search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priya"

    • சமீபத்தில் நடித்து வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ’கண்ட 'கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார்

    விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார்.

    தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.

    அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.

    ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.

    தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாணி ராணி, பிரியமான தோழி போன்ற தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் ஒ.என் ரத்தினம்.
    • இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி போன்ற தொலைக்காட்சி தொடரை எடுத்து முன்னணி சீரியல் இயக்குனர் பட்டியலில் இருப்பவர் இயக்குனர் ஒ.என் ரத்தினம். இவர் தற்போது செவ்வந்தி என்ற தொடரை இயக்கி வருகிறார். இவர் சென்னை, வளசரவாக்கம், அன்பு நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

    பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரையும் தாத்தா வீட்டுக்கு பொள்ளாச்சிக்கு அனுப்பியிருக்கின்றனர். ரத்னமும் அவரது மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் கணவன் மனைவி இடையில் வாக்குவாதம் நடந்ததாகத் கூறப்படுகிறது. தாத்தா வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய மகன்களை அழைத்து வர ரத்னம் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து பிரியாவின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஒ.என் ரத்தினம் மற்றும் பிரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமீபத்தில் அட்லீ சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    குழந்தையுடன் அட்லீ -பிரியா

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ, நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அட்லீ -பிரியா தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை சமூக வலைதளத்தின் வாயிலாக அறிவித்துள்ளனர். அதன்படி, இவர்கள் குழந்தைக்கு 'மீர்' என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.


    • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லீ, நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    அட்லீ - பிரியா

    அட்லீ - பிரியா

    இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

     

    அட்லீ - விஜய் - பிரியா

    அட்லீ - விஜய் - பிரியா

    இந்நிலையில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ.
    • இவர் நடிகை பிரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அட்லீ - பிரியா

    இவர் கடந்த 2014- ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    ×