என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sunny"
- 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது.
- வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாட்டால் மழை பெய்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.
குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினார்கள். சாலைகள் வெறிச்சோடின. பகலில் வெப்ப உஷ்ணத்தால் உடலில் இருந்து வியர்வை கொட்டுகிறது. புழுக்கமும் காணப்படுகிறது.
தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் ஒருவித சோர்வு ஏற்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கரூர், பாமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.
இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரி வித்துள்ளது. ஈரோட்டில் 110 டிகிரி, வேலூர், திருப் பத்தூர் ஆகிய இடங்களில் 108 டிகிரி வெப்ப நிலை பதிவாகி உள்ளது. 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது.
தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் 3 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். வட தமிழக உள் மாவட் டங்களில் இன்று மிக அதிக மாக வெப்பத்தின் தாக்கம் இருந்தது. தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யக் கூடும்.
வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாட்டால் மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதிப்ஜான் கூறியதாவது:-
தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் கரூர், ஈரோடு, நாமக்கல், வேலூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் வெயில் அதிகமாக தாக்கும். 4 நாட்கள் வரை பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். அதன் பிறகு குறையத் தொடங்கும்.
10, 12-ந் தேதி வாக்கில் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை தொடர்ந்து பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதனால் வெப்பம் தணியும்.
மேலும் குமரி கடல் பகுதி யில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் உள்ளது. அதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரே நாளில் 244 மி.மீ. மழை கொட்டியது.
- நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் குளிர்ந்த காட்சி வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.
பின்னர் இரவு முழுவதும் குளிர்ந்த காட்சி வீசி கொண்டிருந்தது.
இதே போல் வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, வெட்டிக்காடு, திருவிடைமருதூர், அதிரா ம்பட்டினம் ,பேராவூரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன. ஒரே நாளில் 244.50 மி.மீ. மழை அளவு பதிவானது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு ;-
திருவிடைமருதூர்-16.60, வெட்டிக்காடு-16.40, ஒரத்தநாடு-15, திருக்காட்டுப்பள்ளி- 14.40, ஈச்சன்விடுதி - 10.20, கும்பகோணம் -9.60, தஞ்சாவூர் -8, திருவையாறு -7 ஆகும்.
- தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
- அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தன. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று தஞ்சையில் காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளித்த வண்ணம் உள்ளது.
அவ்வப்போது லேசான சாரல் மழை பொழிந்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. எனவே இதுபோல் அடுத்து வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்