search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேல்மருவத்தூரில் 1008 யாக குண்டங்கள் அமைத்து வேள்வி பூஜை: பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்
    X

    மேல்மருவத்தூரில் 1008 யாக குண்டங்கள் அமைத்து வேள்வி பூஜை: பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்

    • வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.
    • சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மேல்மருவத்தூர் ஆதிப ராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி குரு பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தினர்.

    இந்த வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை 5 மணி அளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடி களார் தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடி களார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆதிபராசக்தி அம்மன் கருவறை முன்பு குரு மேடை, மற்றும் அதற்கான குரு யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.தொடர்ந்து அதற்கு முன்பாக ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 83 எண் வடிவில் சக்கரம் அமைத்து அதில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    கருவறை முன்பாக பஞ்சபூத சக்கரம் அமைத்து ஐந்து தலை நாகம் படம் எடுக்க அதனுள் கலசம் நிறுவப்பட்டு 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. புற்று மண்டபத்தின் முன்பாக வெற்றிலை அலங்காரத்தில் 3 நாகங்கள் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்டு அதில் டைமண்ட் வடிவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.

    புற்று மண்டப முன்புறத்தில் சமபக்க முக்கோண சக்கரங்கள் அமைத்து அதில் 9 முக்கோண வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    ஓம் சக்தி மேடை முன்பாக பிரபஞ்ச சக்கரம் அமைத்து அதில் ஒன்பது படிகள் அமைத்து அதில் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 8 திசைகள் வடிவில் சக்கரங்கள் அமைக்கப்பட்டு அதனுள் நவதானியம் பரப்பப்பட்டு சதுரம், வட்டம், டைமண்ட், ஐங்கோணம், முக்கோணம் ஆகிய வடிவங்களில் 12 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டு இருந்தது. மேலும் சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த யாக குண்டங்களில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வேள்வி பூஜை செய்தனர்.

    Next Story
    ×