search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasparov"

    • காஸ்பரோவ் கிண்டலாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
    • சவால் விடுவதற்கு முன்பு ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 2 தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் களத்தில் நிற்கும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிர தேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ராகுல்காந்திக்கு பிடித்த செஸ் வீரர் ரஷியாவை சேர்ந்த கேரி காஸ்பரோவ் ஆவார். முன்னாள் உலக சாம்பியனான அவர் 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது ராகுல்காந்தி தனது செல்போனில் செஸ் விளையாடும் வீடியோவை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. வீடியோவில் காஸ்பரோவ் தனக்கு விருப்பமான செஸ் வீரர் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் விளையாட்டுக்கும், அரசியலுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை குறிப்பிட்டார். அந்த வீடியோவில் அரசியல் வாதிகளில் தன்னை சிறந்த செஸ் வீரர் என்று ராகுல்காந்தி தெரிவித்து இருந்தார்.

    ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ராகுல் காந்தியின் செஸ் ஆர்வம் குறித்து காஸ்பரோவ் கிண்டலாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பாரம்பரியமான நீங்கள் (ராகுல்காந்தி) முதல் இடத்துக்கு சவால் விடுவதற்கு முன்பு ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு காஸ்பரோவ் கிண்டலாக தெரிவித்தார். அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்தார். தனது நாட்டை விட்டு வெளியேறி அவர் குரோஷியாவில் வசிக்கிறார்.

     ராகுல்காந்தி பற்றி கிண்டலாக காஸ்பரோவ் தெரிவித்த கருத்து வைரலானது. இதை தொடர்ந்து காஸ்பரோவ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எனது சிறிய நகைச்சுவை இந்திய அரசியலில் நிபுணத்துவம் பெறாது என்று நான் நம்புகிறேன்.

    ஆனால் 1000 கண்கள் கொண்ட அனைத்தையும் பார்க்கும் அசுரன் என்று நான் ஒருமுறை விவரித்தது போல ஒரு அரசியல்வாதி என், அன்பான விளையாட்டில் ஈடுபடுவதை என்னால் பார்க்க தவற முடியாது.

    இவ்வாறு காஸ்பரோவ் கூறியுள்ளார்.

    சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான குகேஷ் சமீபத்தில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக போட்டிக்கு தேர்வு பெற்ற போது குகேசை இந்திய பூகம்பம் என்று காஸ்பரோவ் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், இரு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #HeavyRain
    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். அதன்பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.



    தொடர்மழை காரணமாக சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #SouthEastMonsoon

    ×