search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்"

    • வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
    • மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது P70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏற்கனவே சில முறை தாமதமாகிவிட்டது. இந்த நிலையில், ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று நிலைகளில் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுதவிர ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுமை பெற்றுவிட்டதாகவும் சீன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Z அல்லது S வடிவில் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அளவு 10 இன்ச் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு BOE பேனல்களை வினியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஹீன்ஜ் (கீல்) ஹௌலி மற்றும் ஃபுஸ்டா போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த சாதனத்தை பெரியளவில் விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஹூவாய் ஈடுபட்டு வருகிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் ஹூவாய் விஷன் ப்ரோ என்று அழைக்கப்பட இருக்கிறது. இதில் உள்ள டாப் எண்ட் பிராசஸர் பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை வழங்கும்.

    இந்த அணியக்கூடிய சாதனம் அதிநவீன கூலிங் மெக்கானிசம் கொண்டு, பரவலான மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்கள் ஏற்படுத்தும் வெப்ப உணர்வை தடுக்கும். புதிய மடிக்கக்கூடிய சாதனம் மற்றும் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் தொடர்பாக ஹூவாய் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் போட்டியை எதிர்கொள்கிறது.
    • குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்டு நிகழ்ச்சியில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவு அதிக பிரபலம் அடைந்து வருகிறது. இதில் சாம்சங் நிறுவனம் ஹூவாய், ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் போட்டியை எதிர்கொள்கிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் புதிய சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இந்த முறை இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒதில் ஒன்று அல்ட்ரா பிரான்டிங் கொண்டிருக்கும் என்றும் மற்றொன்று குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

     


    கொரிய நிறுவனமான சிசா ஜர்னல் வெளியிட்டுள்ள தகவல்களில் சாம்சங் தனது குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்யும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா தவிர மற்ற அம்சங்கள் பட்ஜெட் விலையில் இருக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலையை குறைவாக நிர்ணயிக்க முடியும்.

    விலையை பொருத்தவரை சாம்சங்கின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 66 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஃபோல்டு 5 ஸ்மார்ட்போனின் விலையை விட 50 சதவீதம் குறைவு ஆகும்.

    • கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • மடிக்கக்கூடிய ஐபேட்-ஐ உருவாக்கி வருவதாக தகவல்.

    ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய போன்கள் பொறியாளர்களுக்கு அதிக சவால் நிறைந்த சாதனமாக இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஃப்ளிப்-ஸ்டைல் ஐபோன் மாடல்களை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் மட்டுமின்றி மடிக்கக்கூடிய ஐபேட் மாடலையும் ஆப்பிள் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் என கூறி ஏராளமான காப்புரிமைகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் உருவாக்கி இருக்கும் இரண்டு ப்ரோடோடைப் மாடல்களும் அதன் ஆரம்பகட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது.

    இவற்றின் உற்பத்தி அடுத்த ஆண்டு வரையிலும் துவங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ ஆப்பிள் ஃப்ளிப் போன் மாடலின் உற்பத்தி 2026 வாக்கில் துவங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    எனினும், புதிய சாதனத்தின் டிசைன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனில், இந்த திட்டத்தையே ஆப்பிள் நிறுவனம் முழுமையாக ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது. ப்ளிப் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலையும் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கிய முதல் முன்னணி நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுவரை ஐந்து தலைமுறை கேலக்ஸி Z ஃபோல்டு ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு முதல் சாம்சங் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று சாம்சங் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனமும் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரென்ட்ஃபோர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஃபேன் எடிஷனை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்பட்டது. கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களின் ஃபேன் எடிஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    ×