என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arjun sampath"
இந்த சம்பவத்தையடுத்து அச்சுறுத்தல் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு 24 மணிநேர துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேசன் உள்பட 12 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அவரது வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோவை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் மூகாம்பிகை மணி, குணா, சதீஷ், சுரேஷ், இளங்கோ, குளத்துபாளையம் சிவலிங்கம், ரத்தினபுரி சிவலிங்கம் உள்பட 37 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
இதுதவிர முக்கிய பிரமுகர்கள் ஒருசிலர் வீடுகளுக்கும் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் சென்னையில் இருந்து ரெயிலில் கோவைக்கு 5 பேர் வருவதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவை போலீசார் நேற்று கோவை ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, திண்டிவனம் இஸ்மாயில், பல்லாவரம் சம்சுதீன், ஓட்டேரி சலாவுதீன் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவையை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது.
கைதான இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றிய தகவல்களை பேஸ்புக்கில் பதிவு செய்து வந்துள்ளார்.
எனக்கு பேஸ்புக் மூலமாக கோவையை சேர்ந்த ஆசிக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். இதேபோல சம்சுதீன், ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன் ஆகியோருடன் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அனைவருமே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாட்டோடு இருந்ததால் நண்பர்களானோம்.
எங்களது மதத்துக்கு எதிராக பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்பவர்களையும் கண்காணித்து வந்தோம். இதில் அர்ஜூன் சம்பத், அன்புமாரி ஆகியோர் வெறுப்பேற்றும் வகையில் பேசியும், பேஸ்புக்கில் பதிவு செய்து வருவதாக ஆசிக் கூறினார்.
அவர்கள் இருவரையும் கொல்வது என முடிவு செய்தோம். அர்ஜூன் சம்பத் அடிக்கடி டி.வி.க்களில் பேசி வருவதால் அவரை தெரியும். அன்புமாரியின் புகைப்படத்தை ஆசிக் எங்களுக்கு அனுப்பினார். இருவரையும் கொலை செய்ய ஆசிக்கை சென்னைக்கு வரச் சொன்னோம்.
ஆனால் ஆசிக் எங்களை கோவை வரச் சொன்னார். கொலைக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இத்திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ பைசல், குனிய முத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோர் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் கூறினார்.
சம்பவத்தன்று நாங்கள் ரெயிலில் கோவை வந்தோம். ஆனால் எங்களை அழைத்து செல்ல ஆசிக் ரெயில் நிலையத்துக்கு குறித்த நேரத்துக்கு வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது கொஞ்சம் நேரமாகிவிட்டது, நீங்கள் நால்வரும் நேராக வீட்டுக்கு வாருங்கள் என ஆசிக் கூறினார்.
நாங்கள் ரெயில் நிலையத்தில் இருந்து பின்வாசல் வழியாக ஆசிக் வீடுநோக்கி நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஆசிக் வந்துவிட்டார். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள், ஆசிக்கின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆசிக் மறைத்து வைத்திருந்த கொலை முயற்சிக்கு தேவையான 5 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேர் மீதும் உபா சட்டம் (யு.ஏ.பி.ஏ.- சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்), மதகலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள உக்கடத்தை சேர்ந்த பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதான 5 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர். இது தொடர்பாக 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. #ArjunSampath
கோவை:
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது-
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய வேண்டும். மாநிலத்தில் ரஜினி தலைமையிலான ஆன்மீக அரசு அமைய வேண்டும் என்பதற்காக ‘மிஷன் 2019’ என்ற பெயரில் 108 நாட்கள் ஆன்மீக யாத்திரை தொடங்க உள்ளேன்.
இந்த யாத்திரை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்க இருந்தது. பாரதீய ஜனதா, ரஜினி உள்ளிட்ட ஆன்மிக அரசியலை முன்னிலைப் படுத்துபவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்.
இது சில அமைப்பினருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் எனது யாத்திரைக்கு இடை யூறு ஏற்படுத்துகிறார்கள். நான் தொலைக்காட்சிகளில் பேசும் போதும், கட்டுரைகள் வெளியிடும் போதெல்லாம் எனக்கு புதிய, புதிய செல்போன் நம்பர்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தது.
தற்போது என்னை கொல்ல சதி நடப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். நான் கடந்த 30 வருடங்களாக மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். மிரட்டல்களை பற்றி கவலைப்படவில்லை. எனக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #arjunsampath
கோவையை சேர்ந்த இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் சென்னையில் இருந்து சிலர் கோவைக்கு ரெயிலில் செல்வதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மத்திய புலனாய்வு பிரிவினர் சென்னையில் இருந்து நேற்று கோவை சென்ற ரெயிலை கண்காணித்தனர்.
ரெயில் கோவை வந்ததும் ரெயில் பயணிகளில் சந்தேகத்திற்கிடமாக இருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில், பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன், சலாவுதீன் ஆகிய 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களை அழைத்து செல்வதற்காக வந்த கோவையை சேர்ந்த ஆசிக் (37) என்பவரையும் பிடித்தனர்.
5 பேரையும் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் சென்னையில் இருந்து வந்த மத்திய புலனாய்வு பிரிவு (ஐ.பி.), சிறப்பு புலனாய்வு பிரிவு(எஸ்.ஐ.யூ.) போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை போத்தனூரில் நேற்று நடைபெற்ற கைதி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்ததாக பிடிபட்டவர்கள் கூறினார்கள். இவர்களில் சிலர் முகநூலில் (பேஸ்புக்) இந்து இயக்க பிரமுகர்களின் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான பதிவுகளை செய்திருந்தனர்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், அவரது மகன் ஓம்கார் பாலாஜி, இந்து முன்னணி பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோருக்கு எதிராக பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதாகவும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துக்கள் இருந்தன.
எனவே அர்ஜூன் சம்பத் உள்பட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் வந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை விடிய, விடிய நடந்தது.
இதைத்தொடர்ந்து உக்கடம் பகுதியில் உள்ள அர்ஜூன் சம்பத், தெலுங்கு பாளையத்தில் உள்ள இந்து முன்னணி பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூன் சம்பத்துக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்து வந்ததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2 போலீசார் அவருடனும், 2 போலீசார் அவரது வீட்டிலும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. #ArjunSampath
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் மணல் கொள்ளையை தடுத்த போலீஸ்காரர் கொல்லப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
தமிழக அரசு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஆதி திராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இன்னும் அங்கு இரட்டை குவளை முறை தான் நடைமுறையில் உள்ளது.
ஆனால் சமீபத்தில் வெளியான ‘‘இருட்டு அறையில் முரட்டு குத்து’’ என்ற ஆபாசப்படம் குறித்து தமிழக அரசு கருத்தோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகம் வஞ்சிக்கப்படும். ஆனால் அங்கு தனிப்பெரும்பான்மையோடு பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜனதா பெரும் வெற்றி பெறும்.
வருகிற 29-ந் தேதி இந்து வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து இந்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களால் சிறுகுறு வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Arjunsampath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்