search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KamalNath"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கமல்நாத், தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய் ஸ்ரீ ராம் கோடியை இன்று அகற்றியுள்ளனர்.
    • கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார்.

    பாஜகவில் சேரவுள்ளதாக கூறப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத், தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய் ஸ்ரீ ராம் கோடியை இன்று அகற்றியுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார்.

    இந்நிலையில், கமல்நாத்தும் அவரது மகனான நகுல் கமல்நாத்தும் பாஜகவுக்கு தாவ போவதாக தகவல்கள் வெளியாகின. மத்திய பிரதேச மாநில அரசியலில் பரபரப்பான செய்தியாக மாறியது.

    இதற்கிடையே கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது வீட்டில் ஏற்றப்பட்டிருந்த ஜெய்ஸ்ரீ ராம் கொடியை கமல்நாத் அகற்றியுள்ளனர்.

    • மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் தீப்போல பரவின.
    • லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் தீப்போல பரவின. ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரது மகன் நகுல் கமல்நாத். இவர்கள் இருவரும் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானது. மத்திய பிரதேச மாநில அரசியலில் கடந்த சில தினங்களாக இதுதான் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

    தற்போது கமல்நாத்தைப் போல மணீஷ் திவாரியும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.அத்துடன் லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகமோ, இது அப்பட்டமான வதந்தி. நேற்று இரவு கூட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது இல்லத்திலேயே மணீஷ் திவாரி தங்கியிருந்தார் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.

    • மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அங்கு பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கரேலி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் எங்கு சென்றாலும் மக்கள் சிவராஜ் சிங்குக்கு அன்பான பிரியாவிடை கொடுக்க முடிவு செய்திருப்பதைக் காண்கிறேன்.

    சிவராஜ் சிங் 22,000 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 5 மாதங்களில் அவரது அறிவிப்பு மெஷின் இரட்டிப்பு வேகத்தில் இயங்கியது.

    ஆனால் அறிவிப்பு மெஷினின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும் என தெரிவித்தார்.

    மத்திய பிரதேசத்தில் பசுவைக் கொன்றதாக பிடிபட்ட 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். #KamalNath #MPGovernment #CowslaughterNSA
    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டம், மோகாட் பகுதியில் கடந்த ஜனவரி 31 அன்று பசுக்கள் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் குழுவாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியை சேர்ந்த  சிலர் இப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், குற்றவாளிகள் கர்கலி கிராமத்தைச் சேர்ந்த  ராஜு , ஷக்கீல் மற்றும் அசார் என கண்டறிந்தனர்.  இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 அன்று போலீசார் அவர்களைக் கைது செய்ய முற்படும்போது மூவரும்  தப்பி ஓடினர். இதில் ராஜூ மற்றும் ஷக்கீலை  போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

    அசார் என்பவர் தப்பினார். இதனையடுத்து கடந்த திங்களன்று போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு அசாரையும் கைது செய்தனர். பின்னர் உடனடியாக இவர்களின் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசாரால்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதன்பின்னர், அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர், 3 பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, மூன்று பேரின் மீதும் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

    மத்திய பிரதேசத்தில் கடந்த 2016ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது பசுவை படுகொலை செய்வோரின் மீது இச்சட்டம் பாய்ந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் பசுவதை குற்றவாளிகள் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #KamalNath #MPGovernment #CowslaughterNSA
    ×