search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை கிணற்றில் விழுந்து பலி- அதிகாரிகள் விசாரணை
    X

    அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை கிணற்றில் விழுந்து பலி- அதிகாரிகள் விசாரணை

    • வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளை அருகில் இருந்த விவசாய நிலத்தின் கிணற்றில் விழுந்து இறந்தது.
    • அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டி ராமநாதபுரம் பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

    இந்த போட்டியில் மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, காயல்பட்டி, தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன.

    மாடுகளை பிடித்து வீரர்கள் தங்களது வீரத்தை காட்ட மாடுபிடி வீரர்கள் அதிக ஆர்வதத்துடன் விளையாடினர். இதனை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

    இதையடுத்து வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் படிக்க முயன்றனர். அப்போது ஒரு காளை அருகில் விவசாய நிலத்திற்கு சென்றது. அப்போது அங்கிருந்த கிணற்றில் விழுந்து அந்த காளை இறந்தது. இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏாளமானோர் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அங்கு வந்த மங்களபுரம் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசார் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டி அனுமதியின்றி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நாங்கள் அங்கு விரைந்து சென்று போட்டியை தடுத்து நிறுத்திணோம். காளை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம், அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

    Next Story
    ×