search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்குகள் மோதல்; வாலிபர் பலி
    X

    பைக்குகள் மோதல்; வாலிபர் பலி

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ஆதிவராகபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 17). இவர்மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். பிலாஞ்சி அருகே சென்றபோது எதிரே வந்த மொபட் பிரவீன் சென்ற பைக் மீது மோதியது. இதில் பிரவீன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரவீன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×