வல்லமை கொண்டது.

    நம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைக்கும் பணியைச் செய்பவர் சித்ரகுப்தன். ஒருவர் இறந்தபிறகு அவரது ஆன்மா, சொர்க்கத்திற்கு செல்வதா? நரகத்திற்குச் செல்வதா? என்பதை முடிவு செய்யும் எமதர்மனின் உதவியாளராக சித்ரகுப்தன் உள்ளார். ஒரு உயர் அதிகாரியை சந்திக்க அவரின் உதவியாளரை சந்தித்து முதலில் அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே அந்த அதிகாரியை சந்திக்க முடியும். அதன்படி எமதர்மனின் உதவியாளரான சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

    சித்ரா பவுர்ணமி அன்று பூஜை அறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படம் வைத்து, அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மலர் அலங்காரம் செய்யுங்கள். பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள், கலவை சாதங்கள் நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி, தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும். இதன் மூலம் பாவ பலன் குறைந்து, புண்ணிய பலன் பெருகும். மேலும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும்.

    சித்ர குப்தனின் மனைவி சித்ராதேவி ஆவாள். அந்த அன்னைக்கு, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப் பொடி சாதம், மாங்காய் சாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா படைத்து, அவற்றை தானமாக வழங்கியும் புண்ணியம் பெறலாம். கல்வி கேள்விகளில் சிறந்தவர் சித்ரகுப்தன் என்பதால், அவரது பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டு புத்தகங்களை வைத்து வழிபட்டால் பிள்ளைகளுக்கு படிப்பு நன்றாக வரும்.

    மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான கடன் உண்டு. ஒன்று பிறவிக் கடன், மற்றொன்று பொருள் கடன். பெரும்பான்மையானவர்கள், இந்த இரண்டு கடன்களில் இருந்து மீள முடியாதவர்களாக, அவதிப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த துன்பத்தை நீக்கும் வழிபாடாகத் திகழ்வதுதான் சித்ரா பவுர்ணமி வழிபாடு.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி அன்று, சூரியன் அஸ்வினி நட்சத்திரத்திலும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்வதால் முறையான பவுர்ணமி பூஜை வழிபாடு பாவ விமோசனம் தரும். சூரியன் சித்திரை மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சம் பெறுவார். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. அவருக்கு ஞானகாரகன், மோட்சக்காரகன் என்று பெயர். அன்று சூரியன் தன் முழு சக்தியான உச்சத்தை வெளிப்படுத்துவதால் செய்யும் பவுர்ணமி வழிபாடு ஆன்ம பலத்தையும், ஞானத்தையும், மோட்சத்தை தந்து பிறவிக் கடனில் இருந்து மீளச் செய்யும். சந்திரன் சஞ்சாரம் செய்வது சித்திரை நட்சத்திரம். அது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் பொருள் கடன் தீரும் என்பதில் ஐயமில்லை. எல்லா வருடமும் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பவுர்ணமி வருவதில்லை. எனவே இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியில் வழிபடுவது பல மடங்கு பலனைத் தரும்.

    சூரியனின் அதிதேவதை சிவன், சந்திரனின் அதிதேவதை அம்பிகை. எனவே சிவசக்தியை சித்ரா பவுர்ணமியில் வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    சித்ரா பவுர்ணமி (நாளை) நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள்.
    சித்ரா பவுர்ணமி நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலான குடும்பங்களில், இது முக்கியப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பவுர்ணமி நாள் ‘சித்ரா பவுர்ணமி’யாகும். இது வசந்த காலம். “காலங்களில் நான் வசந்த காலமாக இருக்கிறேன்” என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார்.

    ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து தோன்றியதால் ‘சித்திர புத்திரன்’ என்றும், ‘சித்ரகுப்தன்’ என்றும் அழைக்கப்படலானார். சித்ரகுப்தர் தோன்றிய தினம் ‘சித்ரா பவுர்ணமி’ என்று புராணங்கள் சொல்கின்றன.

    வசந்த ருதுவில் நீர் நிலைகள் தெளிவாக இருக்கும். அந்த தெளிந்த நீரில் பவுர்ணமி நிலவு அழகிய சித்திரத்தை போல் தோன்றும் என்பதால்தான் ‘சித்ரா பவுர்ணமி’ என பெயர் ஏற்பட்டதாக மற்றொரு கதை கூறுகிறது.

    மனிதர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களை கணக்கிட, சிவபெருமான் ஒருவரை நியமிக்க எண்ணினார். அதன்படி அந்தப் பணிகளை சித்ரகுப்தனிடம் வழங்கினார். சித்ரகுப்தனும் அந்தப் பணியை சிறப்பாக செய்து வரலானார். இவர் குறித்து வைக்கும் பாவ- புண்ணிய கணக்குகளைக் கொண்டே, எமதர்மன் ஜீவராசிகளுக்கு தண்டனை வழங்குவதாக புராணங்கள் சொல்கின்றன. ‘சித்' என்றால் ‘மனம்’, என்றும், ‘குப்த' என்றால் ‘மறைவு’ என்றும் பொருள்படும். நம் மனதில், மறைவாக இருந்து நாம் செய்யும் பாவ - புண்ணியங்களைக் கண்காணிப்பதால், சித்ரகுப்தனுக்கு இந்தப் பெயர் வந்ததாக சொல்வார்கள்.

    சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலிலும் அவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயங்களுக்குச் சென்று சித்ரகுப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்வை அமைத்துக்கொள்ளலாம்.

    விரதம் இருப்பது எப்படி?

    சித்ரா பவுர்ணமி அன்று சந்திர பகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அருகில் சஞ்சாரம் செய்கிறார். எனவே அன்றைய தினம் இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும். அதோடு சித்ரா பவுர்ணமி வரும் சித்திரை மாதத்தில் சூரியனும் தனது உச்ச வீட்டில் பலம் பெற்று நிற்கிறார்.

    அன்றைய தினம் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து மாக்கோலம் இட வேண்டும். பூஜை அறையில் சித்ரகுப்தனின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். அவரது படம் இல்லாதவர்கள், பூஜை அறையில் மாக்கோலமாக சித்ரகுப்தனின் படத்தை வரைய வேண்டும். அவரது கையில் ஏடும், எழுத்தாணியும் இருப்பது போல் வரைவது அவசியம். சித்ரகுப்தரின் திருவுருவத்துக்கு தீப, தூபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் சகல பாவங்களையும் மன்னித்து அருளும்படி, மனமுருகி வழிபட வேண்டும். அன்றைய தினம் மலை வலம் வருவதும், முருகப்பெருமானையும், சித்ரகுப்தனையும் வழிபடுவதும் சிறப்பானதாகும். இந்த வழிபாட்டின் மூலமாக ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும்.

    வண்ணங்களில் வஸ்திரங்கள்

    ஏழு வண்ணங்கள் ஒன்றிணைந்து உருவான நீனாதேவிக்குப் பிறந்தவர், சித்ரகுப்தர் என்றும் ஒரு புராணக்கதை கூறுகிறது. அதன்படி சித்ரகுப்தனை வழிபடும்போது, வானவில்லின் ஏழு நிறங்களை நினைவுபடுத்தும் வகையில், அவருக்கு வண்ண வண்ண வஸ்திரங்களை சாத்தி வழிபடுவது சிறப்பு. தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை முதலியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். பசும்பால், தயிர் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கக்கூடாது. சித்ரகுப்தனின் அபிஷேகத்திற்குக் கூட பசும்பால் பயன்படுத்துவது கிடையாதாம். சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருப்பவர்களும், உப்பு, பசும் பால், தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
    புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருவக்கரையில் சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது
    புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருவக்கரையில் சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி இங்குள்ள வக்ர காளியம்மனுக்கு காலையில் 1008 சங்காபிஷேகமும், இரவு ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. இரவில் முத்துப்பல்லக்கில் வக்ர காளியம்மன் வீதி உலாவும் நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு 1008 பால்குட அபிஷேகமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய தலைமை குருக்கள் சேகர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ×