search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike accident"

    • வளைவில் திரும்ப முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு கண்ணனூர் ரோட்டு தெருவை சேர்ந்தவர் அரிகுமார். (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மோனிகா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தனது பைக்கில் அரிகுமார் சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கெங்கை சூடாமணி அருகே வரும்போது வளைவில் திரும்ப முயன்றார். அப்போது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசா ருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் -இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் அரிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகன் பிறந்தநாளுக்கு புத்தாடை எடுத்துக்கொண்டு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பாஞ்சரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 43) நெல் வியா பாரி. இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு துளசிராமன் (13), பிரசாந்த (11) என 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் துளசிராமனுக்கு வருகிற 30-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் புதியதாக புத்தாடை எடுப்பதற்காக ராஜாவும், ரேவதியும் நேற்று முன்தினம் இரவு வந்தவாசிக்கு சென்றனர்.

    பின்னர் புது ஆடைகளை வாங்கிக் கொண்டு பைக்கில் கணவன், மனைவி வீடு திரும்பினர்.

    வந்தவாசி திண்டிவனம் நெடுஞ்சாலை பொன்னூர் கூட் ரோடு அருகே வந்து கொண்டிருந்தனர். ஜப்திகாரணியில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற மணிக்கண் டன் (22) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், ராஜா ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜா. மணிக் கண்டன் இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச் சம்ப வம் தொடர்பாக ரேவதி பொன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன் பிறந்தநாளுக்கு துணி எடுத்து கொண் வீடு திரும்பும்போது விபத்தில் வியாபாரி இறந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் சந்திரன் மகன் அரி (வயது 20), வெங்கடேசன் மகன் விஷ்வா (21). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சோளிங்கரில் இருந்து வாலாஜா சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால்பண்ணை அருகில் சென்றபோது நிலை தடுமாறி புளியமரத்தில் மோதி னர். இதில் அரி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே - உயிரிழந்தார். விஷ்வா படுகாயம் அடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.
    • க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது43). தச்சு தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டி சென்றார். தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து பாலமுருகனின் தம்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பத்தாரிடம் விபத்து குறித்து கூறினார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது பாலமுருகன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    சோளிங்கர் தாலுகா, கீழ் கரடிகுப்பம் கிராமம் 1-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கிருஷ்ணகாந்த்(21) காண்டிராக் முறையில் செண்டிரிங் வேலை செய்து பார்த்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகாந்த் வாலாஜாவிலிருந்து ஆற்காடு நோக்கி செல்வதற்காக, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ண்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் கிருஷ்ணகாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்பு சுவரில் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பைனபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40) மர வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று பருகூர் பகுதியிலிருந்து தனது பைக்கில் ரவி பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் பைனப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வரும்போது பைக் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் அருங்கல் துருகத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 51). ராணுவ வீரர். இவரது மனைவி புனிதா (41). இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று மாலை வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் கணவன் மனைவி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை புனிதா பரிதாபமாக இறந்தார். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புனிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகத்தடையில் பைக் ஏறி இறங்கிய போது விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 69). இவரது மனைவி நீலாவதி (49).

    இவர்கள் குடியாத்தத்தில் இருந்து ஆரணி நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

    கொங்கராம்பட்டு கிராம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வரும்போது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கணவன் மனைவி இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த நீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீலாவதி உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதியது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    மத்திய பிரதேசம் மாநிலம், சி.ப. மாவட்டம் பஜ்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக்சிங் (வயது 28). இவர் வெம்பாக்கம் அடுத்த திருப்பனமூர் கிராமத்தில் உள்ள தனியார் ஜல்லி அரவை கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரும், இவருடன் வேலை செய்யும் ஓம்பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் நேற்று வெம்பாக்கம் பகுதிக்கு பைக்கில் வந்தனர். அங்கிருந்து மீண்டும் திருப்பனமூருக்கு சென்றனர்.

    அப்போது பைக் நிலைத்தடுமாறி சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தீபக்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த ஓம்பிரகாஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீபக்சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நெமிலி:

    அரக்கோணத்தை அடுத்த வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 35). பனப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவ ருக்கும் நெமிலி உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த அலமேலு (29) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    துளசிராமன் தன்னுடைய மாமியார் ஊரான உளியநல்லூர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக தன் மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் சென்றுகொண்டிருந்தார்.

    துறையூர் ஏரிக்கரை அருகே சென்றபோது காட்டுப்பன்றி மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் மகன் விபத்தில் பரிதாபமாக பலியானார்.
    • போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த, பழைய ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் -லீலாவதி தம்பதியினர். ராஜலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டார். லீலாவதி சிவகிரிபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு தமிழரசன் (25) குறளரசன் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் தமிழரசன் விவசாயம் செய்து வருகிறார். இளைய மகன் குறளரசன் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி., படித்து வருகிறார். இந்நிலையில் செம்பட்டி வழியாக பழனி அடுத்த பழைய ஆயக்குடிக்கு குறளரசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்பட்டி பழனி சாலை, ராமநாதபுரம் அருகே சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருந்ததால், அனைத்து வாகனங்களும் ஒரு சாலையில் திருப்பி விடப்பட்டது. ஒரு வழி சாலையில் செல்லும்போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் குறளரசன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் குறளரசன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே பலியானார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற செம்பட்டி சப்-இன்ஸ்பெ க்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார், குறள ரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருப்பூரிலிருந்து கார் ஓட்டி வந்த டிரைவர் சதீஷ்குமார் (44) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்த மாணவன் செம்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரி அடுத்த கணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி (வயது 45), கூலித் தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் சாலையை கடக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய டி.புதூர் கிராமத் தைச் சேர்ந்த குப்பன் (60) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×