என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பைக் விபத்தில் வாலிபர் சாவு
- மேடை அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார்
- புதுவை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
திருவள்ளுர் மாவட்டம் திருவெற்றியூர் காலடிப்பேட்டை சாத்தான்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன்.
இவரது மகன் ஹரிகரன் (வயது 24) மேடை அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கண்ணன் குடும்பத்துடன் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அதிகாலை ஹரிகரன் தனது மோட்டார் சைக்கிளில் அவருடைய நண்பர் சுந்தராஜீலு (வயது 25) என்பவருடன் புதுவை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அரியாங்குப்பம் புதிய பாலம் அருகே வந்த போது ஹரிகரன் மோட்டார் சைக்கிள் பாலத்தின் நடு தடுப்பு கட்டையில் மோதியது.
இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி ஹரிகரன் உயிரிழந்தார், சுந்தராஜிலு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தெற்கு பிரிவு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்