search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anushka shetty"

    `பாகுபலி' படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் முக்கி நாயகியாக பார்க்கப்படும் ஹன்சிகா தற்போது கதை கேட்டு வரும் நிலையில், இனி கொஞ்ச காலத்துக்கு பேய் படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார். #AnushkaShetty
    `பாகுபலி' படத்துக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு படங்களில் ஒப்பந்தமாகாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. 

    திருமணத்திற்காக சில பரிகாரங்கள் செய்யவிருப்பதால் அனுஷ்கா கதை தேர்வில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அனுஷ்கா தற்போது கதை தேர்வில் மிக கவனமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால், அனுஷ்காவுக்கோ மீண்டும் மீண்டும் பேய் பட கதைகளாகவே வருகின்றனவாம். எனவே சில காலத்துக்கு பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார். 



    அதோடு கதை கேட்கும்போதே அந்த கதை இந்தி சினிமாவுக்கும் ஒத்து போவது போல கதை கேட்கிறாராம். பாகுபலியால் கிடைத்த இந்திய அளவிலான வரவேற்பை அனுஷ்கா தான் சிறப்பாக அறுவடை செய்யப்போகிறார் என்கிறார்கள். #AnushkaShetty

    ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக மூன்று அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படத்தில் கமல்ஹாசன், மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில் இயக்குநர் விஜய் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.

    இவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். மூன்றாவதாக இப்போது பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம். இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர். இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

    மற்ற இரு படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், மஞ்சிமா மோகன், வித்யாபாலன், நித்யா மேனன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். 3 படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan

    பிரபாஸ் - அனுஷ்கா காதலிப்பதாக பல்வேறு தகவல்கள் வரும் நிலையில், பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அனுஷ்காவின் தாயார் தெரிவித்துள்ளார். #Prabhas #AnushkaShetty
    பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

    இதுகுறித்து அனுஷ்காவின் தாயார் கூறும்போது ‘எனக்கு பிரபாசை மிகவும் பிடிக்கும். அவரும், அனுஷ்காவும் சேர்ந்து நடித்துள்ளனர். என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்களின் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார். #Prabhas #AnushkaShetty
    பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்திற்கு பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் ஒரு விருதுகள் கூட கிடைக்கவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Prabhas
    பாகுபலி படத்துக்காக பிரபாசுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்று சமூக வலைதளங்களில் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

    பிரபாஸ் ரசிகர்களின் சமூக வலைதள பக்கங்களில் ‘இந்த படத்திற்காக தன்னுடைய திருமணத்தையே தள்ளி வைத்தார். 5 ஆண்டுகள் தன் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்தார். ஒரு நாளைக்கு 40 முட்டைகள் சாப்பிட்டார்.

    6000 திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். தோள்பட்டையில் பெரிய காயம் அடைந்தார். அவரது நடிப்பால் இந்த ஒட்டுமொத்த நாட்டுமக்களையே கண்ணீர் விடவைத்தார்.



    ஆனால் அவரது நடிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு விருதுகூட இல்லையா? இங்கே விருதுகள் என்பது அங்கீகரிப்பு இல்லை’ என்று சோகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

    சமீபத்தில் நடந்த பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் பிரபாசுக்கு விருது வழங்கப்படாததே இதற்கு காரணம் என்கிறார்கள். #Prabhas #Baahubali
    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள அனுஷ்கா, திருமணத்திற்கு தயாராகி வரும் நிலையில், சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். #AnushkaShetty
    திருமணத்துக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா என்று தெலுங்கு மீடியாக்களில் செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் இன்னொரு செய்தியும் வந்து இருக்கிறது. சமீபகாலமாக தான் ஒப்புக்கொள்ளும் படங்களில் நெருக்கமான காட்சிகளோ, கவர்ச்சி காட்சிகளோ இல்லாத மாதிரி பார்த்துக்கொள்கிறார்.

    கதை சொல்ல தொடங்கும்போதே இந்த 2 கட்டுப்பாடுகளையும் இயக்குனர்களிடம் விதித்து விடுகிறார் அனுஷ்கா. காரணம் திருமணம் ஆகவிருப்பது தான் என்கிறார்கள். சமந்தா திருமணத்துக்கு பின் முத்த காட்சிகளில் நடித்தது சர்ச்சையை உண்டாக்கியது. அந்த படம் திருமணத்துக்கு முன்பே ஒப்புக்கொண்டது.



    எனவே அதேபோன்ற சர்ச்சைக்குள் சிக்க அனுஷ்கா விரும்பவில்லை. எனவே தான் திருமணமாகும் சமயத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள். #AnushkaShetty

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கோவில்களை அடிக்கடி சுற்று வருவதற்கு காரணம் வெளியாகியுள்ளது. #Anushka
    தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் அனுஷ்கா. அருந்ததி, பாகுபலி படம் மூலம் தனி நாயகனுக்குரிய மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அனுஷ்காவுக்கு இப்போது வயது 37. கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வந்தன.

    ராணா, ஆர்யா, நாகசைதன்யா என்று பல ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வந்தது. புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த அனுஷ்கா திடீரென்று மீண்டும் படங்களில் பிசியாகி இருக்கிறார்.



    தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அனுஷ்காவை முதன்மை கதாநாயகியாக்க இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முயன்றுகொண்டிருக்க அவரோ மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் ஏதோ தோ‌ஷம் இருப்பதால் தான் திருமணம் தடைபடுகிறது. அந்த தோ‌ஷத்தை நிவர்த்தி செய்ய கோவில் கோவிலாக சுற்றி வருகிறார் அனுஷ்கா என்கின்றன தெலுங்கு வட்டாரங்கள்.
    ×