என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Test Rankings"
- டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் பும்ரா.
- நம்பர் ஒன் பிடித்த நிலையில் அவரின் பதிவு, கிரிக்கெட் விமர்சகளிடம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த சிறப்பான பந்து வீச்சு மூலம் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். 30 வயதான அவர் 4-வது இடத்தில் இருந்து முன்னேறி 'நம்பர் 1' இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தார். அதாவது இந்திய வேகப்பந்து வீரர்களில் இதுவரை யாரும் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது கிடையாது.
1979-80-ம் ஆண்டுகளில் கபில்தேவ் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்து வீரர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன்சிங் பெடி ஆகியோர் முதல் இடத்தில் இருந்தனர்.
டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தை பிடித்தது குறித்து பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில் "நமக்கு ஆதரவு கொடுக்க ஒருவர் இருவரை தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் வாழ்த்து சொல்ல ஆயிரக்கணக்கில் வருவார் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை மறைமுகமாக தாக்கி இந்த மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்கும் என்று பும்ரா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் குஜராத் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டிக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததற்காக அவரை வாழ்த்தியும், புகழ்ந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா இந்த மீம் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது.
மேலும் இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை குறி வைத்தும் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
- டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.
- இந்தியாவின் ரிஷப் பண்ட் 5-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும், விராட் கோலி 11-வது இடத்திலும் உள்ளனர்.
துபாய்:
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசேன் 935 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் பெர்த்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது இரட்டை சதம் மற்றும் சதம் அடித்தார். இதனால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அடுத்து, 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 4வது இடத்திலும் உள்ளார்.
இந்திய வீரர்களில் ரிஷப் பண்ட் 5-வது இடத்திலும் ,கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 11-வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ‘நம்பர் 1’ இடத்தில் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
இந்திய அணி ‘நம்பர் 1’ இடத்தில் நீடிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் ஒரு டெஸ்டில் ‘டிரா’ செய்தால் போதுமானது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால். 120 புள்ளிகளுடனும் முதல் இடத்திலும், ஆஸதிரேலியா 97 புள்ளியுடன் 5-வது இடத்திலும் நீடிக்கும்.
ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால், 110 புள்ளிகளுடன் ‘நம்பர் 1’ இடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 108 புள்ளியுடன் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்படும்.
ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் அந்த அணி 108 புள்ளிகளை பெறும். இந்திய அணி 109 புள்ளியுடன் இருக்கும். ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றால் 107 புள்ளிகளை பெறும். இந்தியா 111 புள்ளிகளுடன் இருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்