search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nail"

    • சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார்.
    • ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் (வயது 32) என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனை அறிந்த ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் வயிற்று வலி குறையவில்லை.

    இதையடுத்து முகமது ஷேக்கை ஐதராபாத்தில் உள்ள காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் முகமது ஷேக் வயிற்றை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.

    இதில் முகமது ஷேக்கின் வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இரப்பை குடல் துறை தலைவர் டாக்டர் ஷ்ரவன் குமார் தலைமையிலான டாக்டர்கள் முகமது ஷேக் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் 45 நிமிடங்களில் 5 அங்குலம் நீளமுள்ள 9 ஆணிகளை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து கைதியிடம் விசாரித்த போது அவர் தற்கொலை செய்துவதற்காக ஆணிகளை விழுங்கியதாக தெரிவித்தார்.

    • கைசெலவுக்கு பணம் இல்லாததால் திருடியது அம்பலம்
    • ஆணியின் மதிப்பு ரூ.15 ஆயிரம்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பாக்கத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய நிலங்களில் பாசனத்திற்காக திறந்துவிடப்படும், அவ்வாறு ஏரியில் உள்ள மதகில் திருகுமுறை ஆணியை திறந்தால் அதிலிருந்து பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும். இந்த திருகுமுறை ஆணியை மர்மநபர்கள் சில நாட்களுக்கு முன்பாக திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கிளியனூர் போலீசார் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் காட்ரா ம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வெங்கடேசன் மகன் மதியரசன் (வயது 24) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் திருகுமுறை ஆணியை திருடிச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், கைச்செலவுக்கு பணம் இல்லாததால் இதனை திருடிச் சென்று பழைய இரும்பு கடையில் போட்டதாகவும், அந்த பணத்தை செலவு செய்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து அவரை கைது செய்த கிளியனூர் போலீசார், திருடிச் சென்ற திருகுமுறை ஆணியை எங்கு விற்பனை செய்தார். இந்த திருட்டு சம்பவத்தில் அவருடன் வேறு யாரேணும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப்போன திருகுமுறை ஆணியின் மதிப்பு ரூ.15 ஆயிரம் என பொதுப் பணித்து றை அதிகாரிகள் தெரிவி த்தனர்.

    • விற்பனைக்கு வைத்திருந்த 3 சிக்கன் ரோல் 150 கிராம், பால்கோவா 5 மற்றும் 2 கிலோ லேபிள் இல்லாத சிப்ஸ் காரசேவு உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
    • உணவு மாதிரி பரிசோதனை முடிவின் அடிப்படையில் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேலம்:

    சேலம் நெத்தி மேட்டில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே தனியார் பேக்கரி ஒன்று உள்ளது . அங்கு நேற்று முன்தினம் வாடிக்கையாளர் தீபக் சரவணன் ஒரு வெஜ் ரோல் வாங்கினார் .

    அதில் துருப்பிடித்த ஆணி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதேபோல சில நாளுக்கு முன் ஒரு வாடிக்கையாளர் சுரேஷ் என்பவர் பால்கோவா வாங்கினார். அதில் பூஞ்சான் பிடித்து கெட்டு போய் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்தது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆரோக்கிய பிரபு, சுருளி ஆகியோர் அந்த பேக்கரியில் ஆய்வு செய்தனர். உணவு மாதிரி எடுத்து உடையாபட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வுக் ஆய்வகத்திற்கு அனுப்பினார் .

    விற்பனைக்கு வைத்திருந்த 3 சிக்கன் ரோல் 150 கிராம், பால்கோவா 5 மற்றும் 2 கிலோ லேபிள் இல்லாத சிப்ஸ் காரசேவு உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இது குறித்து உணவுத்துறை அலுவலர்கள் கூறுகையில் உணவு மாதிரி பரிசோதனை முடிவின் அடிப்படையில் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பால்கோவா வாங்கியதை பிரித்து விட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். இதனால் புகார்தாரர் அதை வாங்கியது? எப்போது சாப்பிட எடுத்தது எப்போது? என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர்.
    நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர்.

    நகங்களின் நுனிப்பகுதியில் பலவிதமான வண்ணங்களில் பல டிசைன்களில் நெயில் ஆர்ட் செய்யலாம். நெயில் ஆர்ட் செய்வதற்கு விசேஷமான நெயில் பாலிஷ் பயன்படுத்துகின்றார்கள். ஏனெனில், சாதாரண நெயில் பாலிஷ் மீது ஓவியங்கள் வரைவதோ அலங்கார வேலைப்பாடுகள் செய்வதோ கடினமானது. தற்பொழுது அறிமுகமாகியிருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் நிரந்தரமானது. ஜெல் பூசிய நகங்களை ‘யு.வி” லைட் எனப்படும் ஊதாக் கதிர்களின் கீழ் வைக்கின்றார்கள். பளபளப்பான கண்களைக் கவரும் தோற்றத்தால் பார்ப்போரை கவரச் செய்யலாம்.

    ஸ்டிக்கர் டிசைன் நெயில் ஆர்ட்டுகள் அவசரத்துக்கு பயன்படுத்தப்படுவது. இரண்டே நிமிடங்களில் நகங்களை அழகாக்கிக் கொள்ளலாம். பல வடிவங்கள் கொண்ட நெயில் ஆர்ட் ஸ்டிக்கர்கள் எளிதாகக் கடையில் பெற்றுக் கொள்ளலாம். திடீரென விருந்து வைபவங்களுக்கு அழைப்பு வந்தால் உடனுக்குடன் உங்கள் கைவிரல்களின் அழகை மெருகுபடுத்துவதற்குக் கைக்கொடுக்கக் கூடியவை இந்த நெயில் ஸ்டிக்கர்ஸ். முன் கூட்டியே இவற்றை வாங்கி வைத்திருந்தால் இரண்டே நிமிடத்தில் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு தயாராகி விடலாம்.

    நகங்களும் ஒரு அட்ராக்டிவ் ஆன உறுப்பு தான். வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் சிவப்பு, மெரூன், கருப்பு நிறங்களில் நகப்பூச்சுகள் பயன்படுத்தினால்
    அவ்வளவு அழகாக இருக்கும். நாம் அணியும் உடைநிறத்துக்கு ஏற்ப நெயில் ஆர்ட்டுகள் இருந்தால் சொல்லவே வேண்டாம் உங்கள் முகத்தைக்காட்டிலும்
    நகங்கள் அட்ராக்டிவ் ஆகத்தெரியும். கருப்பு அல்லது மாநிறத்தில் இருப்பவர்களும் நகங்களைப் பராமரித்து அழகைக் கூட்டிக் கொள்ளலாம். 
    ×