search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Anbil Mahesh"

    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
    • தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விருது வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் 380 பேருக்கும் விருதுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி விழா பேருரையாற்றுகிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.

    பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசுகிறார். பள்ளி கல்வி துறை அரசு செயலாளர் குமரகுருபரன் திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை உரையாற்றுகிறார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார் சின்ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றுகிறார்கள். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறுகிறார்.

    இந்த விழாவில் விருது பெறுபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் தங்கும் இடம், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது.
    • சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ப்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

    அதிகாரிகளுடன் இன்று ஆன்லைனில் ஆய்வுக் கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    • மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை.
    • அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து கண்காணிக்க வலியுறுத்தல்.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், பள்ளிகள் திறப்பு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பேசினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகளில் பின்பற்றுகிறார்களா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. தமிழ்நாட்டில் இன்று சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் வெளியில் சதம் அடித்தது.

    வானிலை மையத்தின் அறிக்கையின்படி ஜூன் 7ம் தேதிக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ளதால் இதுகுறித்து விரைவில் ஆலோசனை நடத்தியப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்  தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறிவுறுத்தினார்

    ஆறுமுகநேரி:

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில் நம் பள்ளி நம் பெருமை என்ற ஆய்வுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதன்படி திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள 6-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 1 வகுப்பு மாணவி களிடம் பாடங்கள் தொடர்பான வினாக்களை கேட்டறிந்தார்.பின்னர் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை தனித்தனியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மேலும் மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறி வுறுத்தினார். மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வசதிக்காக பள்ளியின் அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, பள்ளித் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஆதவா தொண்டு நிறு வன தலைவருமான பால குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மொழியை காக்க மொழிப்போரும் எங்களால் நடத்தமுடியும் என்பதை பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது
    • தமிழக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்கள் துறைக்கு பெருமையாக உள்ளது.

    நெல்லை:

    பொருநை இலக்கிய திருவிழாவில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-

    மொழியை காக்க மொழிப்போரும் எங்களால் நடத்தமுடியும் என்பதை பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    இந்தியாவிற்கே முன்னோ டியான திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம். காணி மலைக்கிராமங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

    தமிழ சாகித்ய அகாடமி அமைப்பது குறித்த கோரிக்கைளை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்கள் துறைக்கு பெருமையாக உள்ளது.

    குழந்தைகளுக்கு இலக்கியத்தை கொண்டு செல்வது என்பது நமது கடமையாக உள்ளது. அடிப்படை வாசிப்பை கூட பிற்போக்குவாதிகளின் பேராயுதமாக மாற்ற நினைக்கிறார்கள். முதல்-அமைச்சர் எழுத்தா ளர்களுக்கும், எழுத்துக்கும் கொடுக்கும் முக்கியதுவத்தின் அடையா ளமே கனவு இல்ல திட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும்.
    • ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடி பாடம் நடத்த ஏற்பாடு.

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் விதமாக நாளை( புதன்கிழமை) முதல் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்கின்ற முடிவை எடுத்து இருக்கிறோம். அந்த வகையில் 9, 10, 11, 12 வகுப்புகள் மிக மிக முக்கியமான வகுப்புகள்.

    உடனடியாக Board Exam-க்கு அவர்கள் தயார் செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அவர்களுக்கு ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடியாக பாடம் நடத்துவதற்கு தேவைப்படுகின்ற வகுப்பறைகளை தயார் செய்திட முடிவெடுத்திருக்கின்றோம்.

    கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடைய சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டது. மெட்ரிக் பொறுத்தவரை, எல்லா சான்றிதழ்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.

    இருந்தாலும், அந்தந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் தனியாக ஒரு Special DEO போட்டிருக்கிறோம். இவர்களெல்லாம் அமர்ந்து, யார், யாருக்கெல்லாம் duplicate copy இல்லையோ, அவர்களையெல்லாம் வரவழைத்து, யார், யாருக்கெல்லாம் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றதோ, அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று காலை சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
    • புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார்.

    நெல்லை:

    தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று இரவு தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.

    உற்சாக வரவேற்பு

    தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூரில் தங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று காலை சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

    அதனை தொடர்ந்து அங்கு பொன்விழா நுழைவுவாயிலை திறந்து வைத்த அவர், பொன்விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார். முன்னதாக அவருக்கு சிவகிரி இரட்டை பாலத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முப்பெரும் விழா

    பின்னர் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சிக்கு கமிட்டி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாட்டாண்மைகள் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாழ்த்துரை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலை குமார், ராஜா, தனுஷ்குமார் எம்.பி., மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×