search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குப்போட்டு தற்கொலை"

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் சோழிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் பொத்தனூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா (26). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் -மனைவியிடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தராஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார் .இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் தனியாக வீட்டில் இருந்த போது மனைவியின் துப்பட்டாவை எடுத்து விட்டத்தில் மாட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இன்று காலை அவரது உறவினர்கள் பார்த்த போது கோவிந்தராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
      • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

       விருதுநகர்

      ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 36). இவருக்கு மது பழக்கம் இருந்தது.

      இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவராகவே வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

      • சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
      • வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்த் (27).

      தற்கொலை

      இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாததிற்கு முன்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து பொத்தனூருக்கு வந்து விட்டார்.

      வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அரவிந்த் வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அரவிந்த் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அரவிந்தை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

      விசாரணை

      இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவ மனை யில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
      • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      மதுரை

      மதுரை வண்டியூர் சிவசக்தி நகர் டி.பி.எஸ்.நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவரது மனைவி சுபா (37). இவர் அரசு வேலையில் சேர்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி வந்தார்.

      ஆனால் அவருக்கு அரசுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சுபா சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      தெப்பக்குளம் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்(45). இவருக்கு நிரந்தர வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

      அவரது மனைவி சாரதா கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • திருமணமாகி 2 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
      • அவரது சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் தெரிவித்துள்ளார்.

      விருதுநகர்

      சென்னை அண்ணாநகர் கொருக்குபேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி (வயது44). இவரது மகள் தீபா (26). இவருக்கும், விருதுநகர் கடம்பகுளம் பகுதியை சேர்ந்த சரவணக் குமார் என்பவருக்கும் கடந்த ஜூன் 1-ந் தேதி திருமணமானது.

      இந்த நிலையில் 1 மாதத்திற்கு பின்பு கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த பெண் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கணவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வருவதாகவும் தாயிடம் தீபா கூறியுள்ளார்.

      அப்போது மீனாட்சி மகளை சமாதானம் செய்து பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் மீனாட்சி தீபாவை செல்போனில் அழைத்து ள்ளார். ஆனால் தீபா அழைப்பை ஏற்கவில்லை. இந்த நிலையில் மாலையில் தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மீனாட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விருதுநகர் வந்த போது மீனாட்சி உடல் சவக்கிடங்கில் வைக்கப் பப்பட்டுள்ளதாகவும், அவரை காண முடியாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

      இந்த நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்ப தாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூலக்கரை போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
      • சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

      மதுரை

      மதுரை அச்சம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் அனுப்பானடியில் உள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரிகரன்(வயது14). இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

      கடந்த சில வாரங்களாக பள்ளி முடிந்ததும் ஹரிகரன் வீட்டிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஹரிகரன் மனவேதனை அடைந்தார்.

      இந்த நிலையில் நேற்று அவரது சகோதரி பிரியதர்ஷினி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து சகோதரி ஜன்னல் வழியாக பார்த்த போது, ஹரிகரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார் .

      இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

      தற்கொலை குறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

      பெற்றோர் கண்டித்ததால் ஹரிகரன் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. முன்னதாக மகனின் உடலை பார்த்து அவரது பெற்றோர், சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

      • சிவகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
      • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      கோபி:

      கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 22). கூலி தொழிலாளி.

      இவர் நேற்று முன்தினம் ஒரு இளம்பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விசாரித்தனர்.

      அப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகி 20 நாட்கள் தான் ஆகிறது. அந்த பெண் அவரது கணவருடன் வாழ பிடிக்காமல் சிவகுமா ருடன் வந்ததாகவும் கூறப்படுகிறது.

      இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிவகுமார் அந்த பெண்ணை அவரது தாய் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.

      அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை அவரது உறவினர்கள் தேடி வந்தனர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

      இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் சிவகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

      இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

      ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

      இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • குடும்ப பிரச்சினையால் விரக்தி
      • போலீசார் விசாரணை

      தூசி:

      வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கும் செய்யாறு தாலுகா தூசி அருகே கூழ மந்தல் கிராமம் சிவப்பிரகாசம் நகர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் என்பவருக் கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

      இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் 2 நாட்க ளாக வீட்டில் பேசாமல் இருந்துள் ளார். நேற்று முன்தினம் ரஞ்சிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலை யில் தூக்கில் தொங்கியபடி பாலமுரு கன் ரஞ்சிதாவுக்கு செல்போனில் படம் அனுப்பி உள்ளார். இதை கண்ட ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் உறவி னர்களுக்கு போன் செய்து உடனே வீட்டிற்கு சென்று பார்க் கும்படி கூறினார். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியபடி இருந்த பாலமுருகனை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

      இதுகுறித்து ரஞ்சிதா தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

      • சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்
      • பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்

       ஈரோடு,

      ஈரோடு மூலப்பாளையம் பாரதிபாளையம் முதல் வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 58). ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் வேளாண்மை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

      இந்த நிலையில் சுரேந்திரன் உடல் நலக்குறை–வால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலுடன் காணப்பட்டார்.

      கடந்த 9-ந் தேதி இரவில் சுரேந்தின் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று தூங்க சென்றார். மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த குமுதா நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்தார்.

      அப்போது சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.

      இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

      அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

      இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • குழந்தை இல்லை.இது தொடர்பாக வேல்முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
      • இந்நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

      தருமபுரி,

      தருமபுரியை அடுத்த குமாரசாமிபேட்டை சத்யா நகரை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வேல்முருகன் (வயது 34).தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

      இவர்களுக்கு குழந்தை இல்லை.இது தொடர்பாக வேல்முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

      இது குறித்து அவரது தந்தை மாது கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

      அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • சந்தோஷ்குமாருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
      • சந்தோஷ்குமாரின் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

      மேட்டுப்பாளையம்,

      மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலை கருப்பராயன் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தோஷ்குமார் (27). சந்தோஷ்குமாருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் அன்னூர் சாலையில் உள்ள டேங்க் மேடு பகுதியில் தனியாக குடியிருந்து வந்தார்.இதனிடையே சந்தோஷ்குமாரின் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

      இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தோஷ் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • காதல் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி.
      • போலீசார் விசாரணை

      ஜோலார்பேட்டை:

      தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (வயது28) இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் மாளவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி, பூக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த அஞ்சலி (26). என்பவரை திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

      இதனையடுத்து இருவரும் அஞ்சலியின் ஊரிலேயே வசித்து வந்தனர்.

      மேலும் இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரது மனைவி அஞ்சலி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியாக இருந்து வந்த மனோஜ் குமார் இன்று அதிகாலை அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

      தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      ×