search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adhir Ranjan Chowdhury"

    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
    • பாஜ.க. இதை பிரச்சினை ஆக்குகிறது.

    புதுடெல்லி :

    விலைவாசி உயர்வு, அத்தியாசிய பொருட்கள் மீது சரக்கு சேவை வரி விதிப்பு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் விஜய் சவுக்கில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தி, அணிவகுத்து செல்ல முற்பட்டனர்.

    அவர்கள் எங்கே அணி வகுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ஜனாதிபதி மாளிகையைக் குறிக்கும் 'ராஷ்டிரபதி பவன்' என்பதற்கு பதிலாக 'ராஷ்டிரபட்னி' என்ற வார்த்தையை பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தவறாக பயன்படுத்தினார். ஜனாதிபதியை அவமதிக்கும் இந்த வார்த்தையால், பெரும் சர்ச்சை உருவானது.

    இதில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், விவசாய ராஜாங்க மந்திரி ஷோபா கரண்ட்லஜே உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நேற்று போர்க்கொடி உயர்த்தினர்.

    அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் கோரிக்கை வாசகங்கள் கொண்ட அட்டைகளை ஏந்தி நின்று, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே இந்த விவகாரம் குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் கவனக்குறைவாக ராஷ்டிர பட்னி என்ற வார்த்தையை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி விட்டேன். நாக்கு பிறண்டதால் அவ்வாறு கூறி விட்டேன். ஒருபோதும் ஜனாதிபதியை மரியாதைக்குறைவாக பேசவில்லை.

    நான் என்ன செய்ய வேண்டும்? நான் அதைக்கூறி விட்டேன், தவறாக அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். அதில் கவனம் செலுத்தி விடாதீர்கள் என்று கூற பத்திரிகையாளர்களை கூட தேடினேன். ஆனால் அவர்களை பார்க்க முடியாமல் போய்விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், "நான் ஓரு வங்காளி. இந்தியில் பேசி பழக்கம் இல்லை. இந்தி எனது தாய்மொழியும் இல்லை. நான் ஒரு தவறு செய்து விட்டேன். நான் ஒப்புக்கொள்கிறேன். நான் ஜனாதிபதியிடம் நேரம் ஒதுக்கி கேட்டிருக்கிறேன். நான் அவரிடம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் இந்த பகந்திகளிடம் (பா.ஜ.க.வினரிடம்) அல்ல" என கூறினார்.

    சில பா.ஜ.க.வினர் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே மலையாக்கப் பார்க்கிறார்கள் என சாடினார்.

    வீடியோ வெளியீடு

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் எந்த சூழ்நிலையில் தான் ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை பயன்படுத்த நேர்ந்தது என்பதை எடுத்துக்கூறி உள்ளார். மேலும், பாஜ.க. இதை பிரச்சினை ஆக்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு.
    • இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தல்.

    நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

    இந்நிலையில், குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

    புதுடெல்லி:

    நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். தான் ஒருபோதும் இந்திய ஜனாதிபதியை அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும், ஊடகங்களிடம் பேசும்போது கவனக்குறைவாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆளும் பாஜக இந்த விஷயத்தை பெரிதாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

    எனினும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே இவ்வாறு ஜனாதிபதியை அவமதித்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுதியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மதியம்வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 12 மணிக்கு பிறகும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்தியில் ஜனாதிபதி "ராஷ்டிரபதி" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • மார்கரெட் ஆல்வா தேர்வில் தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் புகார்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க திரிணாமுல் முடிவு

    கொல்கத்தா:

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரசின் முடிவு எதிர்க்கட்சிகளுக்கும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இந்த தேர்தலில் பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படும் போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தாபானர்ஜி விரும்பினார், அது நடக்காது என்று தெரிந்த உடன் ஓடிவிட்டார். அனால் காங்கிரஸ் பின்வாங்க வில்லை.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதல்வர் மம்தா உதவவில்லை. அவர் பாஜகவுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க விரும்புகிறார்கள்.

    பாஜகவிற்கும் திரிணாமுல் இடையே ஒரு புரிதல் உள்ளது. ஜெகதீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது அவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    ×