search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி"

    • வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது.
    • பக்தர்கள் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 52-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மங்கள இசையு டன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அலங்கா ரத்துடன் தீபாராதனை செய்து வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி சித்தர் பீட வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியை பக்தர்களுக்கு கஞ்சி கலயங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பல லட்சம் பக்தர்கள் கஞ்சி கலயங்களை கையில் சுமந்தபடி சென்று கருவறை முன்பாக ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு பின்னர் பள்ளி வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கொப்பரை பாத்திரத்தில் ஊற்றினர். அது சமத்துவ கஞ்சியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    காலை 9 மணி அளவில் அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதி பராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்திருந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து 10.15 மணியளவில் ஆதிபராசக்தி கருவறை முன்பு இருக்கும் சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பால் அபிஷேகம் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ரெயில்வே பொது மேலாளர் ஜெயந்த், முன்னாள் தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, முன்னாள் நீதிபதி முருகேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆடிப்பூர தினமான இன்று சனிக்கிழமை காலை 3 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கருவறை முன்பாக உள்ள சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    நிகழ்ச்சிகளில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், வேளாண்மை கல்லூரி தாளாளர் உமா தேவி ஜெய்கணேஷ், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில் குமார், டாக்டர் மதுமலர், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் வழிகாட்டு தலில் இயக்கத்தின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மன்றங்கள் மற்றும் சக்திபீடங்களை சார்ந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரஸ்வதி, சதாசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பெரிய வேப்ப மரத்திலிருந்து சுவைமிக்க பால் வடிய ஆரம்பித்தது.
    • உலகில் சிறந்தது தாயன்பு. ஒருவனை மற்றவர்கள் எப்படி நேசித்தாலும் தாயின் அன்பிற்கு ஈடு இணை கிடையாது.

    மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி 'சுயம்புவாய்' தோன்றி இருக்கிறாள். சென்னையில் இருந்து 92 கிலோ மீட்டரில் இத்தலம் உள்ளது. இங்கு இருபத்தொன்று சித்தர்கள் ஜீவ சமாதியுடன் ஆதிபராசக்தியின் கோவில் அமைந்துள்ளது. இதனால் இதனை சித்தர் பீடம் என்று கூறுகிறார்கள்.

    சித்தர்கள் சாதி, சமயம் என்ற எல்லையினைக் கடந்தவர்கள். ஆதலால் மருவத்தூரில் சாதி, சமயம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் அன்னையை வழிபடலாம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ள இடத்தில் ஒரு பெரிய வேப்பமரம் கொப்பும் கிளையுமாக வளர்ந்திருந்தது. அதன் அடியில் பிரம்மாண்டமான புற்று ஒன்றும் இருந்தது. ஒருநாள் அந்தப் பெரிய வேப்ப மரத்திலிருந்து சுவைமிக்க பால் வடிய ஆரம்பித்தது. தொடர்ந்து பல நாட்கள் வழிந்து கொண்டேயிருந்த அந்தப் பாலை குடித்து பல பேர் பயன் பெற்றார்கள்.

    1966-ம் ஆண்டு ஒருநாள் அடைமழையும் காற்றும் புயலுமாகி தமிழகத்தையே உலுக்கியது. அப்பொழுது அந்தப் பால் வடியும் வேப்ப மரமும் வேரோடு பெயர்ந்து விழுந்தது. வீழ்ந்த அந்த வேப்பமரத்தின் வேர்களுக்கு அடியிலிருந்து இந்த மானுடத்தையே ஈன்றெடுத்த அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக எழுந்தருளினாள். அந்த இடம் தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலின் இன்றைய கருவறையாகும்.

    கருவறைக்குச் சென்று கண்குளிர அம்மனை தரிசிக்கும் பேறு எல்லோருக்கும் கிடைக்கிறது. பங்காரு அடிகளாரை மேல்மருவத்தூர் சித்தர் பீட ஆன்மீக குருவான இவரை 'அம்மா' என்று அன்போடு அழைக்கிறார்கள். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா உள்பட பல நாடுகளில் கூட செவ்வாடை பக்தர்கள் இருக்கிறார்கள்.

    அனைத்து உயிரினங்களின் ரத்தம் சிவப்பு. இந்த ரத்தம் மன ஓட்டத்திற்கு எழுச்சி தரும். இந்த ரத்த பாதிப்புதான் செவ்வாடை ஆதிபராசக்தி பக்தர்கள் சிவப்பு ஆடை உடுத்துவதன் ரகசியம் இதுதான்.

    உலகில் சிறந்தது தாயன்பு. ஒருவனை மற்றவர்கள் எப்படி நேசித்தாலும் தாயின் அன்பிற்கு ஈடு இணை கிடையாது.

    உலகின் பொதுவார்த்தை அம்மா அவள் இயக்குகிறாள். நாம் இயங்குகிறோம். அவ்வகை அம்மா தான் மேல்மருவத்தூரில் உள்ளாள்.

    ஆடி மாதம் முழுவதும் குறிப்பாக ஆடிப்பூரத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.
    • சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மேல்மருவத்தூர் ஆதிப ராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி குரு பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தினர்.

    இந்த வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை 5 மணி அளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடி களார் தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடி களார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆதிபராசக்தி அம்மன் கருவறை முன்பு குரு மேடை, மற்றும் அதற்கான குரு யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.தொடர்ந்து அதற்கு முன்பாக ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 83 எண் வடிவில் சக்கரம் அமைத்து அதில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    கருவறை முன்பாக பஞ்சபூத சக்கரம் அமைத்து ஐந்து தலை நாகம் படம் எடுக்க அதனுள் கலசம் நிறுவப்பட்டு 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. புற்று மண்டபத்தின் முன்பாக வெற்றிலை அலங்காரத்தில் 3 நாகங்கள் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்டு அதில் டைமண்ட் வடிவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.

    புற்று மண்டப முன்புறத்தில் சமபக்க முக்கோண சக்கரங்கள் அமைத்து அதில் 9 முக்கோண வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    ஓம் சக்தி மேடை முன்பாக பிரபஞ்ச சக்கரம் அமைத்து அதில் ஒன்பது படிகள் அமைத்து அதில் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 8 திசைகள் வடிவில் சக்கரங்கள் அமைக்கப்பட்டு அதனுள் நவதானியம் பரப்பப்பட்டு சதுரம், வட்டம், டைமண்ட், ஐங்கோணம், முக்கோணம் ஆகிய வடிவங்களில் 12 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டு இருந்தது. மேலும் சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த யாக குண்டங்களில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வேள்வி பூஜை செய்தனர்.

    • 4-ந்தேதி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
    • ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 1008 கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று முக்கோணம், சதுரம், சாய் சதுரம், ஐங்கோணம், அறு கோணம், எண் கோணம், வட்டம், சூலம் ஆகிய வடிவங்களை உள்ளடக்கிய யாக குண்டங்கள் அமைப்பதற்காக குருபூஜை நடைபெற்றது.

    அதில் குரு போற்றி, விநாயகர் போற்றி, சக்தி மந்திரங்கள் படிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 1008 யாக குண்டங்கள் அமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான செவ்வாடை தொண்டர்கள் பணி செய்து தொண்டாற்றி வருகின்றனர்.

    இந்த சித்திரை பவுர்ணமி வேள்வி பூஜையானது மே 4-ந்தேதி காலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் தொடங்கி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் பங்காரு அடிகளாருக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட மன்றங்களின் பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    மே 5-ந்தேதி சித்ரா பௌர்ணமி அன்று மாலை 5 மணி அளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உலக நன்மைக்காக 1008 கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், வாசன், ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×