search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "athletics"

    • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம்.
    • நுழைவு படிவம் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 குறு மைய அளவில் குழு போட்டிகள், தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக், நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டில் திறமையான மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும் 14 வயது, 17 வயது, 19 வயது என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பிறப்பு சான்றிதழ், ஆதார் எண், 19 வயது எனில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மிக அவசியம்.நுழைவு படிவம் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மாணவர் ஏதேனும் ஒரு வயது பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும்.

    11 வயதுக்குட்பட்ட தொடக்க பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.திருப்பூர் தெற்கில் கோவில்வழியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கில் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசியில் எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்தில் முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
    • நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி மாணவர் நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.

    கடந்த மாதம் ஜூலை 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், ராமலட்சுமி தம்பதியரின் மகன் கலையரசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

    சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பங்கெடுத்து மாணவர் கலையரசுவை ஏ.வி.கே. கல்வி குழும தலைவர் அய்யாத்துரைபாண்டியன், பயிற்சியாளர்கள் பிரவீன் குமார், பிரியா மற்றும் பெருமாள், ராமலட்சுமி, பூலித்தேவன் மக்கள் கழக மாநில தலைவர் பெருமாள்சாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக களும் தெரிவித்தனர்.

    • ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் திருச்சி சமது பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்
    • கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருப்பதோடு, மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது

    திருச்சி:

    தேசிய அளவிலான தடகள் போட்டிகள் ஹரியானாவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காஜாநகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவரும், தடகள வீரருமான ஏ.சூராஜ் 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

    மேலும் 20-வது தேசிய பெடரஷன் கப் ஜூனியர்ஸ் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான தடகள போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றார்.

    மேலும் இதன் மூலம் வருகிற 1.8.2022 முதல் 6.8.2022 வரை கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார்.

    மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை பாராட்டும் வகையில், மஜ்லிஸ் உல் உலமா சங்கத்தலைவர் டாக்டர் ஏ.கே.காஜா நஜிமுதீன், பள்ளியின் தாளாளரும், செயலாளருமான டாக்டர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல்,

    பள்ளி பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர் மஜ்லிசுல் உலமா சங்க உறுப்பினர் ஏ.எம்.முகமது ஆஷிக், பள்ளி முதல்வர் டாக்டர் சி.ஜே.சாக்கோ, உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆசிய விளையாட்டு தொடரில் 400 மீட்டர் தடகள ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 4 பேர் பங்கேற்பதால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா, பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய 7-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் ஆக மொத்தம் 29 பதக்கங்களை பெற்று இருந்தது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டம் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறும் இந்த ஓட்டத்தில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    பெண்கள் பிரிவில் ஹிமாதாஸ் (அசாம்), நிர்மலா (ராஜஸ்தான்), ஆண்கள் பிரிவில் முகமது அனஸ் யசியா (கேரளா), ஆரோக்ய ராஜ் (தமிழ்நாடு) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் 5.40 மணிக்கு நடக்கிறது. 4 பேர் தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமது அனஸ் 2-வது அரையிறுதியில் முதல் இடத்தை பிடித்தார். இதனால் அவர் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இதேபோல தமிழகத்தை சேர்ந்த ஆரோக்யராஜூம் அரையிறுதியில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரும் பதக்கம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    நீளம் தாண்டும் போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீசங்கரும், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் லெட்சுமணனும் பங்கேற்கிறார்கள். #AsianGames2018
    ×