search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bull"

    • சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.
    • ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.

    இந்த விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.80 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.70 ஆயிரம் என 40 பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் எருது விடும் விழாவில் சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.

    மேலும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு்பட்டனர். 

    • காளைகளை பிடிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் பின் தொடர்ந்து ஓடினர்.
    • பலத்த காயம் அடைந்த அந்த காளை பரிதாபமாக உயிர் இழந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

    அப்போது வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த 2 காளைகள் திடீரென போட்டி நடைபெறும் இடத்தை விட்டு வெளியே ஓடியது. வேகமாக ஓடிய காளைகள் திருச்சி சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.

    காளைகளை பிடிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் பின் தொடர்ந்து ஓடினர். அப்போது ஒரு காளை மாடு பாலத்தின் வழியாக ஓடிய போது தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த காளை பரிதாபமாக உயிர் இழந்தது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காளையின் உரிமையாளர் அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பது தெரியவந்தது.

    ஜல்லிக்கட்டில் காளை ஒன்று உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஜல்லிக்கட்டில் காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வீரர்கள் காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்தது.

    முன்னதாக இந்த ஜல்லிக்கட்டில் 542 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

    இந்தப் பணிகளை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் ஏழும்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் செரீப் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    கியூ ஆர் கோடு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இதேபோல் திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் வீரர்களை முட்டி காயம் ஏற்படாமல் இருப்பதற்காக மாடுகளின் கொம்புகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ரப்பர் பொருத்தியிருந்தனர்.

    • வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளை அருகில் இருந்த விவசாய நிலத்தின் கிணற்றில் விழுந்து இறந்தது.
    • அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டி ராமநாதபுரம் பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

    இந்த போட்டியில் மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, காயல்பட்டி, தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன.

    மாடுகளை பிடித்து வீரர்கள் தங்களது வீரத்தை காட்ட மாடுபிடி வீரர்கள் அதிக ஆர்வதத்துடன் விளையாடினர். இதனை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

    இதையடுத்து வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் படிக்க முயன்றனர். அப்போது ஒரு காளை அருகில் விவசாய நிலத்திற்கு சென்றது. அப்போது அங்கிருந்த கிணற்றில் விழுந்து அந்த காளை இறந்தது. இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏாளமானோர் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அங்கு வந்த மங்களபுரம் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசார் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டி அனுமதியின்றி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நாங்கள் அங்கு விரைந்து சென்று போட்டியை தடுத்து நிறுத்திணோம். காளை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம், அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

    • பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையின் முன்னாள் முதலமைச்சரும், இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டி கிராமத்திலுள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளி மாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டில் ஆர்வம் உள்ள செந்தில் தொண்டமான் தன்னுடைய காளைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைப்பது வழக்கம். அவருடைய காளைகள் பரிசுகளை குவித்து நம்பர் ஒன் காளைகளாக திகழ்ந்து வருகின்றன.

    பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார். சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை, பெருத்த திமில், கூரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பீரமாக வலம் வரும் இந்த காளைகள் களத்தில் வீரர்களை மிரள வைக்கும் அளவிற்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார் செந்தில் தொண்டமான்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக எனது தோட்டத்திலேயே வாடிவாசல் ஏற்பாடு செய்து அதன் வழியாக பாய்ந்தோட பயிற்சி வழங்குதல், சீறிப்பாய்ந்து மணற்மேடுகளை முட்டுதல், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தனி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காளையின் உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருள்களை வழங்குகின்றோம்.

    காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் பேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு கூடிய பராமரிப்பும் தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘ஹாரன்’ அடித்தால் முகப்பு விளக்கை உடைத்து சேதமாக்குகிறது.
    • பொதுமக்கள் யாரேனும் விரட்ட நினைத்தாலும் முடியாது.

    திருவொற்றியூர் :

    சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பெரியார் நகர் முதல் திருவொற்றியூர் மார்க்கெட் வரை காளை மாடு ஒன்று பல நாட்களாக சுற்றித்திரிகிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் இந்த காளை மாடு, வேண்டுமென்றே அந்த வழியாக செல்லும் பஸ்களை வழி மறித்து நடுரோட்டில் நிற்கும்.

    அருகில் உள்ள பொதுமக்கள் யாரேனும் விரட்ட நினைத்தாலும் முடியாது. சுமார் 2 அல்லது 3 நிமிடங்கள் வரை சாலையின் குறுக்கே பஸ்சை வழிமறித்து நின்றுவிட்டு பின்னர் தானாகவே அங்கிருந்து விலகி சென்று பஸ்களுக்கு வழி விடுகிறது. காளை மாட்டின் இந்த வம்பு, பல நாட்களாக தொடர்ந்து வருகிறது.

    அந்த காளை மாட்டை பற்றி தெரிந்த டிரைவர்கள், பஸ்சை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் தெரியாத பஸ் டிரைவர்கள், பஸ்சை திருப்பிச்செல்லும் நோக்கில் தொடர்ந்து இயக்கினாலோ அல்லது 'ஹாரன்' அடித்தாலோ கோபம் அடையும் காளை மாடு, பஸ்சின் முகப்பு விளக்குகளை தலையால் முட்டி இடித்து சேதமாக்கிவிடுகின்றது.

    வம்பு செய்யும் இந்த காளை மாட்டை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் காளை மாட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×