search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple"

    • காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஐபோன் 14 சீரிசின் மேம்பட்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேண்ட், 48MP கேமரா, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 மாடல் தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

     


    ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 79 ஆயிரத்து 900-க்கும், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் விலை முறையே ரூ. 89 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டன. ப்ளிப்கார்ட் காதலர் தின சலுகையாக இதன் பேஸ் மாடல் விலை ரூ. 66 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 12 ஆயிரத்து 900 குறைவு ஆகும்.

    விலை குறைப்பு மட்டுமின்றி பேங்க் ஆஃப் பரோடா, சிட்டி, டி.பி.எஸ். மற்றும் எச்.எஸ்.பி.சி. கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் அல்லது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி பெற முடியும். ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஐபோன் 15 விலையை ரூ. 63 ஆயிரத்து 999 என மாற்றுகிறது.

    ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரத்து 300 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 15 மாடல் - கிரீன், புளூ, எல்லோ, பின்க் மற்றும் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    • ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடல் தொடர்பான தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், புதிய ஐபோன் SE 4 மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    முந்தைய தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலின் டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் SE 4 மாடலில் நாட்ச் நீக்கப்பட்டு டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டைனமிக் ஐலேண்ட் அம்சத்தினை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகப்படுத்தியது.

     


    பிறகு, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட்டது. புதிய ஐபோன் SE 4 குறித்து டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டுள்ள தகவல்களில், "புதிய ஐபோன் SE 4 மாடலின் டிசைன் தற்போது உருவாக்கப்படும் ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்," என தெரிவித்தார்.

    இத்துடன் ஐபோன் SE நான்காம் தலைமுறை மாடலில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அளவீடுகளை பொருத்தவரை ஐபோன் SE 4 ஆப்பிள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஐபோன் XR போன்றே இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 4 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், ஆப்பிளின் 5ஜி சிப்செட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படலாம். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2022-ம் ஆண்டு ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில், இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 900 என துவங்கியது.

    • கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • மடிக்கக்கூடிய ஐபேட்-ஐ உருவாக்கி வருவதாக தகவல்.

    ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய போன்கள் பொறியாளர்களுக்கு அதிக சவால் நிறைந்த சாதனமாக இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஃப்ளிப்-ஸ்டைல் ஐபோன் மாடல்களை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் மட்டுமின்றி மடிக்கக்கூடிய ஐபேட் மாடலையும் ஆப்பிள் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் என கூறி ஏராளமான காப்புரிமைகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் உருவாக்கி இருக்கும் இரண்டு ப்ரோடோடைப் மாடல்களும் அதன் ஆரம்பகட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது.

    இவற்றின் உற்பத்தி அடுத்த ஆண்டு வரையிலும் துவங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ ஆப்பிள் ஃப்ளிப் போன் மாடலின் உற்பத்தி 2026 வாக்கில் துவங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    எனினும், புதிய சாதனத்தின் டிசைன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனில், இந்த திட்டத்தையே ஆப்பிள் நிறுவனம் முழுமையாக ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது. ப்ளிப் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலையும் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.
    • அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தன் விஷன் ப்ரோ ஹெட்செட் ஒருவழியாக விற்பனைக்கு வந்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஹெட்செட்-க்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவின் போதே, இந்த ஹெட்செட்-ஐ வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

    புதிய ஹெட்செட் பயனர்கள் தொழில்நுட்பத்துடன் எப்படி உரையாடுகின்றனர் என்பதை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் முப்பரிமாண டிஜிட்டல் சூழலை நம் கண் முன்னே கொண்டுவருகிறது. இது தனித்துவம் மிக்க, அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

     


    ஆப் ஸ்டோரில் பத்து லட்சத்திற்கும் அதிக செயலிகள் உள்ள நிலையில், புதிய ஏ.ஆர். / வி.ஆர். ஹெட்செட்-இல் பயன்படுத்துவதற்கென பிரத்யேகமாக 600 புதிய செயலிகள் மற்றும் கேம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய செயலிகள் ஆப்பிள் விஷன் ப்ரோ அம்சங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் விலை 3499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்து 415 என துவங்குகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் ஆகும்.
    • விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் அதிக விலை கொண்டிருக்கும் போதிலும், விற்பனையில் அசத்தி வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை வாங்க பத்தே நாட்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஹெட்செட் விற்பனை அமெரிக்காவில் பிப்ரவரி 2-ம் தேதி துவங்க இருக்கிறது. முன்னதாக இந்த ஹெட்செட் கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் விஷன் ப்ரோ இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

     


    ஜனவரி 29-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 2 லட்சத்திற்கும் அதிக விஷன் ப்ரோ ஹெட்செட்களை விற்பனை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஹெட்செட்டிற்கான முன்பதிவு ஜனவரி 19-ம் தேதி துவங்கியது.

    முன்னதாக சர்வதேச வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில், ஜனவரி 19 முதல் ஜனவரி 21-ம் தேதிக்குள் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் விஷன் ப்ரோ யூனிட்களை விற்பனை செய்திருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் 5 லட்சம் யூனிட்கள் வரை வினியோகம் செய்வதிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சவாலாக இருக்காது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    • புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.
    • மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

    அந்த வகையில், மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர், அளவில் பெரிய ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் மேக்புக் ஏர் மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் M3 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     


    புதிய ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களுடன் புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். 17.4 வெர்ஷனின் முதல் பீட்டாவில் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை ஐபேட் ப்ரோவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இத்துடன் ஃபேஸ் ஐ.டி. கேமராவும் வழங்கப்படுகிறது.

    2024 ஐபேட் மாடலில் புதிய OLED ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் M2 பிராசஸர், புதிய R1 சிப் உள்ளது.
    • விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விஷன் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே விஷன் ப்ரோ ஹெட்செட்டுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன. முன்பதிவை தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி இதன் விற்பனை துவங்குகிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் ஆப்பிளின் M2 பிராசஸர் மற்றும் புதிய R1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மென்மையானை குஷன்கள் உள்ளன.

     


    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ், 96 ஹெர்ட்ஸ் மற்றும் 100 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்கலாம்.

     


    ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 1080 பிக்சல் தரத்தில் ஏர்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள், இரண்டு பிரைமரி கேமரா சென்சார்கள், ஆறு டிராக்கிங் கேமராக்கள், கண்களை டிராக் செய்ய நான்கு கேமராக்கள், LiDAR ஸ்கேனர், ட்ரூடெப்த் கேமரா மற்றும் ஆறு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    விஷன் ப்ரோ ஹெட்செட் வெளிப்புற பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. பேட்டரி பேக்-ஐ பயனர்கள் தனி கேபிள் மூலம் விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் இணைத்து சார்ஜிங் செய்து கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரிகளின் திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் எடை 650 கிராம்கள் வரை இருக்கலாம். தனியே வழங்கப்படும் பேட்டரி பேக் எடை 353 கிராம் ஆகும்.

    ஆப்பிள் விஷன் ப்ரோ பேஸ் மாடல் 256 ஜி.பி. மெமரி விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என துவங்குகிறது. இதன் 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி. மெமரி மாடல்களின் விலை முறையே 3 ஆயிரத்து 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.07 லட்சம் மற்றும் 3 ஆயிரத்து 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியது.
    • அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததும் காரணம் என தகவல்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டாலர்கள் ஆகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

     


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

    கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • விஷன் ப்ரோ விற்பனை குறித்து ஆப்பிள் அப்டேட் கொடுத்தது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விற்பனை துவங்காமல் இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்து இருந்த நிலையில், இது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி அமெரிக்காவில் துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. பயனர்கள் இந்த ஹெட்செட்-ஐ ஜனவரி 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அமெரிக்க பயனர்கள் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் ஆகும்.

     


    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையிலும், மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்க முடியும். இதன் இந்திய விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    • ஆப்பிள் ஐபோனுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஐபோன் மாடலுக்கான சிறப்பு சலுகைகள் குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு விஜய் சேல்ஸ்-இல் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு சலுகை விற்பனை 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர், ஆன்லைன் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    சிறப்பு விற்பனை காரணமாக 128 ஜி.பி. மெமரி கொண்ட ஐபோன் 13 விலை ரூ. 51 ஆயிரத்து 820 என மாறியுள்ளது. இதன் உண்மை விலை ரூ. 59 ஆயிரத்து 900 ஆகும். ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 61 ஆயிரத்து 160 ஆக மாறி இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 490 என துவங்குகிறது.

     


    ஐபோன் 15 சீரிஸ் சலுகை விவரங்கள்:

    ஐபோன் 15 பேஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரத்து 990

    ஐபோன் 15 பிளஸ் பேஸ் மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 820


    ஐபோன் 15 ப்ரோ 128 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)


    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    • ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஒட்டுமொத்தமாக ரூ. 12 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் மாடல்களுக்கு தனி மவுசு உண்டு. ஒவ்வொரு முறை புதிய மாடல் அறிமுகமாகும் போதும், அதனை உடனே வாங்க தனி ரசிகர் பட்டாளமும் ஐபோனுக்கு எப்போதும் இருக்கும். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

    அறிமுகமான ஒரே வாரத்தில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அறிமுகமான சமயத்தில் ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. ரூ. 79 ஆயிரத்து 990 என்றும் 256 ஜி.பி. விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 512 ஜி.பி. விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

     


    இந்த நிலையில், விஜய் சேல்ஸ்-இல் ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஜனவரி 7-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகைகளை பயனர்கள் 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர்கள் மற்றும் வலைதளத்தில் பெற முடியும்.

    விஜய் சேல்ஸ்-இல் ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. ரூ. 70 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ. 12 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஐபோன் 15 ப்ரோ 1 டி.பி. விலை ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடலின் இதர வெர்ஷன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிது. 

    • விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
    • டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. விற்பனை விரைவில் துவங்க இருப்பதை ஒட்டி, ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலின் உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன.

    அதன்படி இரண்டாம் தலைமுறை விஷன் ப்ரோ மாடலில் சற்றே அதிநவீன மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அதிக பிரகாசமான மற்றும் அதிக திறன் கொண்ட மைக்ரோ OLED டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது ஒவ்வொரு கண்களிலும் வழக்கமான 4K டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

     


    இது குறித்து தென் கொரிய செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், ஆப்பிள் விஷன் ப்ரோ 2 மாடலில் RGB OLEDoS டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டிஸ்ப்ளேக்கள் தற்போதைய WOLED டிஸ்ப்ளேக்களை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    தற்போது RGB OLEDoS ரக டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்யும் ஒரே நிறுவனமாக சாம்சங் உள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய விஷன் ப்ரோ மாடலின் டிஸ்ப்ளே மாற்றுவதில் உறுதியாக இருந்தால், சாம்சங் டிஸ்ப்ளேக்களையே பயன்படுத்தும் என்று தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் ஐபோன் மாடல்களில் பயன்படுத்தப்படும் OLED டிஸ்ப்ளேக்களை சாம்சங் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×