search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bison"

    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
    • நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேலும் வனவிலங்குகள் அனைத்தும் தற்போது வனப்பகுதியை விட்டு மக்கள் வசிக்கக்கூடிய நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை ஜான் ஸ்கொயர் சத்யா பர்னிச்சர் பகுதியில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் சென்றனர்.இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காட்டெருமைகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி லுக் சர்ச் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2 காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன. திடீரென 2 காட்டெருமைகளும் சண்டையிட்டு கொண்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெகுநேரமாக சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது எனவும், நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் வனவிலங்குகள் தானாகவே சென்றுவிடும் என அறிவுரை கூறினர்.

    • கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
    • தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்த கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் விளை நிலங்களில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டு விட்டனர்.

    மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமைகளால் தேயிலை தோட்டங்களுக்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

    சம்பவத்தன்று மஞ்சூர் அருகே மேல்குந்தா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

    இதை கண்ட தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை விட்டு விட்டு தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இதேபோல் நேற்று மஞ்சூர் ஊட்டி சாலையில் நுந்தளா மட்டம் பகுதியில் 3 காட்டெருமைகள் சாலையோரத்தில் நீண்ட நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பயணித்தனர்.

    மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • குமாரபாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
    • காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்ந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படை யினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது.

    டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் இந்த பகுதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.


    இது குறித்து நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பெருமாள் கூறுகையில், இந்த காட்டெருமை ஏற்காடு பகுதியில் இருந்து மெல்ல மெல்ல இந்த பகுதிக்கு வந்துள்ளது.

    ட்ரோன் கேமரா மூலமும் தேடி வருகிறோம். இப்பகுதியில் கரும்பு தோட்டங்கள் அதிகம் உள்ளதால் அதற்குள் புகுந்துள்ளது. விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.

    இதனிடையே காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று காட்டெருமையை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காட்டெருமை சக்திய மங்கலம் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

    • தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
    • தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

    வால்பாறை

    வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் ெதாழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

    பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகே சென்றது. அங்கு தண்ணீர் குடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக காட்டெருமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனசரகர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமையை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அந்த தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெருமையை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை வனத்தில் விட்டனர்.

    • காட்டெருமை கீழே விழுந்ததில் நடக்க முடியாத நிலையில் உள்ளது.
    • உடலும் மெலிந்து காணப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்னல் ரெயில்வே நிலையம் பகுதியில் காட்டெருமை கீழே விழுந்ததில் அடிபட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது. உடலும் மெலிந்து நடக்க முடியாத நிலை காணப்படுகிறது

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என சமுக ஆர்வலர்கள் குற்றசாட்டுகின்றனர். எனவே வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 பேரை பிடிக்க வனத்துறை வேட்டை
    • கறியை பறிமுதல் செய்தனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள வலசை இந்திராநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் வலசை மலைப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டு எருமையை வேட்டையாடி அதனை கூறு போட்டு சுமார் 15 கிலோ கறியை அவர்களது வீட்டினில் காய வைத்திருப்பதாக வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து வனசரகர் ராமநாதன் தலைமையில் இந்திரா நகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு அதிரடியாக சென்ற வனத்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். வீட்டினுள் காட்டெருமை கறியை துணி காய வைப்பது போல் காய வைத்திருந்தனர்.

    இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்டெருமை கறியை பறிமுதல் செய்தனர்.

    வனத்துறையினர் வரும் தகவல் அறிந்து 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    • காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
    • வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு வனசரகத்தில் யானை, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    நடு ஹட்டி கிராமத்ைதயொட்டிய தேயிலை தோட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை தோட்டத்திற்குள் காட்டெருமை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    வனசரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர். பின்னர் காட்டெருமை இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தேயிலை தோட்டம் வழியாக செல்லும் மின்கம்பி, அறுந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்ட பகுதியில் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அப்போது தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை எதிர்பாரத விதமாக மின்சார கம்பியில் மோதி இறந்துள்ளது என்றனர்.

    இதையடுத்து வனத்துறையினர் இன்று காலை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இறந்த காட்டெருமையின் உடலை உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×