search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allotment"

    • தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
    • இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

    கூறியிருப்பதாவது :-

    2022-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் முதல் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை முடிந்துள்ளது.

    மீதி உள்ள காலியிடங்களில் சேர 2-ம் கட்டமாக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் இணையதளம் வாயிலாக வருகிற 25ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    முதல் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்களும், தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

    www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கணினி மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    உரிய ஆவணங்களுடன் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலம் அல்லது கடன் அட்டை வாயிலாக விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.

    மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

    மேலும் விவரங்களுக்கு தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர், முதல்வரை 9994043023, 9840950504, 8056451988, 9943130145, 7373935569 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும். தற்காலிக ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத் தொடா்ந்து சங்கத்தின் புதிய தலைவராக பி .சுப்பிரமணியம், செயலாளராக லோகநாதன், பொருளாளராக விஜயராணி, துணைத் தலைவராக ஆனந்தன், துணைச் செயலாளராக வீரன் உள்பட 16 போ் கொண்ட கமிட்டி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

    சிஐடியூ. மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகி பழனிசாமி, விவசாய சங்க மாவட்ட நிா்வாகிகள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • இந்த திட்டம் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
    • இந்த திட்டத்தில் விண்ணப்பித்து குடியிருப்புகளை பெற தகுதியான நபர்கள் நினைத்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவரு க்கும் வீடு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப் பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன . இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்ப வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவு பங்கீடு அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து வல்லம் அய்யனார் கோவில் திட்ட பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துபட்டது.

    ஆனால் இதற்கான காலக்கெடு கடந்த 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்பு றங்களில் வசிப்பவர்களில் பல தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்க முடியாமல் போனது.

    இது குறித்து நகர்ப்புற ங்களில் வசிக்கும் பொதும க்கள் கூறும்போது:- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் திட்டம் ஒரு உன்னதமான திட்டமாகும்.

    இந்த திட்டம் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் , ஆதரவற்ற விதவைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 6-ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்து விட்டது. இதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பலரால் விண்ணப்பிக்க இயலவி ல்லை. தற்போதைய காலத்தில் வீடு கட்டுவதுஎன்பது மிகவும் சவாலான ஒன்று.

    அந்தக் குறையை போக்க நகர்ப்புற வழி விட மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து குடியிரு ப்புகளை பெற தகுதியான நபர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவகாசம் முடிந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை இன்னும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இணையதளம் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீட்டில் கலெக்டர் பங்கேற்றார்.
    • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் வத்திராயிருப்பு (வார்டு எண். 2) மற்றும் வ.புதுப்பட்டி (வார்டு எண். 7) பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு சாதாரண தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

    இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

    ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் நாராயணமடம் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் இருந்து வத்திராயிருப்பு மற்றும் வ.புதுப்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, வருகிற 5-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான 3-ம் கட்ட பணிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    ×