search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "visits"

    • அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று காலை சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
    • புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார்.

    நெல்லை:

    தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று இரவு தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.

    உற்சாக வரவேற்பு

    தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூரில் தங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று காலை சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

    அதனை தொடர்ந்து அங்கு பொன்விழா நுழைவுவாயிலை திறந்து வைத்த அவர், பொன்விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார். முன்னதாக அவருக்கு சிவகிரி இரட்டை பாலத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முப்பெரும் விழா

    பின்னர் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சிக்கு கமிட்டி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாட்டாண்மைகள் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாழ்த்துரை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலை குமார், ராஜா, தனுஷ்குமார் எம்.பி., மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மோடி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பின்போது 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #NarendraModi #Singapore #MOU
    சிங்கப்பூர்:

    இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த 29-ந்தேதி புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் சிங்கப்பூர் போய் சேர்ந்தார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பர நலன்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நட்புறவு கடற்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் அவர் கள் மறுஆய்வு செய்தனர்.

    இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே கடற்படை தளவாட ஒத்துழைப்பு உள்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதில், ‘வருகிற நாட்களில் சைபர் பாதுகாப்பு, பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பே பிரதானமாக இருக்கும்’ என பிரதமர் மோடி கூறியிருந்தார்.



    இதைப்போல இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாகி இருப்பதாக பாராட்டியுள்ள லூங், இரு நாட்டு கூட்டு கடற்பயிற்சியின் 25-வது ஆண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த சந்திப்பின் போது 6-வது நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிற்பம் ஒன்றை சிங்கப்பூர் பிரதமருக்கு மோடி பரிசளித்தார். இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்தமதம் பரவியதை நினைவுகூரும் வகையில் இந்த பரிசை அவர் வழங்கினார்.



    பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிங்கப்பூர் முன்னாள் தூதர் டாமி கோவுக்கு (வயது 80) இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார். அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுக்கான சிங்கப்பூர் தூதராக பணியாற்றி இருக்கும் இவர், அமெரிக்கா-சிங்கப்பூர் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா ஆசியான் கூட்டமைப்பின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு இந்த விருதை அறிவித்து இருந்தது.   #NarendraModi #Singapore #MOU

    ×