search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weight"

    • ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
    • உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பூசணி ஜூஸ் சிறந்த காய்கறியாகும்.

    வெள்ளை பூசணிக்காய் போன்ற முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிற காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிப்பாக சில குழந்தைகள் இதை பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. ஆனால் அதன் அற்புதமான நன்மைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள பூசணி குளிர்ச்சியான நீர்ச்சத்து பண்புகளை கொண்டுள்ளது.

    பூசணி ஜூஸில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

    பெரும்பாலான நாகரிகம் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைக் கடைப்பிடிக்கின்றனர். பூசணி ஜூஸ் இவர்களுக்கு ஒரு மந்திர மருந்து போல் செயல்படுகிறது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குகிறது மற்றும் சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

    இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகவும் பூசணி பயன்படுத்தப்படுகிறது.


    மிசோரமில், லுஷே போன்ற பழங்குடியினர் கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய பூசணி ஜூஸ், சூப்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்.

    பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது.

    இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டுவதில்லை. அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்கிறது.

    நிறைய பேருக்கு குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் உடலில் உண்டாகும் அதிகப்படியான சூட்டின் காரணமாக நிறைய உடலியல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

    இந்த உடல் சூட்டை அதிகரிப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் கூட மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்படி உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பூசணி ஜூஸ் சிறந்த காய்கறியாகும். ஏனெனில் இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

    இது நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் விளைவை கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

    பூசணிக்காய் ஜூஸில் கால்சியம், துத்தநாகம் (ஜிங்க்), பாஸ்பரஸ் போன்ற அனைத்து வகையாக முக்கிய ஊட்டச்சத்துக்களும், தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ள பூசணி ஜூஸ் ஆற்றல் மட்டங்களை பெரிதும் அதிகரிக்கிறது. இது உடல் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

    அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய மிகச்சிறந்த தீர்வாக இந்த பூசணிக்காய் ஜூஸ் இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் உண்டாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பிற நோய்களைத் தாக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் ஊக்குவித்து, குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

    உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் இந்த பூசணிக்காய். மன அழுத்தம், மனப் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

    இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.

    அதோடு இன்சோம்னியா (insomnia) என்னும் தூக்கமின்மை மற்றும் மனப் பதட்டம் போன்ற பிரச்சினைகளைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.


    தேவையான பொருள்கள்:

    வெள்ளை பூசணி - 1 கப்

    இஞ்சி - ஒரு இன்ச் அளவு

    பூண்டு - 2 பல்

    உப்பு - சிறிதளவு

    எலுமிச்சை பழம் - 1

    தேன் - 1 ஸ்பூன்

    புதினா இலைகள் - 5

    செய்முறை:

    முதலில் பூசணிக்காயை தோல் சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பூசணி உடன் பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து பிளண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த ஜூஸை ஒரு கிளாஸில் வடிகட்டி ஊற்றி கொள்ளவும்.

    எலுமிச்சை ஜூஸ், உப்பு, தேன் மற்றும் புதினா இலைகள் உட்பட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலக்கவும். பூசணி ஜூஸ் தயார். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய பலன்களைப் பெற முடியும்.

    • 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.
    • பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும்.

    சென்னை:

    பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

    ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இன்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதிகபட்ச சில்லறை விலையுடன், ஒரு கிலோவிற்கு 'யூனிட் விற்பனை விலை' என்ன என்பதை அச்சிட வேண்டும்.

    அதே போல ஒரு லிட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் போது அதற்கு அதிக பட்ச சில்லறை விலையுடன் ஒரு லிட்டருக்கு யூனிட் விற்பனை விலை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.

    அதேபோல் ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளுக்கு அதன் மொத்த விலையுடன், ஒரு கிராம் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும். ஒரு லிட்டருக்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மில்லி லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். ஒரு மீட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருளுக்கு ஒரு மீட்டருக்கான விலையையும், ஒரு மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட பொருளுக்கு ஒரு செ.மீ. விலையையும் குறிப்பிட வேண்டும்.

    பேனா மற்றும் பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்ட பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும்.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த புதிய நடைமுறையால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான முறையில் தேர்ந்தெடுத்து பொருட்களை வாங்க முடியும். இன்று முதல் இந்த புதிய நடைமுறை கட்டாயமாகிறது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    பால், டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய், கோதுமை மாவு, குளிர்பானம், குடிநீர், குழந்தைகளுக்கான உணவு, பருப்பு வகைகள், தானியங்கள், சிமெண்ட் பை, பிரட் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கான 'குறிப்பிட்ட அளவு' என்ற விதிமுறைகளும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்கும் அனைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களின் அளவை தீர்மானிக்க முழு சுதந்திரம் உள்ளது. அனைத்து அளவுகளிலும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பதால் நுகர்வோர் தங்களுக்கு தேவையா னதை தேர்வு செய்து வாங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைகளில் முத்திரையிடாத 30 தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டது.
    • எடை அளவுகளை முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு கொள்ள வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள்,

    தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி கடைகள் மற்றும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பழுது பார்ப்பவர் நிறுவனங்களில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்படுதல் தொடர்பாக கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 27 நிறுவனங்கள் மற்றும் மறுபரிசீலனைச்சான்று வெளிக்காட்டி வைக்காத 11 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீன் மற்றும் இறைச்சி கடைகளில் முத்திரையிடாத 30 தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டது.

    எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம், பொறுப்பு) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

    ×