search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth commits suicide"

    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
    • விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (30). ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அய்யம்மாள் (25).

    விக்னேஷ் குடிப்பழக்கம் உள்ளவர் என தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 20-ந் தேதி அய்யம்மாள் மகளிர் போலீசில் விக்னேஷ் மீது புகார் செய்தார். போலீசார் விக்னேஷை அழைத்து சமரசம் பேசினர்.

    சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே அய்யம்மாள் தனது தம்பியை அழைத்துக் கொண்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். இதனால் பயந்து போன விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார். அய்யம்மாள் திரும்பி வந்த போது விக்னேஷ் தூக்கில் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சந்தோஷ்குமாருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
    • சந்தோஷ்குமாரின் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலை கருப்பராயன் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தோஷ்குமார் (27). சந்தோஷ்குமாருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் அன்னூர் சாலையில் உள்ள டேங்க் மேடு பகுதியில் தனியாக குடியிருந்து வந்தார்.இதனிடையே சந்தோஷ்குமாரின் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தோஷ் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஈஸ்வரன் குஞ்சுபாளையம் பிரிவில் உள்ள மி்க்சர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • தற்கொலை செய்த ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பொள்ளாச்சி,

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 27). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு வந்த இவர் குஞ்சுபாளையம் பிரிவில் உள்ள மி்க்சர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது அக்கா மகளை ஒருதலையாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வது என முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணை வேறு ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர். இந்த தகவல் ஈஸ்வரனுக்கு கிடைத்ததும் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று மிக்சர் கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்த ஈஸ்வரன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சுரேந்தருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்ைதகள் உள்ளனர்.
    • குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்தார்

    கோவை,

    மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 32). கூலி ெதாழிலாளி.

    இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்ைதகள் உள்ளனர். இந்த நிலையில் சுரேந்தருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனை அவர் கைவிட பல முறை முயற்சி செய்து வந்தார்.

    ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனை நினைத்து அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று மது குடித்து வீடு திரும்பினார்.

    வீட்டிற்கு வந்ததும் அவர் அறைக்கு சென்று துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அருகே உடல் நலக்குறைவு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    திருப்பத்தூர் மாவட்டம் இருனப்பட்டு திரு.வி.க. நகரை சேர்ந்தவர் உமாபதி (வயது 29). இவர் கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய அண்ணன் தளபதிகுமார் கிருஷ்ணகிரியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். 

    சம்பவத்தன்று ஏட்டு தளபதி குமார், தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார். அந்த நேரம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டு சாவியை தம்பி உமாபதி கேட்டார். அவரிடம் சாவியை கொடுத்து விட்டு தளபதிகுமார் சென்றார். இதன்பிறகு உமாபதி வீட்டில் இருந்து தனது நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். 

    பிறகு மீண்டும் காவலர் குடியிருப்பில் உள்ள அண்ணனின் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் அங்கு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக்குறைவு காரணமாக உமாபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாடிப்பட்டி அருகே வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தது பிடிக்காததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாடிப்பட்டி:

    மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். செங்கல் சூளை அதிபர். இவரது மகன் ரியாத் அகமது (வயது 20).

    இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ரியாத் அகமது வி‌ஷம் குடித்த நிலையில் காரை ஓட்டிக் கொண்டு வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி பிரிவுக்குச் சென்றார். அங்கு 4 வழிச்சாலையில் காரை நிறுத்திய அவர் திடீரென வாந்தி எடுத்தார்.

    இதனை கண்டு அந்த வழியாகச் சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது தான் ரியாத் அகமது வி‌ஷம் அருந்தி இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நேற்று இரவு ரியாத் அகமது பரிதாபமாக இறந்தார்.

    திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் அவர் தற்கொலை செய்திருப்பது போலீசார் தெரியவந்தது.

    வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×