என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் போலீஸ் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்3 Nov 2021 2:00 PM GMT (Updated: 3 Nov 2021 2:00 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே உடல் நலக்குறைவு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
திருப்பத்தூர் மாவட்டம் இருனப்பட்டு திரு.வி.க. நகரை சேர்ந்தவர் உமாபதி (வயது 29). இவர் கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய அண்ணன் தளபதிகுமார் கிருஷ்ணகிரியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று ஏட்டு தளபதி குமார், தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார். அந்த நேரம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டு சாவியை தம்பி உமாபதி கேட்டார். அவரிடம் சாவியை கொடுத்து விட்டு தளபதிகுமார் சென்றார். இதன்பிறகு உமாபதி வீட்டில் இருந்து தனது நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார்.
பிறகு மீண்டும் காவலர் குடியிருப்பில் உள்ள அண்ணனின் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் அங்கு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக்குறைவு காரணமாக உமாபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X