search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beauty"

    • சரும பராமரிப்பில் முக்கியமானது பாதங்களுக்கான பராமரிப்பு.
    • மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யவும்.

    சரும பராமரிப்பில் முக்கியமானது பாதங்களுக்கான பராமரிப்பு. பாதங்களில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பாதங்களில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்குவதன் மூலம் அவற்றை சுகாதாரமாகவும், அழகாகவும் பராமரிக்கலாம். இதற்கு உதவும் ஸ்கிரப்களை இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதைப்பற்றிய சில குறிப்புகள்:

     எலுமிச்சை ஸ்கிரப்:

    2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலக்கவும், இந்த ஸ்கிரப்பை பாதங்களில் பூசி 5 நிமிடங்கள் கழித்து வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யவும். இந்த ஸ்கிரப் வறண்ட சருமத்தை மென்மையாக்கி பாதங்களுக்கு ஈரப்பதத்தை வழங்கும்.

     எப்சம் சால்ட் ஸ்கிரப்:

    2 டீஸ்பூன் எப்சம் உப்பு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 துளிகள் பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதை பாதத்தில் பூசி மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை தண்ணீரில் கழுவவும். பின்பு பாதங்களில் மாய்ஸ்சரைசர் பூசவும். பெப்பர்மிண்ட் எண்ணெய் பாத வலியை நீக்கும். தேங்காய் எண்ணெய் பாதங்களை மென்மையாக்கி ஈரப்பதம் அளிக்கும். அனைத்து வகையான சருமத்துக்கும் இது ஏற்றது.

     ஆலிவ் எண்ணெய் ஸ்கிரப்:

    1 டீஸ்பூன் பழுப்பு சர்க்கரை, 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 2 துளிகள் கெமோமில் அல்லது பெப்பர்மிண்ட் எண்ணெய், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை பாதங்களில் பூசி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்பு பாதங்களை கழுவி மாய்ஸ்சரைசர் பூசவும்.

     காபி ஸ்கிரப்:

    2 டீஸ்பூன் காபி தூள், 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கெட்டியான பசையாக தயார் செய்யவும். அதை பாதம் முழுவதும் பூசி 15 முதல் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு பாதங்களை கழுவவும். இந்த ஸ்கிரப், பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.

     ஓட்ஸ் ஸ்கிரப்:

    2 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, பசை போல தயாரிக்கவும். இதை பாதங்களில் பூசி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு அதை சுத்தம் செய்து விட்டு மாய்ஸ்சரைசர் பூசவும். இந்த ஸ்கிரப், சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை முழுமையாக நீக்கும்.

    பால் ஸ்கிரப்:

    அகலமான டப்பில் 2 கப் பாலுடன் 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரை கலக்கவும். அதில் பாதங்கள் மூழ்குமாறு வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் பாதங்களை தண்ணீரில் கழுவவும். பின்பு 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை பாதங்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் பாதங்களை தண்ணீரில் கழுவவும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றும்.

    • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
    • உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

    செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    தேவையானபொருட்கள்:

    செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,

    தண்ணீர் 1 கப் – 150 மி.லி,

    நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்.

    செய்முறை:

    பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு ௫ நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.

    மற்றொருமுறை:

    ஒரு கப் தண்ணீரில் புதிதாக பூத்த 4 செம்பருத்தி பூக்களை சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.

    பலன்கள்

    * மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது.

    சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.

    செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

    * தற்போது ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ அந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

    செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.

    * பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன.

    * கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

    • உடலில் தேவையற்ற முடியின் வளர்ச்சியை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
    • முடி அகற்றுவதற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு பரிசு.

    பொன்னதரம் என்பது மஞ்சள் நிற கல் ஆகும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் உடலில் தேவையற்ற முடியின் வளர்ச்சியை நீக்க பயன்படுத்தப்படுகிறது. முடி அகற்றும் பயன்பாட்டிற்காக இந்த கல் நசுக்கப்பட்டு தூள் செய்யப்படுகிறது, இது முடி அகற்றுவதற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு பரிசு.

     உதட்டுக்கு மேல், முகம் மற்றும் கை, கால்களில் உள்ள தேவையில்லாத, வேண்டாத முடிகளை நிரத்தரமாக நீக்குவதற்கு இந்த பொன்னதரத்தை எடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் பால் அல்லது ரோஸ்வாட்டர் சேர்த்து குழைத்து எடுத்து அதனை எங்கெல்லாம் தேவையில்லாத, வேண்டாத முடிகளை நீக்க வேண்டுமோ அந்த இடங்களில் தினமும் இரவு மற்றும் வாரத்திற்கு 2 முறை நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்துவரும்போது நிரந்தர தீர்வு கிடைக்கும்.

     பொன்னதரத்தின் பயன்கள்

    * ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், முகத்திலுள்ள முடியை அகற்றுவதற்கான சிறந்த தீர்வாக பொன்னதரம் கருதப்படுகிறது.

    * உயர் தரம் கொண்ட பொன்னதரம் தூள் உடல் மற்றும் முகம் இரண்டிலும் தேவையற்ற முடியை அகற்றுவதற்கான சிறந்த தயாரிப்பு ஆகும். இது போன்ற ஒரு சிறந்த மற்றும் இயற்கையான முடி அகற்றுதல் தயாரிப்பை நீங்கள் பயன்படுத்துவதால் ஒரு வாரத்தில் அதன் பலனைப் பெறுவீர்கள்.

    * பெரும்பாலான அழகுசாதனப் பொருட்களில் ரசாயனங்கள் உள்ளன, அவை பயன்படுத்திய பிறகு வலி அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். ஆனால், பொன்னதரம் ஒரு இயற்கை தயாரிப்பு, இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. பயன்பாட்டிற்குப் பிறகு மென்மையான மற்றும் மிருதுவான தோலை நீங்கள் உணருவீர்கள்.

    * முடி நீக்கும் இயற்கை தயாரிப்பு தோல் எரிச்சலில் இருந்து உங்களை விடுதலை அளிக்கிறது.

    * இது எந்த வலியையும் ஏற்படுத்தாமல் அதன் வேரிலிருந்து முடியை நீக்குகிறது.

    * கரடுமுரடான முடியை கூட எந்த இடையூறும் இல்லாமல் அகற்ற பொன்னதரம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது.

    * தேவையற்ற முடியை அகற்ற பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் ரேஸர் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஆனால் உண்மை என்னவென்றால், இயற்கையின் பண்புகளைக் கொண்ட இந்த பொன்னதரம் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

    * பொன்னதரம் என்று அழைக்கப்படும் அழகான முடி அகற்றும் தூள் இயற்கையாகவே தேவையற்ற முடியை பாதுகாப்பாகவும், எளிதாகவும், மென்மையாகவும் நீக்குகிறது. இந்த நிலையான தயாரிப்பு உடலில் தேவையற்ற முடியை அகற்ற இயற்கையான மற்றும் நிரந்தர தீர்வாக இருக்கும்.

    * எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டிலேயே தேவையற்ற உடல் முடியை அகற்றவும், குறைந்த விலையில் தரமான வெளியீட்டை வழங்கவும் இந்த தயாரிப்பு உங்களை அனுமதிக்கிறது.

    • பொலிவான சருமத்தை வழங்குகிறது.
    • கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.

    இந்த கேழ்வரவு ஃபேஸ் பேக் உங்களது முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி, இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது. இது முகப்பருவை தடுக்கிறது. உங்களுக்கு பொலிவான சருமத்தை வழங்குகிறது. உங்கள் சருமத்திற்கு தீவிர ஊட்டச்சத்தை அளிக்கிறது. உங்களது சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.

    ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் கேழ்வரகு எடுத்து அதனை பால் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை பாலில் பஞ்சு தொட்டு முகத்தை துடைத்துவிட்டு இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் போட்டு அந்த பேக் காய்ந்தவுடன் ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.

    பயன்கள்

    * ஸ்க்ரப் கம் ஃபேஸ் மாஸ்க்

    * சருமத்தை நன்றாக எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது

    * அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது

    * சருமத்தை இயற்கையாக புத்துணர்ச்சியடையச் செய்கிறது

    * சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது

    • பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும்.
    • பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

    தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும்.

    பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.

    வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு.

    கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம். ஆனால் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும்.

    வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

    பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. கால்களில் நகங்களை வெட்டும்போது முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும். அதேபோல், நகங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

    • பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும்.
    • இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள்.

    ஏனோ பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனைஅழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண். பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். ஆகவே தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும். வெடிப்பின்றி தடுக்கலாம். ஃப்யூமின் கல்லைனைக் கொண்டு தினமும் தேய்த்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.

    தேவையானவை :

    வெள்ளை சர்க்கரை - அரை கப்

    சமையல் சோடா - 1 டீஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தேன்- 1 டீஸ்பூன் பாதாம் அல்லது லாவெண்டர் எண்ணெய் - 2 துளி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போடுங்கள். அதன் பின் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள். பின்னர் சமையல் சோடாவை போடவும். இறுதியில் தேனை சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்குங்கள். பின்னர் பாதாம் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெயை இதில் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதனை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் 15 நாட்களுக்கு வரும்.

    சர்க்கரை பாதத்தில் உள்ள கடினத்தன்மையை நீக்கி, மிருதுவாக்கும்.

    சமையல் சோடா தொற்றுக்களை அகற்றும். சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். சருமத்தின் அமில மற்றும் காரத் தன்மையை சமன் செய்யும்.

    தேன் ஈரப்பதம் அளித்து, பாதத்தில் உள்ள வறட்சியை போக்கிவிடும்.

    ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் அளித்து, அழகாக்கிறது.

    தினமும் குளிப்பதற்கு முன் இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு குளிக்கச் செல்லலாம். இது பாதம் மற்றும் கைகளுக்கு மிருதுத்தன்மை தருகிறது. கருமை அகன்று, அழுக்குங்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்துவிடும்.

    • பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
    • நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள், தோல்களையும் நீக்க வேண்டும்.

    தினமும் முக அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல பெண்கள், வாரத்துக்கு ஒரு முறை கூட பாதங்களின் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவது இல்லை. இவ்வாறு பாதங்களை கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்று, சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கைகளைப் போலவே, கால்களிலும் நகங்களை நீளமாக வளர்த்தல் கூடாது.

    சாக்ஸ் மற்றும் ஷூக்களில் உள்ள அழுக்குகள், கால் நகங்களின் இடுக்குகளில் படிந்து அங்கு கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே தினமும் சோப்பு போட்டு கால்களைக் கழுவ வேண்டும். குளிக்கும்போது நகங்கள், பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் தோல்களையும் நீக்க வேண்டும்.

    இதற்கு மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம். தினமும் ஷூ அணிபவர்களின் பாதங்களில் இருந்து வெளியேறும் வியர்வை, ஷூக்களில் படிந்து, அதன்மூலம் கிருமித் தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷூக்களை வெயிலில் நன்றாக உலர வைத்து பயன்படுத்துவது நல்லது.

    பாதங்கள் ஈரப்பதமாக இருக்கும் போது எளிதில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால் அரிப்பு, எரிச்சல், தோல் உரிதல் மற்றும் சில சமயங்களில் வலி மிகுந்த கொப்புளங்களும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பாதங்களை உலர்வாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். நகங்களை சீராக வெட்டுவதற்கு ஏற்ற நகவெட்டி பயன்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு முறை நகங்களை வெட்டிய பிறகும் அதனை சுத்தம் செய்வது அவசியம். உங்களுக்கென்று தனியாக ஒரு நகவெட்டி வைத்துக்கொள்வது சிறந்தது. பாதங்களுக்கு சரியான அளவில் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை ஹீல்ஸ் போன்ற காலணிகளை அன்றாடம் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முகம் மற்றும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பதை போல பாதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

    வறட்சியான பாதங்களில் வெடிப்பு, தோல் உரிதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். எனவே பாதங்களை சுத்தப்படுத்தியதும் கோகோ வெண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி போன்ற மாய்ஸ்சுரைசர்களை பூசலாம். மாதத்திற்கு இரண்டு முறை கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் வைக்கவும். இது சருமத்தை மென்மையாக்கும்.

    பின்பு பாதங்களை ஸ்கிரப்பர் அல்லது பியூமிஸ் கல்லைக் கொண்டு லேசாக தேய்த்து இறந்த செல்களை நீக்கவும். பிறகு நன்றாக மசித்த ஒரு வாழைப்பழத்தில், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து பாதம் முழுவதும் மாஸ்க் போல போடவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவவும். பின்பு மாய்ஸ்சுரைசர் தடவவும். இதனால் பாதங்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும்.
    • வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் நல்லது.

    முகத்தை அழகுப்படுத்த நாம் நிறைய பேசியல் செய்கிறோம். அப்படி பேசியல் செய்யும் போது ஐஸ் கட்டிகளும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது பல பேருக்குத் தெரியாது. பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால், முகமானது பார்க்க பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது போல் இருக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வீட்டில் பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜை எந்த நேரத்திலும் செய்யலாம் என்றும், எவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

    1. முதலில் முகத்திற்கு ஏற்ற பேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து முகத்தில் தடவ வேண்டும். பேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஐஸ் கிரீமை போட்டு கலக்கி முகத்தில் தடவலாம். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும். முக்கியமாக கண்ணுக்கு அருகில் பண்ணும் போது கவனமாக செய்ய வேண்டும். பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்.

    2. மற்றொன்று சிறிது ரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ் வாட்டரை ஒரு பௌலில் விட்டு, பின் ஒரு ஐஸ் கட்டியை அதில் நினைத்து முகத்தில் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் முகமானது மென்மையாக இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    மேலும் எந்த பேஸ் பேக்கை முகத்திற்கு போட்டாலும், இறுதியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். முகமானது பொலிவுடன் அழகாக இருக்கும்.

    மறக்கக்கூடாதவை

    1. மசாஜ் செய்தால் குறைந்தது 2-4 நிமிடமாவது செய்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி போட்டு முகம் எரிவது போல் இருந்தாலும், சிவப்பு நிறத்தில் மாறினாலும், ஐஸ் கட்டி போடுவதை நிறுத்தவும்.

    2. ஐஸ் கட்டிகள் மிகவும் குளிர்ச்சியானவை, அதை போட்டு முகத்தில் எரிச்சலோ அல்லது முகம் சிவப்பு நிறத்தில் மாறினாலோ 30-45 நிமிடத்தில் போக வேண்டும். இல்லையென்றால் அது அலர்ஜி என்று அர்த்தம். பின் அதனை செய்ய வேண்டாம்.

    3. ஐஸ் கட்டி பயன்படுத்த கஷ்டப்படுபவர்கள் ஐஸ் பேக் அல்லது ஒரு சுத்தமான துணியை முகத்தில் போர்த்தி அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்து துடைக்கவும். துணியானது சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.

    4. ஐஸ் கட்டியானது முகத்திற்கு சிறந்த ஒன்று. ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும். மேலும் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து மசாஜ் செய்தால் நல்லது.

    • செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும்.
    • கருவளையத்தை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

    ஆண்கள் மற்றும் பெண்களில் சிலருக்கு கண்களின் கீழும், கன்னங்களின் இரு பக்கமும் கருவளையம் காணப்படும். இதை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

    ஜாதிக்காய்-1, கோஷ்டம் சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும்) இவற்றை நன்றாக பொடித்து அத்துடன், 5 பாதாம் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி சுமார் 2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் வரும் அனைத்துவித கருப்பு, கரும்புள்ளிகள் மாறும்.

    வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும்.

    குங்குமாதிலேபம்: இது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவு நேரத்தில் முகத்தில் பூசி தூங்கலாம். காலையில் முகம் கழுவிடலாம்.

    கேரட், பப்பாளி பழம், தர்பூசணி பழம், மாதுளை, பாதாம், பிளாக்ஸ் விதைகள் சாப்பிட்டு வந்தால் முகம் வசீகரமாகும்.

    • வாரம் ஒருமுறை வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யலாம்.
    • வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

    நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும். சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்: பால் 4 கப் பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன். முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

    பாதங்களையும் வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது குளியல் உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம். பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும்.

    பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

    • தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
    • சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

    உடலின் தோல் பகுதி, உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கவசமாக இருப்பதுடன், உடலின் அழகை காட்டும் ஆடையாகவும் உள்ளது. சுத்தமாக சலவை செய்யப்பட்ட ஆடை போல் தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் தோலில் பரு, தழும்பு, புழுவெட்டு, பொடுகு என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இன்றைக்கு தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நவீன சிகிச்சைகள் இருப்பதால், அவற்றை எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும். பரவலாக காணப்படும் சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

    முகப்பரு

    பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரின் முக்கிய பிரச்சினையாக இருப்பது முகப்பரு. இந்த பருக்கள் முகத்தின் அழகை கெடுத்து அவர்களுக்கு கவலையை உருவாக்கி விடுகிறது. கடந்த காலங்களில் முகப்பரு பாதிப்பை போக்க சரியான மருந்து, மாத்திரைகள் இல்லை. சரியில்லாத மருத்துவ சிகிச்சையால் தழும்புகளும் ஏற்பட்டு விடும். கண்ட ஆலோசனைகளை எல்லாம் கேட்டு முகத்தில் கண்ட களிம்புகளையும் பூசி கடைசியில் முகத்தில் குழி, தழும்புகளை உண்டாக்கி முக அழகை நிரந்தரமாக கெடுத்துக் கொண்டு மன உளைச்சலால் அவதிப்படுவோர் நிறையவே உண்டு. இப்போது, முகப்பருக்களை நிரந்தரமாக போக்கும் ஐசோட்ரெடினாயின் மாத்திரை, மருந்துகள் வந்து விட்டன. இவை முகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் முகப்பருக்களை போக்கும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். 20 வார தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகப்பருக்களை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும்.

    பருத்தழும்பு

    பருக்கள் ஏற்பட்டு சரியான சிகிச்சை பெறாத போது பருத்தழும்புகள் முகத்தில் தங்கி விடும். பருத்தழும்புகளால் சீர் கெட்டு போன முகத்தை லேசர் மற்றும் இதர நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பொலிவுள்ள அழகான முகமாக மாற்ற முடியும்.

    முடி கொட்டுதல்

    அன்றாடம் கொத்து கொத்தாக முடி கொட்டுதல் பெண்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இன்றைக்கு நீண்ட கூந்தல் இருப்பது அரிது. தற்கால உணவு, மன அழுத்தம், மருத்துவரின் ஆலோசனையின்றி கண்ட எண்ணெய்கள், குளியல் பூச்சுகளை பயன்படுத்துவது ஒரு காரணம். அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும். பொதுவாக, முடி தொடர்பாக எந்த பிரச்சினை இருந்தாலும் அதற்கான அனைத்து தீர்வுகளையும் ஒரு தோல் மருத்துவரால் மட்டுமே தீர்வு காண முடியும். தற்போது, அனைத்து வகையான முடி கொட்டுதல் பிரச்சினைக்கும் உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த மருந்துகள் வந்துள்ளன. தற்போது புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வழுக்கையும் சரி செய்ய முடியும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். முடி சிகிச்சைக்கு என தனியாகப் படிப்போ, டாக்டரோ கிடையாது.

    வெண்படை நோய்

    புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் நாள்பட்ட வெண்படை நோய்க்கும் விரைவாகத் தீர்பு கான முடியும்.

    இளநரை

    முடியின் வேரில் இருந்து முடி வளர தொடங்கும்போது, அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற நிறத்தை உருவாக்கும் பொருள் கலக்கப்படும். இதனால், முடி கருமையடைகிறது. இந்த மெலானின் சுரப்பி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இளநரை ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. எந்த காரணத்தால் இளநரை தோன்றுகிறது என்பதை சரியாக கண்டறிந்து தகுந்த மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இளநரையை நீக்கி முடியை கருமையடைய செய்யலாம்.

    பரம்பரை வழுக்கை

    பரம்பரை வழுக்கைக்கு தீர்வு இல்லை என்பது பழைய நம்பிக்கை. இப்போது பக்க விளைவுகள் இல்லாத மிகச்சிறந்த மருந்து மாத்திரைகள் அமெரிக்க மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது இந்தியாவிலும் சுலபமாக கிடைக்கின்றன. இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பரம்பரை வழுக்கையை, பாதிப்பு ஏற்படும் முன் தடுத்து கொள்ளலாம். மேலும் இழந்த முடியையும் திரும்ப வளர வைக்கலாம். தற்போது இந்த மருந்துகளின் வருகையால் தலையில் வழுக்கையை மறைக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொடுகு தொல்லை

    பொடுகு என்பது, பல வகை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். ஒருவருக்கு பொடுகு தொல்லை இருந்தால் அதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தகுந்த மருந்துகளை தர வேண்டும். அதை விடுத்து, கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கை வைத்தியம் பார்ப்பது சரிவராது. தலையில் பொடுகு பிரச்சினையை அசட்டையாக விட்டு விட்டால் முடியின் ஆரோக்கியம் கெட்டு முடி கொட்டுவதையும் நிறுத்த முடியாது.

    புழு வெட்டு

    தலையில் ஆங்காங்கே செதுக்கியது போல் சொட்டை விழுவது புழுவெட்டு. தலையில் திடீரென்று வட்ட வடிவில் முடி உதிர்ந்து முடி இல்லாமல் போகும் பாதிப்பை புழுவெட்டு என்கிறோம். இது தலையில் மட்டும் அல்லாமல் புருவம், தாடி, மீசை போன்ற இடங்களிலும் வரலாம். சிலருக்கு சில இடங்களிலும், சிலருக்கு ஒட்டுமொத்தமாக தலைப்பகுதி முழுவதும் கூட பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு புழுவோ, பூச்சியோ காரணம் இல்லை. நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களின் தவறான செயல்பாடே காரணம். வெங்காயம் தேய்ப்பது, கண்ட எண்ணெய்களை தேய்ப்பதால் புழுவெட்டு நீங்காது. தோல் மருத்துவர் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு சமீபத்தில் மிகச் சிறந்த புது மருந்துகள் வந்துள்ளன.

    சொரியாசிஸ்

    சொரியாசிஸ் நோய்க்கும் தற்போது மிக சிறப்பான மருந்துகள் வந்துவிட்டன. இவற்றால் மிகக்குறுகிய காலத்தில் சிறந்த பலன் கிடைக்கும்.

    படர்தாமரை

    நவீன மருந்து மாத்திரைகள் மூலம் நாள்பட்ட படர்தாமரையும் நிரந்தரமாக சரிசெய்ய முடியும்.

    ஆண் முகத்தில் முடி இல்லாமை

    ஆண்களுக்கு முகத்தில் நல்ல ரோம வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. தற்போது, தாடி வளர்த்து விதவிதமாக ட்ரிம் செய்வது பேஷனாகவும் இருக்கிறது. பொதுவாக, ஆண்கள் முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத் தன்மை மற்றும் ஹார்மோன் குறைபாடு காரணமாகும். இதற்கு முறைப்படி காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் நன்கு முடி வளரச் செய்யலாம்.

    பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி

    சில பெண்களுக்கு முகத் தாடை, உதட்டின் மேல் பகுதி போன்ற இடங்களில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும். இந்த முடிகளை வேக்சிங் அல்லது திரெடிங் முறையில் அகற்றினால் அது இன்னும் அதிகமாக வளரும். தற்போது, இந்த தேவையற்ற முடிகளை அகற்ற உலகத்தரம் வாய்ந்த டையோடு லேசர், லாங் பல்ஸ் என்டியாக் லேசர் மற்றும் ட்ரிபிள் வேவ்லென்த் லேசர் கருவிகள் இங்கு இருக்கின்றன. இவற்றின் மூலம் மிக எளிதாக நிரந்தரமாக முகத்தில் உள்ள தேவையற்ற முடி வளர்ச்சியை நீக்க முடியும். இந்த லேசர் கருவிகளை முறையாக தெரிந்த தோல் நோய் மருத்துவர் மட்டுமே பயன்படுத்த முடியும். திருநங்கைகளுக்கு இந்த சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதம். எங்கள் மருத்துவமனையில் இந்த கருவிகள் மூலம் நிறைய பேர் பயன்பெற்று மகிழ்வுடன் செல்கின்றனர்.

    பச்சை அகற்றுதல்

    சிறுவயதில் பேஷன் என்ற பெயரில் உடம்பில் பச்சை குத்துவது அதிகரித்து வருகிறது. உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடை பணிகளில் சேர முடியாது. தொடர்பில்லாத பெயர்களை பச்சை குத்தி வைத்திருக்கும் சிலருக்கு இது திருமண வாழ்க்கையில் பிளவைக் கூட ஏற்படுத்தி விடுகிறது. தற்போது, எங்கள் மருத்துவமனையில் உள்ள பைகோ செகண்ட் க்யூ ஸ்விட்ச்டு லேசர் மூலம் இந்த பச்சை அடையாளங்களை துல்லியமாக தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நீக்கி விடுகிறோம்.

    இதர பாதிப்புகள்

    மேற்சொன்ன தோல் பிரச்சினைகள் மட்டுமின்றி தோல் அலர்ஜி, வெண்படை, குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் உள்ளன. எந்த தோல் வியாதியையும் எளிதாக இவற்றால் சரி செய்ய முடியும். எனவே, உடலின் அழகை வெளிக்காட்டும் தோல் பகுதியை பொலிவாக வைத்து தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்வோம்.

    குறிப்பு: பெண்களுக்கு பெண்களாலேயே பரிசோதனை செய்யப்படும்.

    தொடர்புக்கு, ஆதித்தன் தோல் முடி லேசர் மருத்துவமனை, ஆண்டாள்புரம், மதுரை.

    செல்போன்-81110 00000,

    73731 41111, 73731 42222

    இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...
    மணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொள்ளும் முகங்களை விட, இயல்பான அழகோடு இருக்கும் முகங்கள் பல நேரங்களில் மிக அழகானதாகத் தெரியும். இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...

    நல்ல உணவுப் பழக்கம்: தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆளி விதை, அக்ரூட் பருப்பு போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவசியம். முட்டை, கோழிக்கறி, கிட்னி பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பாலாடைக்கட்டி போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.

    நிம்மதியான தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் முக்கியமானது. தூங்கும்போது தோல் புதிய கொலாஜனை உற்பத்தி செய்கிறது. உங்கள் செல்போனை சார்ஜ் செய்வது போல், உடல் தானாகவே சார்ஜ் செய்ய வேண்டும். இதற்கு நல்ல உறக்கம் அவசியம். இதன் மூலம் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மறையும்.

    பயன்படுத்தும் பொருட்கள்: நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 60 சதவீதத்தை உங்கள் சருமம் உறிஞ்சிக் கொள்கிறது. எனவே சருமப் பராமரிப்பு, முடிப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டவையாக இருப்பது நல்லது. சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய அல்லது தலைமுடியை உலர வைக்கும் பாரபென்கள், பெட்ரோகெமிக்கல்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ள பொருட்களில் இருந்து விலகி இருங்கள். இயற்கை பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

    உடற்பயிற்சி அவசியம்: ஓட்டப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். உடற்பயிற்சி சருமத்திற்கு நன்மை செய்வதோடு, உங்கள் மனநிலையை மேம்படுத்தும். வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நச்சுகளை அகற்றும், சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும். முழு உடலையும் அமைதிப்படுத்தும் எண்டோர்பின்களைத் தூண்டும்.

    சரும பராமரிப்புப் பழக்கம் சருமத்தை தூய்மையாக்குவது, டோனிங் செய்தல் மற்றும் ஈரப்பதமூட்டுதல் போன்ற பழக்கங்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். இந்த முறையைப் பின்பற்ற நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை உங்கள் தோலின் தன்மையைப் பொறுத்து, தேர்ந்தெடுக்க வேண்டும். காலை அல்லது இரவில் சருமப் பராமரிப்புப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

    இறந்த செல்களை நீக்குங்கள்: இறந்த செல்களை நீக்குவது பளபளப்பான சருமத்திற்கு முக்கியமானதாகும். இது புதிய மற்றும் ஆரோக்கியமான செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உளுந்து மாவு அல்லது காபி தூள் ஸ்கிரப் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தில் படியும் இறந்த செல்களை நீக்கலாம்.
    ×