search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை இல்லாத ஏக்கத்தில்   நிதிநிறுவன ஊழியர்   தூக்குப்போட்டு தற்கொலை
    X

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் நிதிநிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

    • குழந்தை இல்லை.இது தொடர்பாக வேல்முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
    • இந்நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த குமாரசாமிபேட்டை சத்யா நகரை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வேல்முருகன் (வயது 34).தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு குழந்தை இல்லை.இது தொடர்பாக வேல்முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை மாது கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×