search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spiritual Tourism"

    • 440 பேர் தரிசனம்
    • கிரிவலம் சென்றனர்

    வேங்கிக்கால்:

    ெரயில்வே சுற்றுலா மற்றும் உணவுத் துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா ரயில் செகந்திராபாத்தில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை ெரயில் நிலையம் வந்தடைந்தது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் 440 பேர் சுற்றுலா ெரயிலில் வந்தனர்.

    இவர்கள் அருணசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்து பின்னர் கிரிவலம் சென்றனர்.

    இன்று இரவு 10 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சுற்றுலா ெரயில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் செல்கிறது.

    • ரெயில் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டம்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் சேவை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில்வே தென் மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் மற்றும் சென்னை மண்டல துணை மேலாளர் மாலதி ஆகியோர் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியன் ெரயில்வே சுற்றுலா பிரிவில், பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை புதியதாக அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 சிலிப்பர் பெட்டிகள், 1 பேண்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் இந்த ரெயிலில் உள்ளது.

    பாரத் கவுரவ் சுற்றுலா பிரிவு தென் மண்டலம் சார்பில், வருகிற ஜூலை மாதம் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 1-ந் தேதி, இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள் அடங்கிய இந்த ஆன்மீக சுற்றுலா ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவ தேவி (கட்ரா) அமிர்தசரஸ், புது டெல்லி ஆகிய இடங்கள் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் கொச்சு வேலி, நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழித்தடத்தில் செல்லும்.

    இந்த ஆன்மீக சுற்றுலாவை கான ஒருவருக்கு சிலிப்பர் பெட்டிக்கு ரூ. 22 ஆயிரத்து 35-ம், குளிர் சாதன வசதி பெட்டிக்கு ரூ.40 ஆயிரத்து 380 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் இடங்களை பார்வையிடுவதற்கு போக்குவரத்து மற்றும் ரெயில் பயணத்தின் போது தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர் என சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டமும் வழங்கப்பட உள்ளது.

    இதில் மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரெயிலில் பயணித்தால், எல்.டி.சி. சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது.
    • கோவில் பிரசாதம், மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னை :

    தமிழகத்தில் பொதுமக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டு போற்றி வருவதோடு, ஒரே நாளில் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதை பெருவிருப்பமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 'தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை செயல்படுத்தும் வகையில், கடந்த ஆடி மாதம் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைதோறும் குறைந்த கட்டணத்தில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    அதேபோல், 2-ம் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயல் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, கூடுதல் கமிஷனர் சி.ஹரிப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் பாரதி தேவி, இணை இயக்குனர் பி. புஷ்பராஜ், இணை கமிஷனர்கள் ஆர்.சுதர்சன், ந.தனபால், கே.ரேணுகா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் மாணவி தவறி விழுந்து பலியானார்.
    • 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. ஆட்டோ ஓட்டி வரும் இவரது மனைவி சுசீலா. இவர்க மகள் கீர்த்தனா (வயது12) இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்கரபாணி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர். நேற்று மாலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்கள், முன்னதாக கோவில் அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் குளித்தனர். அப்போது கீர்த்தனா குளத்தில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    • மதுரையில் இருந்து சீரடிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் 21-ந் தேதி புறப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரையில் இருந்து முதன் முதலாக பல்வேறு ஆன்மீக சுற்றுலா தலங்களை இணைத்து மதுரை-காசிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது ஆன்மீக சுற்றுலா ரெயில் மதுரையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வருகிற 21-ந்தேதி காலை 7.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. இது திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூர் வழியாக ஐதராபாத் செல்கிறது. அங்கு சலர்ஜங் மியூசியம், சார்மினார், ராமானுஜர் சமத்துவ சிலை, கோல்கொண்டா கோட்டை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்.

    பின்னர் வருகிற 24-ந்தேதி சீரடி சென்று சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்கின்றனர். மறுநாள் சனிசிங்னாபூர் சென்று, நாசிக்ந கரில் திரியம்பகேஷ்வர், பஞ்சவடி தரிசனம் செய்கின்றனர். வருகிற 27-ந் தேதி பண்டரிபுரம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி தரிசனம், 28-ந் தேதி மந்திராலயம் ராகவேந்திரர் தரிசனம், 29-ந் தேதி சுற்றுலா முடிவடைகிறது.

    ஆன்மீக ரெயில் சுற்றுலாவில் தங்குமிடம், உணவு, உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் வசதிக்ற்பகே ரூ.30 ஆயிரம், ரூ. 24 ஆயிரம், ரூ. 16 ஆயிரத்து 900 ஆகிய 3 வகைகளில் கட்டணங்களில் பயணம் செய்யலாம்.

    2-க்கும் மேற்பட்டோர் குடும்பமாக செல்லும் போது கட்டணம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த சுற்றுலாவுக்கு www.ularail.com இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம், அல்லது 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ஆடி மாதத்தில் அம்மன் கோவில் தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
    • காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ஆன்மிக சுற்றுலா இரவு 7.30 மணிக்கு நிறைவடையும்.

    ஆடி மாதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தது. இதையடுத்து சென்னை மற்றும் மாநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் பக்தர்கள் வீடுகளில் கூழ் தயாரித்து அம்மனுக்கு படைத்து பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

    தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் இந்த மாதத்தில் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து அம்மன் கோவில் தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.

    மாங்காடு, திருவேற்காடு, திருமுல்லைவாயல், புட்டலூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், பெரிய பாளையம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ஆன்மிக சுற்றுலா இரவு 7.30 மணிக்கு நிறைவடையும். மதியம் உணவு மாங்காடு அம்மன் கோவில் மற்றும் பெரிய பாளையம் அம்மன் கோவில்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    அம்மன் கோவில்களுக்கு ஒரே நாளில் அழைத்து செல்லப்படும் திட்டத்தில் பக்தர்கள் குவிகிறார்கள். 2 வகையான அம்மன் கோவில் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.

    சென்னை-1 சுற்றுலா திட்டத்திற்கு ரூ.900, சென்னை-2 திட்டத்திற்கு ரூ.700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்படும் பக்தர்கள் சிறப்பு தரிசனத்தின் கீழ் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுலா செல்லும் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 நாட்கள் அம்மன் கோவில் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

    அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆன்லைனில் முன்பதிவு வேகமாக நடைபெறுவதால் இத்திட்டம் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.

    கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருச்செங்கோடு:

    சீனா - நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு உள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபடுவார்கள். இங்கு செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 தமிழர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைலாய மானசரோவருக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். சிமிகோட் என்ற இடத்தில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு சென்ற தமிழக பக்தர்கள் உள்பட அனைவரும் ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சுற்றுலா யாத்திரை சென்றவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியின் மேலாண்மை இயக்குநர்களில் ஒருவரான குணசேகரன் என்பவரும் ஆவார்.

    இது குறித்து அவரது மகன் வெற்றிச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது தந்தை கடந்த 23-ந்தேதி கைலாய மலையில் உள்ள மானசரோவருக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். இன்று அவர் ஊருக்கு வர வேண்டும்.

    ஆனால், இந்தியா- சீனா எல்லையில் உள்ள சிமிகோட் பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை, பனிப்பொழிவு போன்றவை காரணமாக எனது தந்தை உள்பட பல தமிழர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மோசமான வானிலையால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் கடந்த 5-நாட்களாக உணவு, மருத்துவ வசதி என எந்த வசதிகளும் இல்லாமல் இருக்கிறார்கள். எனது தந்தையிடம் இது பற்றி செல்போன் மூலமாக கேட்டறிந்தேன். அவர் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தால் தான் எங்களை மீட்க முடியும். சிறிய ரக விமானம் வந்து செல்வதால் பெரும்பாலான பயணிகள் செல்ல முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு எனது தந்தை உள்பட அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் குணசேகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், விரைவில் ஊர் திரும்பி விடுவதாகவும் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர்.

    நேபாள நாட்டின் மலைப் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாகவும், நிலச்சரிவு காரணமாகவும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநில பக்தர்கள் சிக்கினார்கள். அவர்கள் இந்திய தூதரகம் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு தேவையான உணவுகள், தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
    ×