search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியா"

    • சமீபத்தில் நடித்து வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ’கண்ட 'கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார்

    விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார்.

    தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.

    அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.

    ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.

    தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும்.
    • இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை குவித்தது ஜவான்.

     அட்லீ குமார் தனது 19வது வயதில் சங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    இதைஅடுத்து, ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    புதுடெல்லியில் நேற்று 'NDTV-ன் இந்தியன் ஆஃப் தி இயர்' விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் ஜவான் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருதை அட்லீ வென்றார். மத்திய அமைச்சரான ஹர்தீப் புரி அட்லீக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த விழாவில் ஜவான் படம் ஷாருக்கனை வைத்து இயக்க தோன்றியது ஏன் என்ற கேள்விக்கு," ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய நடிகர். "க்ளோபல் ஐகான்" அவரை வைத்து சமூக கருத்து நிறைந்த ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தேன்" என்றார் அட்லீ.

    பின் அட்லீ 2019 ஆம் ஆண்டில் ஷாருக்கானை சந்தித்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார்.

    "நானும் ஷாருக்கான் சாரும் 2019 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு சென்றோம். சென்னை சூப்பர் கிங்க்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைப்பெற்றது. அப்போது, நானும் ஷாருக்கான் சாரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்கள் சில பேர் மட்டும்தான்.

    அதை விமர்சித்தவர்கள் தான் நிறைய பேர். ஷாருக்கானுடன் சேர்ந்து எப்படி இவனால் படம் எடுக்க முடியும்? இவன் சரியானவனா, அவர் முன்னாடி நிற்கும் தகுதி இவனுக்கு இருக்கா ? என பலப்பேர் விமர்சித்தனர். அவர்களுக்கான பதில் தான் இந்த விருது. அனைத்து ஹேட்டர்ஸ்க்கும் நன்றி" என தெரிவித்தார்.

    மேலும்," நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும். யாருக்காகவும் உங்கள் கனவை விட்டு கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நோக்கி பயணியுங்கள்" என்றார் அட்லீ.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மண்டலம்-1-க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
    • கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயன் அடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளைகளையும் பொருட்டு, "மக்களைத் தேடி மேயர்" திட்டம் 3.5.2023 அன்று மண்டலம்-5-ல் தொடங்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், 31.5.2023 அன்று மண்டலம்-6-லும், 5.7.2023 அன்று மண்டலம்-13-லும் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் 10.8.2023 அன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா மண்டலம்-1-க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

    எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-1க்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில் வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயன் அடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாணி ராணி, பிரியமான தோழி போன்ற தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் ஒ.என் ரத்தினம்.
    • இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி போன்ற தொலைக்காட்சி தொடரை எடுத்து முன்னணி சீரியல் இயக்குனர் பட்டியலில் இருப்பவர் இயக்குனர் ஒ.என் ரத்தினம். இவர் தற்போது செவ்வந்தி என்ற தொடரை இயக்கி வருகிறார். இவர் சென்னை, வளசரவாக்கம், அன்பு நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

    பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரையும் தாத்தா வீட்டுக்கு பொள்ளாச்சிக்கு அனுப்பியிருக்கின்றனர். ரத்னமும் அவரது மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் கணவன் மனைவி இடையில் வாக்குவாதம் நடந்ததாகத் கூறப்படுகிறது. தாத்தா வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய மகன்களை அழைத்து வர ரத்னம் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து பிரியாவின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஒ.என் ரத்தினம் மற்றும் பிரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமீபத்தில் அட்லீ சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    குழந்தையுடன் அட்லீ -பிரியா

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ, நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அட்லீ -பிரியா தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை சமூக வலைதளத்தின் வாயிலாக அறிவித்துள்ளனர். அதன்படி, இவர்கள் குழந்தைக்கு 'மீர்' என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.


    • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லீ, நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    அட்லீ - பிரியா

    அட்லீ - பிரியா

    இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

     

    அட்லீ - விஜய் - பிரியா

    அட்லீ - விஜய் - பிரியா

    இந்நிலையில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ.
    • இவர் நடிகை பிரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அட்லீ - பிரியா

    இவர் கடந்த 2014- ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    ×