search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike accident"

    • மதுரை அருகே லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள மூனாண்டிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மகாதேவன் (32). இவர் திருமங்கலம்- செக்கானூரணி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கரடிக்கல் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகாதேவன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி சந்தியா கொடுத்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் கீழஉரப்பனூரை சேர்ந்த வேன் டிரைவர் பாஸ்கரன் மகன் பரண் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் 60 அடி ரோடு இருதயராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜம்புரோபுரம் மார்க்கெட்டில் முருகேசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி பாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காசிம் சாலையை சேர்ந்தவர் முகம்மது ஷரீப். இவரது மகன் முகமது ஷமீர் (வயது 27) சென்னையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் பணியாற்றி வந்தார்.

    சில நாட்களாக வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இவர் மோட்டார் சைக்கிளில் இரவு டிபன் சாப்பிடுவ தற்காக புதுவை பஸ் நிலையம் அருகே சென்றார், அவருக்கு பின்னால் வேறோரு வாகனத்தில் அவரது நண்பர் முகமது பைசல் சென்றுள்ளார்.

    மறைமலையடிகள் சாலையில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சென்றபோது நெல்லித்தோப்பு சிக்னலில் முகமது ஷமீர் அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி முகமது ஷமீர் கீழே விழுந்துள்ளார்.

    இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அவரது நண்பர் முகமது பைசல் உடனே அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய போது பரிதாபம்
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. அவரது மனைவி வசந்தா (வயது 55).

    இவர், சம்பவத்தன்று தக்கோலம் அருகே உள்ள மாரிமங்கலம் கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    பின்னர், வசந்தா வீட்டிற்கு வருவதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    கடம்பநல்லூர் -பரமேஸ்வரமங்களம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது திடீரென் மோட்டார் சைக்கிளில் இருந்து வசந்தா கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து இறந்தார்
    • திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார்

    ஆரணி:

    ஆரணி அடுத்த குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் சென்னையில் சினிமாவில் லைட் மேனாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு சரண்யா என்ற மனைவியும் சரண்ராஜ் என்ற மகனும் உள்ளனர். திருவிழாவிற்காக தனது கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஆரணிக்கு சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விண்ண மங்கலம் கூட்ரோடு அருகே வரும்போது முன்னால் சென்ற மினி ஆட்டோ சாலையில் வலது பக்கமாக திரும்பியது.

    பின்னால் தயாநிதி ஒட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மினி ஆட்டோ மீது மோதியது. இதில் அவர் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் தயாநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேடை அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார்
    • புதுவை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    திருவள்ளுர் மாவட்டம் திருவெற்றியூர் காலடிப்பேட்டை சாத்தான்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன்.

    இவரது மகன் ஹரிகரன் (வயது 24) மேடை அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கண்ணன் குடும்பத்துடன் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், அதிகாலை ஹரிகரன் தனது மோட்டார் சைக்கிளில் அவருடைய நண்பர் சுந்தராஜீலு (வயது 25) என்பவருடன் புதுவை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அரியாங்குப்பம் புதிய பாலம் அருகே வந்த போது ஹரிகரன் மோட்டார் சைக்கிள் பாலத்தின் நடு தடுப்பு கட்டையில் மோதியது.

    இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி ஹரிகரன் உயிரிழந்தார், சுந்தராஜிலு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தெற்கு பிரிவு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சர்வீஸ் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பள்ளிகொண்டா நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஹரி (வயது 52) பள்ளிகொண்டா பேரூராட்சி 10-வது வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார்.இவருடைய மனைவி பிரேமா பள்ளி கொண்டா பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    ஹரி நேற்று மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி வந்தார்.

    விரிஞ்சிபுரம் அடுத்த மேல்மொணவூர் சர்வீஸ் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது கருகம்புத்தூரை சேர்ந்த மணி என்பவர் பைக்கில் வந்தார் அவரது பைக் நிலை தடுமாறி ஹரி மீது மோதியது.

    இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தி.மு.க பிரமுகர் ஹரி இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக்கில் புதுவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மஞ்சக்கு ப்பத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 24) இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு தற்சமயம் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான சுந்தராஜுலு (வயது 25) ஆகியோர் பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அரியாங்குப்பம் புதிய பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பேரிகேட் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஹரிகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தராஜுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஹரிஹரன் கண்களை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.

    விபத்து சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், திருவத்திபுரம், ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சேரன் (வயது 56). அரசு ஊழியர்.

    நேற்று வேலை முடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் செய்யாறு சாலை வழியாக கன்னியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சேரன் வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற ரோடு ரோலர் வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் கீழே விழுந்து தலை மற்றும் கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேரனை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆற்காடு ரத்தனகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சேரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சேரன் அக்கா மகன் செந்தில்குமார் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பைக் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஒருவர் சம்பவ இடத்தி லேயே பலியானார்.
    • மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செம்பட்டி:

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் கோபால் (வயது48). இவர் தனது மகன் மணிகண்ட பிரபுவுடன் மோட்டார் சைக்கிளில் கன்னிவாடியில் உள்ள உறவினரை பார்க்க சென்றார்.

    செம்பட்டி அருகே பழனி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கோபால் சம்பவ இடத்தி லேயே பலியானார்.

    காயங்களுடன் மீட்க ப்பட்ட மணிகண்டபிரபு திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரி யில் சேர்க்கப்பட்டு ள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    • நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவ ரின் மனைவி வள்ளியம்மாள் (வயது 65), இவர் நேற்று பாக்கி ஷாப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட் டார் சைக்கிள் திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பே ரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த முள்ளிப் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வர் சேது ரத்தினம் (வயது 77). இவர் கடந்த 20-ந் தேதி சைக் கிளில் ஆரணி பஜாருக்கு வந்து கொண்டிருந்தார்.

    காந்தி ரோட்டில் உள்ள தியேட்டர் அருகாமையில் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த நபர் சேதுரத்தினம் ஓட்டி சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதினார்.

    பின்னர் அங்கிருந்து அந்த நபர் வேகமாக பைக்கில் சென்று விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சேதுரத்தினத்தை அந்த வழியாக சென்றார்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மகன் அருணாசலம், ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த சேதுரத்தினத்திற்கு காந்திமதி என்ற மனைவியும், 3 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ஆதிவராகபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 17). இவர்மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். பிலாஞ்சி அருகே சென்றபோது எதிரே வந்த மொபட் பிரவீன் சென்ற பைக் மீது மோதியது. இதில் பிரவீன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரவீன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×