search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Business"

    இன்றையச் சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இது.
    இன்றையச் சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழில்முனைவோர்கள் ஆண்களுக்கு இணையாக சாதனைகளை செய்திருக்கிறார்கள். கொரோனா பரவலுக்குப் பிறகு பல பெண்கள் தொழில் முனைவோராக மாறி வருகின்றனர்.

    அவ்வாறு புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இது.

    எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் முன் அனுபவம் முக்கியமானது. அல்லது சம்பந்தப்பட்ட தொழில் குறித்த குறுகிய கால பயிற்சியாவது பெற்றிருப்பது நல்லது. செய்யும் தொழில் குறித்த அடிப்படை தகவல்களை தெளிவாக அறிந்திருப்பது அவசியம். ‘முதலீடு போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்களை ஊழியர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற மனநிலை தொழில் வெற்றிக்கு அடிப்படையாக அமையாது.

    சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள், உற்பத்தித்துறை, விற்பனை பிரிவு, ஏஜென்சி, மொத்த விற்பனை, சேவைப்பிரிவு உள்ளிட்ட பல தொழில் பிரிவுகள் இருக்கின்றன.

    அவற்றிற்கேற்ப தொழில் உரிமம், பணியிடத்திற்கான உள்ளாட்சி அனுமதி, கட்டிட வாடகை ஒப்பந்தம் அல்லது உரிமை பத்திரம், தனிநபர் அல்லது தொழில்கூட்டாளிகள் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகள் முறையாக பெற்ற பின்பே எந்த ஒரு தொழிலிலும் காலடி எடுத்து வைக்கவேண்டும்.

    கல்வி என்பது அனைத்துக்கும் அடிப்படை ஆகும். எனவே பெண் தொழில் முனைவோர் குறைந்தபட்ச கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் பல சாதனையாளர்கள் ஆரம்ப பள்ளிப்படிப்பே பெறவில்லை என்பது உழைப்பின் அவசியத்தையும், அதன் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.

    அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை தொழில் முயற்சியாக பெண்கள் மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்றதற்கான அரசு சான்றிதழ் உள்ள நிலையில் வங்கி கடன், அதற்கான மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பெண்கள் தொழில் தொடங்க சுலபமான கடன் வசதி திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. அதனால் தொழில் தொடங்க விரும்புபவர்கள் அவர்களது திட்ட அறிக்கை, எந்திரங்களுக்கான மதிப்பீடு, தொழில் உரிமம், தொழில் நடக்கும் முகவரி, அனுபவச் சான்றுகள் உள்ளிட்ட தகவல்களை வங்கியில் அளித்து கடன் பெற்று தொழிலைத் தொடங்கலாம்.
    வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி விட்டு தயக்கங்களை விரட்டி அடுத்த அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும்.
    தொழில் நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய உலகில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அதிக அளவில் தொழில் முனைவோராக அவதாரம் எடுத்து வருகிறார்கள். அதில் ஆண்களை விட பெண்கள் சந்திக்கும் சவால்களே அதிகம். அதற்கான தீர்வுகள் பற்றி இங்கே பார்ப்போம்.

    தொழில் முனைவோராக வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வாடிக்கையாளர்கள், தொழில் துறை நண்பர்கள் என்று சமுதாயம் சார்ந்த வட்டாரத்தை விரிவுபடுத்துவது அவசியம். ஆனால் பல பெண்கள் தங்களை தாங்களே பாதுகாப்பு வளையத்திற்குள் அடைத்து கொள்வதால் அதை தாண்டி இதர விஷயங்களில் கவனம் செலுத்த தவறுகிறார்கள். வெகு சிலர் மட்டுமே அந்த வளையத்தை விட்டு வெளியேறி சமுதாயத்தை அணுகி வெற்றி பெறுகிறார்கள்.

    தொழில் சிறியதோ, பெரியதோ அதற்கான முதலீடு என்பது மிக முக்கியம். ஆனால் பல பெண்களுக்கு முதலீடு செய்வதற்கான பண வசதி அல்லது உதவிகள் கிடைப்பதில்லை. எனவே வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கான வழிகள் மற்றும் அரசு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி உதவியை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.

    குடும்பம், தொழில் என இரண்டு விஷங்களையும் சமமாக கவனிக்க வேண்டிய அவசியம் பெண் தொழில் முனைவோருக்கு உள்ளது. பெரும்பாலான பெண்கள் குடும்ப உறவுகள் இதை சார்ந்த விஷயங்கள் என்று குடும்பத்தின் பாசப்பிணைப்புக்குள் தங்களை முடக்கி கொள்கிறார்கள். குடும்பமா, தொழிலா என்ற நிலையில் குடும்பம் தான் இறுதியில் வெற்றி பெறுகிறது. அதனால் பலரும் தொழிலை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். எனவே தன்னம்பிக்கையோடு குடும்பத்தையும் தொழிலையும் சமன் செய்து கொண்டு செல்லும் திறமையை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன. எனவே எந்த ஒரு சூழலிலும் மற்றவர்களின் உதவிக்காக காத்திருக்காமல் தங்களை தற்காத்துத்கொள்ளும் திறன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

    வெற்றி என்ற எண்ணம் மட்டுமே நம்மை உயர்த்திவிடாது. வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி விட்டு தயக்கங்களை விரட்டி அடுத்த அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும்.

    மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இது, பெண்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் ஆகும்.
    பண்டைகாலத்தில் மாடுகள் மூலம் செக்கிழுத்து எண்ணெய் தயாரிக்கப்பட்டது. இதனால் நம் முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் காலப்போக்கில் செக்குகள் காணாமல் போய் விட்டன. அதாவது, செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கப்படும் முறை அழிந்து போனது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை பயன்படுத்தியதன் விளைவாக, பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தற்போது மீண்டும் பழைய முறையில் தயராகும் எண்ணெய்களை பயன்படுத்த மக்கள் தொடங்கி விட்டனர். அதன்படி கல் செக்கு, மரச்செக்குகளால் தயாரிக்கப்படுகிற எண்ணெய் வகைகளை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

    எனவே மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இது, பெண்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் ஆகும். வீட்டில் ஒரு அறையை தேர்ந்தெடுத்து கூட மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கலாம். தொழில் தொடங்க இருக்கும் இடத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் மரச்செக்கு வைத்துள்ளார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களை பாதிக்காத வண்ணம் உற்பத்தி அளவு அறிந்து, மக்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தொழில் ஆரம்பிக்கும் இடத்தில் மின்சார வசதி எப்படி உள்ளது என்று முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இதற்கு காரணம், எண்ணெய் செக்கினை இயக்க 3 எச்.பி. மோட்டார் வேண்டும். ஒரு செக்குக்கு 10-க்கு 15 அடி இடமாவது அவசியம் தேவை. தேங்காய், எள் போன்றவற்றை வெயிலில் காய வைக்க இடவசதி இருக்க வேண்டும்.

    செக்கு எந்திரத்தின் விலை சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை ஆகும் நல்லெண்ணெய்க்கும், கடலை எண்ணெய்க்கும் 1 லிட்டர் எண்ணெய் எடுக்க சுமார் 2 3/4 கிலோ முதல் 3 கிலோ மூலப்பொருட்கள் தேவைப்படும். பொருளின் தரத்திற்கேற்ப இந்த அளவுகள் மாறுபடும். ஒரு நாளைக்கு 80 கிலோ கடலையை செக்கில் போட்டு ஆட்டினால், சுமார் 30 கிலோ எண்ணெய் மற்றும் 50 கிலோ புண்ணாக்கு கிடைக்கும்.

    நாம் கலப்படமின்றி, தரமான மூலப்பொருட்களை போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும்போது அதிக விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக 1 லிட்டர் கடலை எண்ணெய் சந்தையில் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், நாம் ரூ.250-க்கு விற்க வேண்டியிருக்கும். குறைந்த விலையில் தரமற்ற எண்ணெய்யை வாங்கி கொண்டிருக்கும் மக்களிடம் நம்முடைய எண்ணெய்யின் தரத்தை எடுத்துக்கூறி வாங்க வைக்க வேண்டும். இதில் தான் நம்முடைய தொழில் ரகசியம் உள்ளது.

    மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றாற்போல எண்ணெய் தயாரித்து கொடுக்க வேண்டும். நம்முடைய பொருளின் தரத்தையும் தெரியப்படுத்தலாம். இதனால் மக்களுக்கும், நமக்குமான தொடர்பு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். மக்கள் சந்தேகங்கள் கேட்டால் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி தெளிவு படுத்தவேண்டும்.

    மரச்செக்கால் எண்ணெய் தயாரிக்கும்போது, முழுமையாக எண்ணெயை விதைகளில் இருந்து பிரிக்க முடியாது. 100-க்கு 80 சதவீதம் எண்ணெயை தான் பிழிந்து எடுக்க முடியும். மீதமுள்ள 20 சதவீதம் எண்ணெய் சத்துக்கள் புண்ணாக்கில் தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் இதுதான் சரியானது. ஏனெனில், நமக்கு 80 சதவிகிதமும் இதை சாப்பிடும் மாட்டுக்கு 20 சதவீதமும் சத்துக்கள் கிடைக்கும்.

    இந்த புண்ணாக்கை சாப்பிடும் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணையை உட்கொள்வதன் மூலம் நம்முடைய உடல் நலமும் ஆரோக்கியமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிப்பதன் மூலம் குறைந்த பட்சம் மாதத்துக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். மகளிர் மட்டுமின்றி வேலையில்லாத இளைஞர்களுக்கும் இது ஒரு சிறந்த தொழில் ஆகும்.
    பல்வேறு துறைகளில் பெண்களால் சுய தொழிலில் ஈடுபட முடியும். அத்துறைகள் பெண்களுக்கு தொழில் வாய்ப்பை வாரி வழங்குகின்றன. அவை என்ன என்பதை பார்ப்போம்.
    இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன. இந்தியாவில் ஏராளமான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுயதொழில் தொடங்கி இன்றைக்கு பெரும் தொழில் அதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் வேலைக்கு செல்லத்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

    சுயதொழில் செய்து ஆண்களை போல பெண்களாலும் தொழில் அதிபராக உயர்ந்து சமூக அந்தஸ்தை பெற முடியும். சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் பெண்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். நமது சமூகம் ஆணாதிக்க சமூகமாக திகழ்வதால் பல்வேறு இடர்பாடுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த இடர்பாடுகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.

    தேர்ந்தெடுக்கும் தொழிலை முறையாக பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஓரளவு அனுபவம் கிடைக்கும். அத்துடன் நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் தங்களை முழுமையாக நம்ப வேண்டும். அதற்கான துணிச்சலும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.

    பல்வேறு துறைகளில் பெண்களால் சுய தொழிலில் ஈடுபட முடியும். அத்துறைகள் பெண்களுக்கு தொழில் வாய்ப்பை வாரி வழங்குகின்றன. அவை என்ன என்பதை பார்ப்போம்.

    கம்ப்யூட்டர் ஹார்டுவேர்டு, ஏற்றுமதி, மல்டிமீடியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் உற்பத்தி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், சுற்றுலாத்துறை, பிளாஸ்டிக் உற்பத்தி, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, உணவு பதப்படுத்துதல், பூ அலங்காரம், வீட்டு அலங்காரம், மூலிகைகள் தயாரித்தல், மூலிகைகளை விற்பனை செய்தல், கல்வி மையங்கள் நிறுவுதல், இயற்கை உரம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான சுய தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கு இன்றைக்கு கொட்டிக் கிடக்கின்றன.

    இத்தொழில்களை எல்லாம் ஏராளமான பெண்கள் செய்து நிறைய வருமானம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு சுயதொழில் தொடங்க பட்டப்படிப்பு எல்லாம் தேவையில்லை. பட்டப்படிப்பு இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்று பல பெண்கள் தவறான கருத்தை கொண்டு இருக்கின்றனர். ஓரளவு எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. சுய தொழில் செய்வதற்கு தொழில் சார்ந்த அறிவும், நிர்வாக திறமையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும்தான் அவசியமான தேவைகள்.
    ஆடைகள் வடிவமைப்பு தொழிலில் ஆடைகள் மட்டுமின்றி வீட்டிற்கு தேவைப்படும் அலங்காரப்பொருட்கள், படுக்கை அறை, சமையல் கூடத்திற்கு தேவைப்படும் பொருட்களும் அடங்கும்.
    இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தொழில்களில் ஆடைகள் வடிவமைப்புத் தொழில் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, கவர்ச்சியான வகையில் ஆடைகளை வடிவமைப்பதே ஆடைகள் வடிவமைப்புத் தொழிலாகும். மற்ற தொழில்களை காட்டிலும் ஆடைகள் வடிவமைப்புத் தொழில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆடைகள் வடிவமைப்புத் தொழிலானது காலத்திற்கு ஏற்றவாறும், நாகரீகம் வளர வளரவும் மாறும் தன்மையைக் கொண்டது.

    ஆடைகள் வடிவமைப்புத் தொழிலுக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் செல்வந்தர்களே. பணம் படைத்த செல்வந்தவர்கள் சாதாரண குடிமக்களை விட தங்களை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற் காகவும், வகைவகையான கண்ணைக்கவரும் வகையில் ஆடைகளை அணிந்து மற்ற வர்களை கவரவேண்டுமெனவும் விரும்புவர். இதுவே ஆடைகள் வடிவமைக்க முக்கிய காரணமாக உருவெடுத்தது. மனித இனத்திற்கு தேவைப்படும். உணவு, உடை, இருக்கையில் உடையானது முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒரு மனிதன் அணிந்துள்ள உடையின் அடிப்படையிலே சமுதாயத்தில் அவனது மதிப்பும், மரியாதையும், அளவிடப்படுகிறது. ஆள்பாதி ஆடை பாதி என்ற பழமொழியே இதற்கு சான்றாகும்.

    ஆடைகள் வடிவமைப்பதை செல்வந்தர்கள் அணியும் ஆடைகள், சாதாரண நடுத்தர மக்கள் அணியும் ஆடைகள் என இருவகையாகப் பகுக்கலாம். மிக உயர்ந்த விலையுள்ள துணிகளைக் கொண்டு சரியான அளவுடன் தரமான தொழில்நுட்ப பணியாளர்களால் செல்வந்தருக்கென ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய ஆடைகள் மிக குறைவான எண்ணிக்கையில்தான் தயாரிக்கப்படுகிறது. பொதுவான அளவை அடிப்படையாகக் கொண்டு சாதாரணமான விலையுள்ள துணிகளை கொண்டு மிக அதிக அளவில் சாதாரண அல்லது நடுத்தர மக்கள் அணியும் ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.

    ஆடைகள் வடிவமைப்பு தொழிலில் ஆடைகள் மட்டுமின்றி வீட்டிற்கு தேவைப்படும் அலங்காரப்பொருட்கள், படுக்கை அறை, சமையல் கூடத்திற்கு தேவைப்படும் பொருட்களும் அடங்கும். தற்போது இந்தியாவில் ஆயத்த ஆடைகள் மற்றும் அதன் தொடர்பான இதர பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20,000 ஆகும். இவற்றில் 300 தொழிற்சாலைகள் மிகப்பெரிய அளவில் ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும்.

    துணிகளை வடிவமைத்தல், எம்பிராய்டரி போடுதல், தைத்தல், பல்வேறு நாடு களுக்கும் இந்தியாவிற்குள்ளும் துணிகளை அனுப்புதல் போன்ற பணிகளில் பலர் ஈடுபடுவதால் ஆடைகள் வடிவமைப்புத் தொழில் இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்குவதுடன், பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழிலாகவும் திகழ் கிறது.

    இந்திய ஆடைகள் வடி வமைப்புத் தொழில், வருங் காலத்தில் 10 முதல் 15 சதவீத வளர்ச்சி அடையுமென இத் தொழில் தொடர்பான வல்லு நர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஆடைகளுக்கு உலக அளவில் தற்போது அதிக வரவேற்பு உள்ளது. இந்தியாவில் இத்தகைய ஆடைகளின் தயாரிப்பு மட்டும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 300 பில்லியன்களாக இருக்கும் எனவும் இதன் தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆடைகள் வடிவமைப்பு தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மேன் மேலும் வளர்ச்சி அடைவதற்கும், வளர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்கவும் இத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு பிரச் சினைகளையும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. நாகரீகம் வளர்ச்சி அடைவதற்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய டிசைன்களை உருவாக்குவது ஆடைகள் வடிவமைப்புத் தொழிலின் முக்கிய அம்சமாகும். ஒரே டிசைனில் அமைந்த ஆடைகளை தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மக்கள் அணிய விரும்பு வதில்லை.

    வெளிநாடு களில் ஆடைகள் வடிவமைப் பில் அவ்வப் போது புதிய டிசைன்கள் உருவாகிறது. இதுபோன்று புதிய டிசைன்களை இந்தியாவில் உருவாக்க குறைந்தது 5 அல்லது 10 ஆண்டு களாகிறது. உதாரணமாக இந்தி யாவில் பல நூற்றாண்டு காலமாக சேலைதான் பெண்கள் விரும்பி அணியும் ஆடையாக இருந்தது.

    பல ஆண்டுகளுக்கு பின் சுடிதார், சல்வார் கமிஸ் போன்ற ஆடைகள் உருவாக்கப்பட்டு தற்போது பெண்களால் விரும்பி அணியும் ஆடையாகத் திகழ்கிறது. பல ஆண்டுகள் முடிவுற்ற பின்னரும் அவற்றிற்கு மாறாக புதிய டிசைன் கொண்ட ஆடைகள் இந்தியாவில் இதுவரை வடிவமைக்கப்பட வில்லை.

    எனவே புதிய டிசைன்களில் ஆடைகளை அவ்வப்போது வடிவமைத்து உலக அளவில் அதிக அளவில் விற்பனை செய்யும் நாடுகளைவிட இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆடைகளை வடிவமைப்பது ஒரு நுட்பமான பணியாகும். போதிய பயிற்சி அனுபவம் இல்லாதோர் இத்தொழிலில் ஈடுபட இயலாது. இதற்கென முறையாக அங்கீ கரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து, பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட முடியும். மக்களால் விரும்பி அணியும் ஆடைகளை வடிவ மைக்கும் அனுபவம் மிக்க தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இன்று உலக அளவில் அதிக வரவேற்பு உள்ளது.
    பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியதற்கு உலக வங்கி தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex #JimYongKim
    புதுடெல்லி:

    தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது. 

    கடந்த 2004-ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது. கடந்த (2017) ஆண்டில் மேலும் 30 இடங்கள் முன்னேறி டாப்- 100 நாடுகளில் ஒன்றாக உயர்ந்தது.

    கடந்த 31-10-2018 அன்றுஉலக வங்கி வெளியிட்ட இந்த (2018) ஆண்டுக்கான சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது.

    மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் அளவில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இந்த அபரிமிதமான முன்னேற்றத்தின் மூலம் தெற்காசியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளில் முதலிடத்தையும் இந்தியா தற்போது பிடித்துள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியதற்கு உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

    சுமார் 125 கோடி மக்கள்தொகையை கொண்டுள்ள இந்தியா மிகவும் குறுகிய காலத்தில் இந்த மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றதற்காக தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டதாக டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex #JimYongKim
    புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பாராட்டு விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசினார். #narayanasamy #puducherrygovernment

    புதுச்சேரி:

    அகில இந்திய வணிகர் சம்மேளன துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கருக்கு பாராட்டு விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.

    புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், பழனி அடைக்கலம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பாலு வரவேற்றார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசங்கருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார். அவர் பேசும்போது:-

    புதுவை வியாபாரிகள் தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அரசுக்கு வரியாக செலுத்துகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அரசின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறார்கள். புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

    விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தெற்குமாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்குமாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு விசுவநாதன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர், பா.ம.க. முன்னாள் எம்.பி. தன்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சி தேவபொழிலன், தமிழ்ச்சங்க தலைவர் முத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கூட்டமைப்பின் துணைத்தலைவர்கள் பாபு, அன்பழகன், சரவணன், கணேசன், ஆறுமுகம், அனில்குமார், கலீல் ரகுமான், சித்திக்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கமணி நன்றி கூறினார்.  #narayanasamy #puducherrygovernment

    தேனி அருகே வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    தேனி அரண்மனைபுதூர் முல்லைநகரை சேர்ந்த செந்தில்ராமன் மனைவி வித்யா (வயது36). இவரும் சமதர்மபுரம் பி.டி.ஆர். தெருவை சேர்ந்த வீரமணிகண்டன் (33) என்பவரும் கூட்டாக ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தனர். இதில் வித்யாவிற்கு உரிய பங்கு தொகையை செலுத்தவில்லை என அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் முருகேசனும், வீரமணிகண்டனும், வித்யா வீட்டிற்கு சென்று அவரை தாக்கினர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    கூடலூர் அருகில் உள்ள வெட்டுக்காடு ஊமையன்தொழு பகுதியை சேர்ந்தவர் மணி (55). இவர் தனது மருமகன் ராஜசேகர் (38) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு ராஜசேகரன் கேட்டு வந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இரவு தோட்டத்தில் புகுந்த ஒரு கும்பல் மணியை தாக்கி காயப்படுத்தி சென்று விட்டனர். இது குறித்து அவர் குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×