search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் குடியிருப்பு அருகே சண்டையிட்டு கொண்ட காட்டெருமைகள்
    X

    கோத்தகிரியில் குடியிருப்பு அருகே சண்டையிட்டு கொண்ட காட்டெருமைகள்

    • வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி லுக் சர்ச் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2 காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன. திடீரென 2 காட்டெருமைகளும் சண்டையிட்டு கொண்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெகுநேரமாக சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது எனவும், நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் வனவிலங்குகள் தானாகவே சென்றுவிடும் என அறிவுரை கூறினர்.

    Next Story
    ×